Saturday 15 August 2009

ஷாருகான் கைது!


இந்திய - பொலிவூட் திரைப்பட முன்னணி நடிகர் ஷாருகான் இன்று அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அமெரிக்க – நியூஜேர்சி – நெவாக் விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு சுமார் 2 மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் இவர் தன்னை பற்றி தகவல்களை பாதுகாப்பு பிரிவினரிடம் கூறி, அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்திடம் கேட்குமாறும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட அமெரிக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர், இந்த தகவல்களை அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

பின்னர் அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம் தலையிட்டு அவரை விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதற்காக இவரை கைது செய்துள்ளனர் தெரியுமா, பெயர் தான் காரணம்.

ஷாருகான் அதில் வரும் கான் என்ற பெயர் தான் இதற்கெல்லாம் காரணம்.

இவர் ஒரு தீவிரவாதியான இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், கடந்த 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் முக்கிய 50 வெளிநாட்டு பிரஜைகளில் ஷாருகானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: