தொழிநுட்ப வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் வளர்ந்துவரும் ஓர் விடயமாகும்.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் உலகம் இப்போது தொழில்நுட்பத்தின் கீழேயே உள்ளது.
இந்த நிலையில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியன முக்கிய இடங்களை வகிக்கின்றன.
இந்த இரண்டுமே தற்போது ஒன்றிணைந்து செயற்படுவதாகவும் கூறலாம்.
ஒரே வசனத்தில் சொல்ல வேண்டுமானால், “உலகம் கையில்”.
எதற்கு இவ்வளவு விளக்கம் என நினைக்கிறீங்களா?
சரி சொல்லுறேன்.
முன்னர் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்படும் வீடியோ காட்சிகளை வயர்கள் அல்லது புலுடுத் ஊடாக கணனியில் சேமித்து வைத்தோம்.
இவ்வாறு கையடக்கத் தொலைபேசியில் உள்ள வீடியோக்களை கணனியில் சேமிக்க குறைந்தது சுமார் 10 நிமிடங்களாவது எடுத்தது அல்லவா?
ஆனால் இப்போது ஒரு நொடி போதும், கையடக்கத் தொலைபேசி வீடியோக்களை உடனடியாக கணனியில் மட்டுமல்ல உலகமே பார்க்க கூடியவாறு இணையத்தில் ஏற்ற முடியும்.
இதற்கு ஒரு நொடி மாத்திரமே நாம் செலவிட வேண்டியிருக்கும்.
எப்படி? என்பது தானே அடுத்து கேள்வி. இதோ விடை!
நீங்கள் வீடியோவை பதிவு செய்யும் போது உங்கள் கையடக்கத் தொலைபேசியில் GPRS சை செயற்படுத்தி இருப்பதே இதன் முக்கிய அம்சமாகும்.
முதலில் உங்கள் கணனியின் முன் அமர்ந்து என்ற இணையத்தில் உங்களை பதிவு செய்துக் கொள்ளுங்கள்.
நீங்கள், உங்களை பதிவு செய்துக் கொண்ட பின்னர் அடுத்த கட்டமாக கணனி திரையில் உங்கள் கையடக்கத் தொலைபேசியின் இலக்கத்தை பதிவு செய்துக் கொள்ளுங்கள்.
அடுத்த சில நிமிடங்களில் உங்கள் கையடக்கத் தொலைபேசிக்கு ஒரு குறுந்தகவல் (SMS) கிடைக்கப் பெறும்.
அதில் காணப்படும் இணைய முகவரிக்கு உங்கள் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பிரவேசிக்க வேண்டும்.
அப்போது நீங்கள் பிரவேசிக்கும் இணைத்தளம் ஒரு கோப்பை கையடக்கத் தொலைபேசிக்கு பதிவிறக்கம் செய்ய கோறும்.
உடனடியாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் கோப்பானது மென்பொருளாக உங்கள் கையடக்கத் தொலைபேசியில் சேமிக்கப்படும்.
பின்னர் அந்த மென்பொருளின் ஊடாக உள்ளே பிரவேசிக்கும் போது, அங்கே கேட்கப்படும் பாவனையாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
அதையடுத்து ஒரு வீடியோ திரையொன்றை உங்கள் கையடக்கத் தொலைபேசியில் காணக்கூடியதாய் இருக்கும்.
பின்னர் அதனை Options பட்டனை கிளிக் செய்து வரும் மெனுவிலுள்ள broadcast என்ற சொல்லை கிளிக் செய்த உடன் வீடியோ செய்துக் கொள்ளமுடியும்.
அவ்வாறு வீடியோ செய்யப்படும் அனைத்து வீடியோ கோப்புக்களும் அடுத்த நொடியில் இணையத்திலுள்ள உங்கள் கணக்கில் சேமிக்கப்படும்.
எவ்வளவு இலகுவான விடயம். செய்து பாருங்கள்.
செவ்வாய், 9 பிப்ரவரி, 2010
கையடக்கத் தொலைபேசியிலுள்ள வீடியோக்கள் ஒரு நொடியில் இணையத்தில்!...
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:09:00 am 0 கருத்துரைகள்
ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010
ஆங்கில எழுத்துக்கள் 26 – ஒரே வசனத்தில்!
உங்களுக்கு தெரியுமா? ஒரே வசனத்தில் 26 ஆங்கில எழுத்துக்களும் வரும்.
அந்த வசனம் மாத்திரமே இன்றை எமது பதிவு.
இதோ....................
THE QUICK BROWN FOX JUMPS OVER THE LAZY DOG.
எழுத்துக்களை எண்ணி பார்த்து விட்டு, சரியாக இருந்தால் சொல்லவும். பிழையாக இருந்தாலும் சொல்லலாம்.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:29:00 am 2 கருத்துரைகள்
வியாழன், 4 பிப்ரவரி, 2010
.....இலங்கை தமிழர் கையில்.....
இலங்கையின் பெரும்பான்மை சமூகமாக தற்போது சிங்களவர்களே உள்ளனர்.
சிங்களவர்களின் கலை, கலாச்சார, பண்பாடுகள் மற்றும் மொழி பாவனை உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் இலங்கை, சிங்களவர்களை மற்றும் சிங்கள மொழியை நாடிச் செல்ல வேண்டியது அவசியம் என்ற நிலையில் தற்போது உள்ளது.
குறிப்பாக வைபவங்கள், நிகழ்வுகள் போன்றவற்றிலும் முன்னுரிமை சிங்கள பண்பாட்டிற்கே வழங்கப்படுகின்றமை வழக்கமானதொன்றாகும்.
இந்த கலாச்சாரம் ஆரம்ப காலத்திலிருந்தே வந்தது என்று பலர் கூறி வந்தாலும், அது சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டு வந்தவொன்று என்பதை யாராலும் மறைக்கவோ? மறுக்கவோ முடியாது.
எப்படி நாட்டின் பெரும்பான்மை சிங்களவர்களை சார்ந்தது. 
இலங்கையின் தேசிய தலைவர்கள் சுதந்திரத்திற்காக போராட்டங்களை மேற்கொண்டதன் விளைவாக 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இலங்கை சுதந்திரம் பெற்றதை தொடர்ந்து முதலாவது பிரதமராக D.S.சேனாநாயக்கவும், அவரை தொடர்ந்து அவரது மகனாக டட்லி சேனாநாயக்கவும் 1952ஆம் ஆண்டு காலக்கட்டம் வரை பிரதமர்களாக இருந்தனர்.
1956ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் S.W.R.D.பண்டாரநாயக்க பிரதமராக இருந்ததுடன், இலங்கையின் தேசிய மொழியாக சிங்கள மொழி பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த பின்னரே சிங்கள மொழியில் ஆதிக்கம் இலங்கையில் வலுவடைந்துள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன.
அவரது மறைவைத் தொடர்ந்து 1959ஆம் ஆண்டு அவரது பாரியாரான சிறிமாவே பண்டாரநாயக்க பிரதமராக கடமையாற்றினார்.
1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி சிலோன் என அழைக்கப்பட்டு வந்த இலங்கை, ஸ்ரீலங்கா என மாற்றம் பெற்றது. இலங்கையின் தேசிய கொடி மாற்றம் பெற்றதும் இவ்வாண்டிலேயே ஆகும்.
இதன்பின்னரே இலங்கையில் சிங்கள கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், இலங்கை சுதந்திமடைவதற்கு முன்னர் இலங்கையில் பல தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
சிங்களவர்கள் இலங்கையில் முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கிய காரணம் என கூற வேண்டியது தமிழர்களையே!
இதற்கு பல உதாரணங்களையும் குறிப்பிட முடியும்.
இலங்கையில் பழைய தேசிய கொடியும் தமிழர்களின் கலாச்சாரத்திலேயே இருந்தமை குறிப்பிடத்தக்க விடயம்.
இவை இலங்கையின் பழைய தேசிய கொடிகள்.

இப்படியே சிங்கள மொழி வலுவடைந்து, தற்போது இலங்கையின் பெரும்பான்மை என்ற அந்தஸ்தையும் சிங்களவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 7:24:00 am 1 கருத்துரைகள்
வியாழன், 28 ஜனவரி, 2010
மஹிந்த ராஜபக்ஷ எப்படி ஜனாதிபதி ஆனார்?
பல்வேறு கருத்துக்கள் பல்வேறு மோதல்கள் பல்வேறு அழுத்தங்கள் என்ற பலவற்றையும் தாண்டி இன்று மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக பதவியை பெறுப்பேற்பதற்கு பல பாதைகளை கடந்த இன்று ஜனாதிபதியாக தொடர்ந்தும் இருக்க தெரிவாகியுள்ளார்.
1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.
1982ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 30ஆம் திகதி முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.
இதன்படி, இந்த தேர்தலில் 81 லட்சத்து 45 ஆயிரத்து 15 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.
எனினும், இந்த தேர்தலில் 66 லட்சத்து 2 ஆயிரத்து 671 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதுடன், 6 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.
1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.
இந்த தேர்தலில் மொத்தமாக 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 1982ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜே.ஆர். ஜெயவர்தன 34 லட்சத்து 50 ஆயிரத்து 811 வாக்குகளை பெற்று இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
அவரை எதிர்த்துஇலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட எச்.எஸ்.ஆர்.பீ. கோபேகடுவ 25 லட்சத்து 48 ஆயிரத்து 438 வாக்குகளை பெற்றார்.
1988ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.
1988ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி 2ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.
இதன்படி, இந்த தேர்தலில் 93 லட்சத்து 75 ஆயிரத்து 742 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.
எனினும், இந்த தேர்தலில் 51 லட்சத்து 86 ஆயிரத்து 223 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதுடன், 8 ஆயிரத்து 60 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.
1988ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.
இந்த தேர்தலில் மொத்தமாக 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இலங்கையின் 2ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 1988ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் திகதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட ரணசிங்க பிரேமதாஸ 25 லட்சத்து 69 ஆயிரத்து 199 வாக்குகளை பெற்று இலங்கையின் 2ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
அவரை எதிர்த்து இலங்கை சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட சிறிமாவோ பண்டாரநாயக்க 22 லட்சத்து 89 ஆயிரத்து 960 வாக்குகளை பெற்றார்.
நிறைவேற்று அதிகாரமுடைய பதில் ஜனாதிபதி தெரிவு.
இலங்கையின் 2ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ 1993ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்ததை அடுத்து, 1993ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்தாது இலங்கையில் 3ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய பதில் ஜனாதிபதியாக டி.பி.விஜயதுங்க தெரிவு செய்யப்பட்டார்.
1994ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.
1994ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 17ஆம் திகதி 4ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.
இதன்படி, இந்த தேர்தலில் ஒரு கோடியே 9 லட்சத்து 45 ஆயிரத்து 65 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.
எனினும், இந்த தேர்தலில் 77 லட்சத்து 13 ஆயிரத்து 232 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதுடன், 9 ஆயிரத்து 580 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.
1994ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.
இந்த தேர்தலில் மொத்தமாக 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இலங்கையின் 4ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 1994ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் திகதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க 47 லட்சத்து 9 ஆயிரத்து 205 வாக்குகளை பெற்று இலங்கையின் 4ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட வஜிர சிறிமத்தி திஸாநாயக்க 27 லட்சத்து 15 ஆயிரத்து 285 வாக்குகளை பெற்றார்.
1999ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.
1999ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.
இதன்படி, இந்த தேர்தலில் ஒரு கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 200 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.
எனினும், இந்த தேர்தலில் 86 லட்சத்து 35 ஆயிரத்து 290 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதுடன், 9 ஆயிரத்து 912 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.
1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.
இந்த தேர்தலில் மொத்தமாக 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 1999ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் சந்திரகா பண்டாரநாயக்க குமாரதுங்க 43 லட்சத்து 12 ஆயிரத்து 157 வாக்குகளை பெற்று இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தொடர்ந்தும் பதவி வகித்தார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 36 லட்சத்து 2 ஆயிரத்து 748 வாக்குகளை பெற்றார்.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.
2005ஆம் ஆண்டு செப்டெபர் மாதம் 19ஆம் திகதி 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டது.
இதன்படி, இந்த தேர்தலில் ஒரு கோடியே 33 லட்சத்து 27 ஆயிரத்து 160 பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றிருந்தனர்.
எனினும், இந்த தேர்தலில் 98 லட்சத்து 26 ஆயிரத்து 778 பேர் மாத்திரமே வாக்களித்துள்ளதுடன், 10 ஆயிரத்து 748 வாக்களிப்பு நிலையங்களில் இந்த தேர்தல் நடைபெற்றுள்ளது.
2005ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.
இந்த தேர்தலில் மொத்தமாக 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 48 லட்சத்து 87 ஆயிரத்து 152 வாக்குகளை பெற்று இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 47 லட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளை பெற்றார்.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவி காலம் நிறைவடைய இன்னும் இரு ஆண்டுகள் உள்ள நிலையில் 6ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது.
இதன்படி, இந்த தேர்தலில் 1 கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.
எனினும், இந்த தேர்தலில் ஒரு கோடியே 4 லட்சத்து 95 ஆயிரத்து 451 பேர் மாத்திரமே வாக்களித்தனர்.
2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் திகதி காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான திகதி.
இந்த தேர்தலில் மொத்தமாக 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இலங்கையின் 6ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தல் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெற்றது.
இந்த தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ 60 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளை பெற்று இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தொடர்ந்தும் பதவி வகிக்க தகுதிப் பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 41 லட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகளை பெற்றார்.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 8:40:00 am 0 கருத்துரைகள்
வியாழன், 14 ஜனவரி, 2010
பிரசாரத்தில் உலகை வென்றது இலங்கை
இலங்கையில் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் போன்ற ஒரு தேர்தலை பல நாடுகள் சந்தித்திருந்தாலும், இது போன்றதொரு தேர்தலை நிச்சயம் சந்தித்திருக்க மாட்டார்கள் என்றே கூறவேண்டும்.

ஜனாதிபதியின் சார்பாக இருந்த ஒருவரே அவருக்கு எதிராக போட்டியிடுவதே இந்த தேர்தலின் பிரகாசமான விடயம்.
சரி, தலைப்பை பற்றி சற்று பார்ப்போம்.

உலகில் கடந்த காலங்களில் இடம்பெற்ற தேர்தல்களில் பிரசார நடவடிக்கைகள் இருந்த போதிலும், இப்படியான ஒரு பிரசார நடவடிக்கையை நாம் பார்த்ததில்லை. குறிப்பாக கூறினார் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே பிரசார நடவடிக்கைகள் ஆரம்பித்து விட்டன.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது கூட இவ்வாறான தேர்தல் பிரசாரங்கள் இருக்கவில்லை.

இன்று கணனியில் அமர்ந்து இணையத்தை தட்டினால் சர்வதேச இணையத்தளத்திலிருந்து உள்நாட்டு இணையத்தளம் வரை இலங்கை தேர்தல் தொடர்பான பிரசாரங்கள்.
உலகின் முன்னணி அனைத்து இணையத்தளங்களிலும் இலங்கை தேர்தல் வேட்பாளர்களின் பிரசாரங்களே காணக்கூடியதாய் உள்ளது.
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜெனரல் சரத் பொன்சேகா உள்ளிட்ட அனைவரது பிரசாரங்களும் பார்க்கும் அனைத்து இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
நான் நினைக்கிறேன், இவ்வாறான ஒர் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வது இதுவே முதற்தடவை என.
இப்படியெல்லாம் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வெற்றி பெறாவிட்டால்?
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 12:38:00 pm 3 கருத்துரைகள்
செவ்வாய், 12 ஜனவரி, 2010
இலங்கை தேர்தல் களத்தில் சூடு.
நீண்ட நாட்களுக்கு பின்னர் பதிவிற்கு வருகிறேன். மன்னிக்கவும் வேலைகள் அதிகம்.
சரி, எதை பற்றி எழுதுவது என நினைத்தால் ஞாபகத்திற்கு வருபது இலங்கையின் அரசியல் களம்.
6ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று தபால் மூல வாக்களிப்புக்களும் ஆரம்பமாகிவிட்டன.
இந்த வாக்களிப்பு நடவடிக்கைகள் இரண்டு நாட்களுக்கு தொடரும்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட திகதியிலிருந்து வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரித்த வண்ணமே உள்ளன.
நாளொன்றில் தேர்தல் பிரசார கூட்டங்களை விட வன்முறைச் சம்பவங்களே அதிகளவில் இடம்பெறுகின்றன.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக அதிகளவிலான வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதன்படி, 22 வேட்பாளர்கள் இம்முறை தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.
இம்முறை தேர்தல் களத்திலுள்ள வேட்பாளர்களின் விபரங்கள்
• மஹிந்த ராஜபக்ஷ - ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு
• சரத் பொன்சேகா - புதிய ஜனநாயக முன்னணி
• சிறிதுங்க ஜெயசூரிய - ஐக்கிய சோசலிஸக் கட்சி
• M.P..நமுனுமுல்ல - அனைவரும் மக்கள் அனைவரும் மன்னர்
• சரத் மனமேந்திர - புதிய சிஹல உறுமய
• அச்சல சுரவீர - தேசிய அபிவிருத்தி முன்னணி
• அநுர லியனகே - தொழிலாளர் கட்சி
• வண.பத்தரமுல்ல சீலரட்ண தேரர் - ஜனசெத முன்னணி
• விக்ரமபாகு கருணாரட்ண - இடதுசாரி முன்னணி
• விஜய டயஸ் - சோசலிச சமத்துவக் கட்சி
• சரத் கொன்காஹே - ஐக்கிய தேசிய மாற்று முன்னணி
• K.G.R.L.பெரோ - நமது தேசிய முன்னணி
• M.C.M. ஸ்மயில் - ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி
• ஒஸ்வால்ட் சொய்ஸா - ருகுணா ஜனதா கட்சி
• சரத் பின்னடுவ - தேசிய கூட்டமைப்பு.
• செனரட்ண சில்வா - தேசப்பற்றுள்ள தேசிய கூட்டமைப்பு.
• சுகத்சிறி கமகே - ஐக்கிய ஜனநாயக முன்னணி
• M.K.சிவாஜிலிங்கம் - சுயேட்சை
• I.M. இலியாஸ் - சுயேட்சை
• மயோன் முஸ்தப்பா - சுயேட்சை
• U.B.விஜயகோண் - சுயேட்சை
• V.மஹிமன் ரஞ்சித் - சுயேட்சை
இதேவேளை, இம்முறை தேர்தலில் வாக்களிக்க தகுதிப் பெற்றவர்கள் தொடர்பான விபரங்களை திரட்டினால்.
2008ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாடு முழுவதிலும் 1 கோடியே 40 லட்சத்து 88 ஆயிரத்து 500 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மாகாண அடிப்படையில் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில் 15 லட்சத்து 21 ஆயிரத்து 854 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 14 லட்சத்து 74 ஆயிரத்து 464 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 8 லட்சத்து 13 ஆயிரத்து 233 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் 9 லட்சத்து 70 ஆயிரத்து 456 பேரும், நுவரெலிய மாவட்டத்தில் 4 லட்சத்து 57 ஆயிரத்து 137 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 7 லட்சத்து 42 ஆயிரத்து 684 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும், வன்னி மாவட்டத்தில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 975 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் 7 லட்சத்து 21 ஆயிரத்து 359 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 644 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 133 பேரும், அம்பாறை மாவட்டத்தில் 4 லட்சத்து 20 ஆயிரத்து 835 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் 4 லட்சத்து 95 ஆயிரத்து 575 பேரும், குருநாகல் மாவட்டத்தில் 11 லட்சத்து 83 ஆயிரத்து 649 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 814 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 3 லட்சத்து 642 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் 7 லட்சத்து 34 ஆயிரத்து 651 பேரும், கேகாலை மாவட்டத்தில் 6 லட்;சத்து 13 ஆயிரத்து 938 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
வட மத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டத்தில் 5 லட்சத்து 79 ஆயிரத்து 261 பேரும், பொலன்னறுவை மாவட்டத்தில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 337 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன், தென் மாகாணத்தின் காலி மாவட்டத்தில் 7 லட்சத்து 61 ஆயிரத்து 715 பேரும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 4 லட்சத்து 21 ஆயிரத்து 186 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 5 லட்சத்து 78 ஆயிரத்து 758 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 8:17:00 am 1 கருத்துரைகள்
வியாழன், 26 நவம்பர், 2009
மும்பைத் தாக்குதலுக்கு ஒரு வயசு!
தீவிரவாதிகள் பல்வேறு குறிக்கோள்களை வைத்து உலகின் பல்வேறு நாடுகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
உலகில் தற்போது நிலைக் கொண்டுள்ள தீவிரவாதிகளில் மிக அச்சுறுத்தல் மிக்க தீவிரவாத அமைப்புக்கள் என்றால் அது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளிலேயே உள்ளன.
இந்த நாடுகளில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாத அமைப்புக்களினால் அந்த நாட்டிற்கு மட்டுமின்றி உலகில் பல நாடுகளுக்கு அவர்கள் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர்.
இவ்வாறு உலகிலுள்ள தீவிரவாத அமைப்புக்களில் நம்பர் வன் என கூறக்கூடிய தலிபான்களினால் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்காவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இந்த தாக்குதலினால் சுமார் 2 ஆயிரத்து 700ற்கும் அதிகமானோர் பலியானதுடன், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.
2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட இந்த பாரிய தாக்குதலின் தாக்கத்தினால் அமெரிக்கா இன்றும் தலைதூக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு இதுவே காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் இன்றும் அமெரிக்கா வேலையிண்மை பிரச்சினை, நிதி பற்றாக்குறை உள்ளிட்ட மனித அடிப்படை பிரச்சினைகள் பலவற்றிற்கு முகம்கொடுத்து வருகின்றது.
உலகின் வல்லரசு நாட்டிற்கே தீவிரவாத தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் எமது நாடுகளை போன்ற நாடுகள் எவ்வாறு அவற்றை தாங்கிக் கொள்வது.
இப்படி நான் கூறவரும் விடயம் என்னவென நிச்சயம் தெரிந்திருக்க கூடும்.
சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர், ஆசியாவில் நிலைக்கொண்டுள்ள தீவிரவாத குழுவொன்றினால் இந்திய – மும்பை நகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்.
அன்று நான் இந்த துறைக்கு வந்து சில மாதங்களே! ஊடகத்துறைக்கு வந்து இப்படியாக தாக்குதலை சந்தித்த முதலாவது அனுபவம். (வாழ்க்கையில் இந்த அனுபவத்தை மறக்க மாட்டேன்)
2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அன்று இரவு 10 மணியளவில் மும்பை நகரை தீவிரவாதிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
மும்பை நகரின் மக்கள் செறிந்துள்ள சுமார் 8 இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொண்டனர்.
தெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஓபராய், தாஜ் ஓட்டல்கள் உள்பட 8 முக்கிய இடங்களிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் மூலம் தாஜ் ஓட்டலை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தீவிரவாதிகள் சுமார் 3 நாட்கள் உலகையே ஆட்டிப்படைத்தனர்.
உலகின் அனைத்து நாடுகளையும் தமது பக்கத்திற்கு திரும்பி பார்க்க வைத்தனர் அந்த தீவிரவாதிகள்.
2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஆசியாவை ஆட்டிப்படைத்த சுனாமியை தொடர்ந்து மீண்டும் ஆசியாவை ஆட்டிப்படைத்த ஒரு கொடூர சம்பவம் இது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 174 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இதன்போது 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இவ்வாறு இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் சிலர் அதிலிருந்து மீளவில்லை என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை உலகை ஆட்டிப்படை தீவிரவாதிகளின் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனையோர் பாதுகாப்பு பிரிவினரினால் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இன்றும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக இந்திய பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிலரை பாகிஸ்தான் கைது செய்திருந்தது.
இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை சரியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதாக செய்திகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.
இதேவேளை, உலகில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாதத்தை முற்றாக அழிப்பதே உலக தலைவர்களின் நோக்கமாக அமைந்து வருகிறது.
இதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஒவ்வொரு நாளும் செய்திகளில் கேட்க மற்றும் பார்க்க கூடியதாய் உள்ளதை யாரும் அறிவார்கள் அல்லவா!
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் 8:53:00 am 0 கருத்துரைகள்










