Thursday 21 April 2011

ஈழத் தமிழ் யுவதியின் சோகக்குரல்

Friday 8 April 2011

இலங்கை கிரிக்கெட் சிதைந்தமைக்கான காரணம் யார்?

உலகக் கிண்ணப் போட்டிகள் நிறைவடைந்து, இலங்கை - இந்திய ரசிகர்களுக்கு இடையிலான சண்டைகள் நிறைவடைய முன்னதாகவே இலங்கை கிரிக்கெட் பல துண்டுகளாக உடைந்து நொருங்கி விட்டது.

இதற்கான காரணத்தை பலர் பல்வேறு கோணங்களில் பார்த்தாலும், அதற்கான காரணம் அரசியலின் ஒரு அங்கமாகவே காணப்படுகின்றது என்றால் அது தப்பில்லை என நான் நினைக்கின்றேன்.



இலங்கை - இந்திய அணிகளுக்கு இடையிலான, அதுவும் வரலாற்றில் முதன் முறையாக உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை இந்திய அணிகள் மோதின.

இந்த போட்டியை சில ஊடகங்கள் இராமர் - இராவணன் யுத்தம் எனவும் வர்ணித்திருந்தனர்.

இப்படிப்பட்ட ஒரு எதிர்பார்ப்புள்ள போட்டியை ஆசிய நாடுகள் மட்டுமன்றி உலகமே எதிர்பார்த்திருந்தது.

இந்நிலையில் இந்திய - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியையும் இப்படியே தான் எதிர்பார்த்தார்கள்.

அது ஒரு அரசியல் நோக்கமான விளையாட்டாக இருந்த நிலையில், இந்தியாவினால் பாகிஸ்தானிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.



எனினும், இலங்கை - இந்திய போட்டிக்கு இந்தியாவினால் இலங்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் போட்டி ஆரம்பமாகியது. இந்த போட்டியை காண இந்திய அரசியல்வாதிகள் மாத்திரமின்றி, உலகமே ஏற்றுக் கொண்ட பல முன்னணி நடிகர்களும் வருகைத் தந்திருந்தனர்.

போட்டியில் இலங்கை அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இந்த போட்டி ஆரம்பமாகிய போதே இலங்கை அணி பின்னடைவை சந்தித்து வந்த நிலையில் இறுதியில் ஒரு நிலையை இடத்தை பிடித்தது.

எனினும், இந்தியாவை அவர்களால் வீழ்த்த முடியவில்லை.



எவ்வாறாயினும், போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஒரு அரசியல்வாதியை கூட போட்டிக்கான கிண்ணங்களை வழங்க அழைப்பு விடுக்கப்படவில்லை.

அவ்வாறு இருக்க கிரிக்கெட் போட்டிகள் நிறைவடைந்து அடுத்த நாளே காலை இலங்கை அணி தாய் நாட்டை வந்தடைந்தது.

இதன்பின்னர் நடந்தது என்னவென சிலர் தெரிந்திருந்த போதிலும் அதற்கான பதிலை இலங்கை கிரிக்கெட் தெரிவு குழுவின் முன்னாள் தலைவர் அரவிந்த டி சில்வா மறைமுகமாக தாம் விளகுவதற்கான காரணம் யார் என தெரிவித்திருந்தார்.



இப்போது இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் ஒரு "?" அமைந்து விட்டது.

என்னால் வெளியிட முடிந்த கருத்துக்கள் இவ்வளவு தான்..... மேலதிக தகவல்களை சரியாக தேடிக்கொள்ளுங்கள்.......