Sunday 16 August 2009

இது சுதந்திர தினமா?


சுதந்திர தினமென்றால் நாட்டின் அனைத்து மக்களும் ஒன்று திரண்டு சந்தோஷமாக கொண்டாடும் ஒரு தினமாகும். ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை முழுமையாக கைப்பற்றியதை கொண்டாடும் போது எப்படி சந்தோஷம் இருக்க வேண்டும்.

சுதந்திர தின நிகழ்வென்கிற போது நாட்டின் முக்கிய பிரமுகர்கள் நாட்டின் முக்கிய இடத்தில் சேர்ந்து தேசிய கொடியை ஏற்றி, இராணுவ அணி வகுப்பு, கடற்படையினரின் அணி வகுப்பு, விமானப்படையினரின் சாதசங்கள் உட்பட மேலும் பல அம்சங்கள் இடம்பெற வேண்டும் அல்லா!.

அது தானே சுதந்திர தினத்திற்கு நாம் கொடுக்கும் மரியாதை!

ஆனால் தற்போது சுதந்திர தினம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையே மாற்றி விட்டார்கள்.

இப்போது எப்படி தெரியுமா சுதந்திர தினம் கொண்டாடுகின்றார்கள். ஒரு கட்டடத்திற்குள் மாத்திரம்.

நாட்டு மக்களுக்கு தெரியாது நாட்டின் எந்த பகுதியில் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள் என.

இது நாட்டிற்கு கிடைத்த சுதந்திரமா?

இதற்கான காரணம் தீவிரவாத அச்சுறுத்தல். ஏன்? இப்படி,

எந்த நாட்டை கூறுகிறேன் தெரியுமா? வேறு எந்த நாட்டை கடந்த 14ஆம் திகதி தனது 62ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய பாகிஸ்தானை தான்!



பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் அன்றைய தினம் சுதந்திர தினத்தை கட்டடத்திற்குள் கொண்டாடியுள்ளனர்.

நாட்டு மக்களுக்கு தெரியாது எங்கே சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றனவென.

இது நாட்டிற்கு கிடைத்த சுதந்திரமா?

பாதுகாப்புக்கள் இருக்க வேண்டும், காரணம் நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் அல்லவா!

இப்படியான சுதந்திர தினத்தை பாகிஸ்தான் மட்டுமன்றி இன்னும் பல நாடுகள் கொண்டாடி வருகின்றன.



ஏன் இந்தியா தனது 63ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியது.

சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறும் இடத்திற்கு மேல் சுமார் 7 மணி நேரம் விமானங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதுவும் சுதந்திர தினமா?

நான் இதை நாட்டின் குறையாக சொல்லவில்லை. இதுவரை எமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை எனதான் கூறுகிறேன்!

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஒவ்வொரு நிமிடமும் நெருப்பின் மேல் நடப்பது போல இருக்கு.

எங்கே எப்போது என்ன நடக்கும் என தெரியாது பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்!

உலகில் இன்று தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சில தீவிரவாத அமைப்புக்கள் காரணமே இன்றி செயற்பட்டு வருகின்றன.

இவ்வாறு உலகில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாத அமைப்புக்களில் முதன்மையில் தலிபான்கள் உள்ளனர்.

அவர்களை முற்றாக அழிக்கும் பட்சத்தில் உலகில் தீவிரவாதம் என்ற சொல்லை ஓரளவாவது மறக்க முடியும்.

இது நாட்டிற்கான சுதந்திரமல்ல, உலகிற்கான சுதந்திரம். ஒழிக்க ஒன்றுபடுவோம்!

0 comments: