செவ்வாய், 23 டிசம்பர், 2008
டோயோட்டாவின் பின்னடைவு
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டோயோட்டா நிறுவனம் கடந்த 71 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஆண்டு நட்டத்தை சந்திக்கப் போவதாக அறிவித்துள்ளது.
உலகளாவிய பொருளாதார வீழச்சி மற்றும் ஜப்பானின் யென் நாணயயத்தின் மதிப்பு உயர்வு ஆகிய காரணங்களால் டோயோட்டாவின் விற்பனை வருமானம் வீழச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2008ஆம் ஆண்டின் மொத்த இழப்பு 1.7 பில்லியன் டொலர்களாக இருக்கும் என்று அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில் புதிய தொழிற்சாலை திறப்பதை தள்ளிவைத்துள்ள டோயோட்டா நிறுவனம், பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 6:39:00 1 கருத்துகள்
திங்கள், 22 டிசம்பர், 2008
வேண்டாம் இப்படி ஒரு நாள் இனி எம்வாழ்வில்!
2004.12.26 உலகின் எமது சொந்தங்களை இழந்த நாள், எமது நண்பர்களை பிரிந்த நாள், எத்தணை ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க முடியாத நாள்!...............................
சுமத்திரா தீவில் ஏற்பட்ட ஆழிப்பேரலை (சுனாமி). 2006ஆம் ஆண்டு காலை அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த மிக கொடுரமான இயற்கையின் முகம்!.
ஆசிய மக்களின் வாழ்க்கையை, உள்ளத்தை, சிந்தனையை முழுமையாக இயற்கையின் பக்கம் திரும்ப வைத்த கடலின் செயல்.
கடலுக்கு ஒரு ஆசை, மனிதன் என்ன தான் பூமியில் செய்கின்றான் என பார்க்க?
வந்தது கடல் பூமிக்கு அள்ளி சென்றது எமது உறவுகளை, சென்ற எமது உறவுகள் திரும்பவில்லை வீட்டிற்கு.
இந்த ஆழிப்பேரலையினால் சுமார் 225000 பேரிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பல்லாயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இருப்பிடங்களை இழந்தனர், உறவுகளை இழந்தனர், தமது வலிமையை இழந்தனர், தமது தொழிலை இழந்தனர்.
மொத்தத்தில் உயிரோடிருந்து தம்மையே இழந்தவர்கள் கூட இருக்கின்றனர் பூமியில்,
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை, சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆழிப்பேரலையாக மாறி ஆசிய நாடுகளையே அழித்து சென்றது.
2004ன் யேமன் வந்தான்; ஆழிப்பேரலையாக, உயிர்களை எடுத்து சென்றான் சரமாறியாக.
இந்த நிலநடுக்கம் 9.2 ரிக்டர் அளவில் பதிவாகியது.
உலகில் இதுவரை ஏற்பட்ட மிக பெரிய நிலநடுக்கங்களில் 2ஆவது உயிர்காவும் நிலநடுக்கம் இதுவே.
பலியானோரின் நினைவுகள் இன்னமும் மனதை விட்டு நீங்கவில்லை, அதற்குள் 4 வருட நினைவு வந்துவிட்டது.
நேற்று ஏற்பட்டது போல இருக்கிறது. உறவுகளை பிறிந்து 4 வருடங்களா?
நினைத்து கூட பார்க்க முடியவில்லை,
மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரும் இறப்பது உலக நியதி!
ஆனால் தமது உறவுகள் அனைவரும் இறப்பது கொடுமை!
அது தான் 2004.12.26ஆம் திகதி நடைபெற்றது!
இயற்கை ஏன் அப்படிப்பட்ட ஒரு கொடுமையை செய்தது!
எத்தனை விஞ்ஞானிகள், எத்தனை வைத்தியர்கள், எத்தனை திறமைகளை கொண்ட எத்தனை பேர்!
உலகிற்கு இது ஆபத்து மட்டுமல்ல!
இழப்பும் கூட!
எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சி ஒடுக்கப்பட்ட ஆண்டு 2004 நாள் 26, வேண்டாம் இப்படி ஒரு நாள் இனி எம்வாழ்வில்.
ஆழிப்பேரலையினால் உயிரிழந்த என் உறவுகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் இறைவனை.......
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 7:28:00 0 கருத்துகள்
ஞாயிறு, 21 டிசம்பர், 2008
சீனாவில் தடை செய்யப்பட்ட இன்னுமொரு இணையத்தளம்!
சீனாவில் பல இணையத்தளங்கள் தடைசெய்யப்பட்டு வருகின்றன.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எனது வளைப்பதிவில் நான் எமுதியிருந்தேன் சீனாவில் தடைசெய்யப்பட்ட இணையத்தளங்களை பற்றி:
மேலும் முக்கியமான ஒரு இணையத்தளம் தடைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
என்ன தெரியுமா? GOOGLE.COM தான்க அது!
என்ன கொடுமை சார் இது!
GOOGLE லை மாத்திரம் சீனாவில் கடந்த மாதம் 45.6 மில்லயன் பேர் பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்கான காரணம் என்ன தெரியுமா? சீனாவில் இவ்வருடம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி தான்.
ஒலிம்பிக் போட்டிகள் அனைவருக்கும் நன்மையாகவே அமைந்தது, ஆனால் இணையத்தளங்களுக்கு இது எதிராகிவிட்டதே!
தற்போது சீன அரசுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளன.
கலந்துரையாடல்களின் பின்னரே மீண்டும் இணையத்தளங்கள் அந்த நாட்டில் செயற்படுமா? இல்லையா? என்பது குறித்து தெரியவரும்.
பார்ப்போம் எல்லாம் அவன் செயல் அல்லவா!
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 8:07:00 0 கருத்துகள்
வியாழன், 18 டிசம்பர், 2008
பீ.பீ.சீ செய்தி இணையத்தளம் சீனாவில் தடை.
உலக நாடுகளிலுள்ள செய்தி இணையத்தளங்களில் பெரும் பாலானவையை சீன அரசு தமது நாட்டில் தடை செய்துள்ளது.
இந்த வருடம் சீனாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போது சீன அரசியல் சட்டத்திட்டத்திற்கு எதிரான செய்திகளை வெளியிட்டதாக கூறியே செய்தி இணையத்தளங்கள் பலவற்றை சீன அரசு தடை செய்துள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு தடை செய்யப்பட்ட இணையத்தளங்களில் பீ.பீ.சீ இணையத்தளமும் ஒன்றாகும்.
சீனாவில் பலரினாலும் உபயோகிக்கும் மிக முக்கியமான செய்தி இணையத்தளங்களையே சீன அரசு தடை செய்துள்ளது.
சீனாவில் செய்தி நுகர்வோர் பெரும் அசௌகரியங்கள் எதிர்நோக்கி வருவதாகவும், உலக செய்திகள் தெரிந்து கொள்ள முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் சீன மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தடை செய்யப்பட்ட இணையத்தளங்களில் உலகில் பலரும் உபயோகிக்கும் தேடுபொறி இணையத்தளமொன்றும் தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான சரியாக தகவல் எனக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
தெரிந்தால் பதில் அனுப்பவும்.
உலக நாடுகளில் மிக வேகமாக மிக முக்கியமான இணையத்தளங்களை நாடுகள் தடை செய்து வருகின்றன.
இதில் நாம் நோக்க வேண்டியது நாட்டுக்கு தேவையான இணையத்தளங்களையே அந்த நாடுகள் தடை செய்கின்றன.
எமது நாட்டில் கூட அதே நிலை தான்
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 3:28:00 0 கருத்துகள்
சிம்பாப்வேயில் கொலரா நோயினால் 978 பேர் பலி.
சிம்பாப்வே நாட்டில் கொலரா நோயினால் இதுவரை சுமார் 978 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்த நோய் தொடர்பாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் சிம்பாப்வேயில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சிம்பாப்வேயில் கடந்த ஒரு வாரத்தில் இந்த நோயின் தாக்கம் 25 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் இன்று வரை இந்த நோயினால் 18 ஆயிரத்து 413 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 978 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் சிம்பாப்வேயின் ஜனாதிபதி ரொபட் முகாபேயுடன் கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக தகவல் தெரிவிக்கி;ன்றன.
இந்த நோய் உலக நாடுகளுக்கு பரவக் கூடிய அபாயம் தோன்றியுள்ளதாக ஐக்கிய நாடுகள் ஒன்றியம் கூறியுள்ளது.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 7:22:00 0 கருத்துகள்
ஞாயிறு, 7 டிசம்பர், 2008
தண்ணீரில் ஒடும் காலம்!
அமெரிக்காவின் பொருளாதாரம் கடந்த 15 வருட காலத்தில் இல்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த பொருளாதார வீழ்ச்சியினால் சுமார் 5 லட்சத்து 33 பேர் தமது வேலையை இழந்தனர்.
அமெரிக்காவில் வேலையில்லாது தவிப்போரின் சதவீதம் தற்போது 6.7 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடியானது இந்த வருடம் நவம்பம் மாதம் முதல் ஏற்பட்டதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக நாடுகளின் வல்லரசான அமெரிக்காவின் நிலை தற்போது வீழ்ச்சியடைந்து வருகிறது.
இதேவேளை, எரிப்பொருளின் விலையிலும் வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மசகு எண்ணெய் ஒரு பிப்பாயின் விலை 150 டொலரிலிருந்து தற்போது 40 டொலருக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
இதையடுத்து, ஒபெக் தனது எரிப்பொருள் விநியோகத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஒபாகின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னும் சிறிது காலங்களில் எரிப்பொருளின் உற்பத்தி நிறுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.
அவ்வாறு உற்பத்தியை நிறுத்தினால் எமது நிலை.
யோசிக்க வேண்டியது தான், நீரில் ஒட வேண்டிய காலம் வர போகிறது!
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 7:22:00 1 கருத்துகள்
வியாழன், 4 டிசம்பர், 2008
தீவிரவாத செயல்கள் 2013ஆம் ஆண்டு வரை
உலகெங்கும் தீவிரவாதிகளினால் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் 2013ஆம் ஆண்டு வரை நடத்த திட்டமிட்டு, தயாரித்து கைவசம் வைத்துள்ளதாக அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதல் கடந்த 5 வருடங்களாக அதிகரித்து வருகின்றதாகவும், ஆசிய நாடுகளில் இந்த நிலை மிக மோசமாக உள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் 27ஆம் திகதி இந்திய மும்பை நகர் தாக்குதலை கண்கானித்த அமெரிக்கா, தீவிரவாதம் தொடர்பாக தகவல் திரட்ட தொடங்கிது.
இதிலிருந்தே, 2013ஆம் ஆண்டு வரை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முடியும் என அமெரிக்க புலனாய்த்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகொங்கும் உருவாகிவரும் தீவிரவாதிகள் எதிர்காலத்தில் ஆணு ஆயுதங்கள் மற்றும் வைரஸ்களை பரப்ப திட்டம் தீட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை பாகிஸ்தானிய மற்றும் ஆப்கானிஸ்தானிய தீவிரவாதிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க புலனாய்த்துறை விஷேட குழுவொன்றை நியமித்து, தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க தகவல் வெளியிட்டுள்ளது.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 7:12:00 0 கருத்துகள்
ஞாயிறு, 23 நவம்பர், 2008
மனிதனின் மூளை கணனி.
மனித மூளையை போல் இயங்கும் கணனி ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.
அமெரிக்காவின் கணனி நிறுவனமான ஐ.பி.எம் இதனை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை கூடுதலான உதவிகளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையின் பங்காக 25 ஆயிரம் கோடி ரூபா முதற்கட்ட பணிக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்த மனித கணனியை உருவாக்கும் முயற்சியில் ஐ.பி.எம் மற்றும் அமெரிக்காவிலுள்ள 5 பல்கலைகழக பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக மூளை நரம்பியல் மற்றும் மனோதத்துவ டாக்டர்கள் நியமிக்கப்பட்டு இந்த மனித மூளையை போல் இயங்கும் கணனியை உருவாக்குகின்றனர்.
மனிதனின் மூளை மற்றும் செல்கள் எப்படி செயற்படும் எனவும் நரம்புகள் எப்படி இயங்கும் என்பது தொடர்பான முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த முயற்சி நிறைவடைய இன்னும் பல ஆண்டுகள் எதிர்பார்க்க வேண்டும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
எதை செய்தாலும் மனிதனை போல் ஆகுமா?
மனிதனின் தைரியம்....... மனிதனின் செயற்பாடு.... முடியாதில்ல!
அந்த கணனியை கூட உருவாக்குபவன் மனிதன் தானே!
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 1:30:00 1 கருத்துகள்
வெள்ளி, 14 நவம்பர், 2008
இந்தியா இன்று சந்திரனில் கொடி நாட்டுகிறது. இலங்கை கிளிநொச்சியில் கொடி நாட்டப் போகிறதாம்.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் முற்பகல் 7:35:00 0 கருத்துகள்
வியாழன், 13 நவம்பர், 2008
4300 ஆண்டுகள் பழைமையான பிரமிட்.
எகிப்து சக்காரா பிராந்தியத்தில் சுமார் 4300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த பிரமிட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரமிட்டானது பண்டைய எகிப்திய 6ஆம் இராஜியத்தின் ஸ்தாபகரான மன்னர் தெதியின் தாயாரான மகாராணியார் ஸெஷிஷெட்டிற்கு உரியதென அகழ்வாவாய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.
தென் கெய்ரோ நகரிலிருந்து 12 மைல் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பிரமிட் தொடர்பான தகவல்கள் கடந்த செவ்வாய்கிழமை 11.11.2008ஆம் திகதி அறிவிக்கப்பட்டன.
16 அடி உயரமான இந்த பிரமிட்டானது களிமண்ணால் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 6:33:00 0 கருத்துகள்
வியாழன், 6 நவம்பர், 2008
இலங்கைக்கு கிடைத்த சாட்டையடி....
இலங்கையில் சிறுபாண்மையினரை மதிக்காது, சிறுபாண்மையினரை பெரும்பாண்மையிமனர் இன்றும் மட்டம் தட்டி வருகின்றனர்.
இலங்கையில் தமிழனுக்கு என்ன உரிமை உள்ளது? தலைமைத்துவம் ஒன்றிற்கு கூட தமிழனுக்கு உரிமை இல்லை.
உதாரணத்திற்கு கிரிக்கெட் -
இலங்கை அணியின் நட்சத்திர சூழல்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன்.
இலங்கை அணியில் பல வருடங்களாக விளையாடி வருகின்றார்.உலக நாடுகளே அவரை முதற்தர பந்து வீச்சாளர் பட்டியலில் சேர்த்துள்ளது.
ஏன், இலங்கை அணி பல வெற்றிகளை பெற்றுக்கொள்ள இவர் காரணமாக இருந்தமை நாம் அனைவரும் அறிந்த விடயமே!. இலங்கை அணி இவ்வளவு காலம் நிலையாக விளையாடி வருவதற்கு இவர் ஒரு முக்கிய காரணம் என கூட கூறலாம்.
இந்த காரணங்களை மட்டுமே காட்டியே, இவருக்கு இலங்கை அணியின் தலைமைத் துவத்தை வழங்க முடியும்.
ஆனால், இலங்கையில் செய்ய மாட்டார்கள். காரணம் சிறுபாண்மை என்ற ஒன்று. திறமைக்கு இங்கு இடமில்லை. மொழிக்கு, இனத்திற்கு தான் இலங்கையில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது.
முரளிதரனின் வாழ்க்கை சாதாரண பந்துவீச்சாளர் மட்டும் தான்! அவர் பெற்ற பதக்கங்கள் மற்றும் வெற்றி கிண்ணங்கள் அனைத்தும் வீட்டின் அழகிற்கு மட்டும் என்பது சொல்லவே தேவையில்லை.
இலங்கையில் விளையாட்டு அப்படி இருக்க, அரசியலை நோக்கினால்,
மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர், லக்ஷ்மன் கதிர்காமர். இலங்கை அரசியலில் பல வெற்றி கொடிகளை நாட்டிய மனிதன்.
இலங்கைக்கு உலக நாடுகளின் உதவிகள் கிடைக்க முக்கிய காரணமாக இருந்த ஒரே மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமா? உலக நாடுகளின் அறிமுகம் இலங்கைக்கு கிடைக்க முக்கிய காரணம் இவர் என்பதை யாருமே மறுக்க முடியாது.
அவர் உயிரோடு இருக்கும் போது அவரிடமிருந்து அனைத்து உதவிகளையும் பெற்று, இறுதியில் கைகழுவி விட்டார்கள் கதிர்காமரை.
அடுத்து அரசியலின் உள்புறம்!
1977ஆம் ஆண்டு, தற்போது உள்ள அரசியல் யாப்பை வெளியிட்ட ஆண்டு.
இதன்படி, இலங்கையில் ஜனாதிபதியாக போட்டியிடும் ஒருவர் கட்டாயம் பௌத்த மதத்தை தழுவி இருக்க வேண்டும் என்பது இன்றியாமையாததாக அதல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த சட்டம் 1977ஆம் ஆண்டு யாப்பில்; உறுதியாக கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழனுக்கு சமவுரிமை இல்லை என்பதை அந்த யாப்பின் மூலமே தெரியவருகின்றது.
பெரும்பாண்மையினர் எவ்வளவு செய்தாலும், தமிழன் அசையமாட்டான், இலங்கையில் வாழும் அனைத்து சிறுபாண்மையினருக்கு சமவுரிமை வழங்க வேண்டும் என கூறியே இன்றும் இலங்கையில் யுத்தம் நீடிக்கிறது.
இந்த நிலையில், இலங்கைக்கு வந்தது ஆப்பு.......
04.11.2008ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க தேர்தல்.. இலங்கை அரசுக்கு கிடைத்தது சாட்டையடி...
எப்படி இந்த சாட்டையடி இலங்கைக்கு கிடைத்தது.. என்று தான் நினைக்கிறீர்கள்? அது தான் வருகிறேன்.
04.11.2008ஆம் திகதி நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களான ஜோன் மெக்கேயின் மற்றும் பராக் ஒபாமா.
முதலில் ஜோன் மெக்கேயினின் கொள்கையில் முக்கியமான ஒன்றை நான் இதற்கு எடுத்துக் கொள்கிறேன்.
“உலக நாடுகளில் ஏற்பட்டுவரும் பிரச்சினைகளுக்கு தீர்வு யுத்தம்”
இந்த கொள்ளையை கொண்டவர் ஜோன் மெகேயின்.....
“ஆயதத்தை கையில் எடுத்தவன், ஆயதத்தினாலேயே தனது உயிரை இழப்பான்” என்பது உலகறிந்த உண்மை.
அதுபோல தான் மெகேயின் யுத்தத்தை காட்டி அமெரிக்காவின் ஆட்சியை கைப்பற்ற நினைத்தார்.
முடியுமா? மக்கள் உஷார் ஆகிவிட்டார்கள்!
இவர் ஆட்சிக்கு வந்திருந்தால், நிச்சயம் உலக நாடுகளில் ஏற்பட்டு உள்ள பிரச்சினைகளுக்கு யுத்தத்தின் மூலமே தீர்வு காண முற்பட்டிருப்பார்.
அது இறுதி வரை சாத்தியமாகியிருக்காது.
அடுத்தது, கருப்பினத்தவர், அமெரிக்காவின் சிறுபாண்மையினரான பராக் ஒபாமா....
இவரின் கொள்கை சற்று நோக்குவோம்..
“உலகில் எவ்வளவு பிரச்சினை வந்தாலும், அந்த பிரச்சினையை பேச்சு வார்த்தையின் மூலம் முடிவுக்கு கொண்டு வருதல்” தான் பராக் ஒபாமாவின் கொள்கை.
இவர் ஆயுதம் ஏந்திய ஆட்சியை விரும்பவில்லை, பேச்சு வார்த்தை என்ற ஆயுதத்தை ஏந்தினார். இன்று உலக நாயகனானார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஜோன் மெக்கேயின் பெரும்பாண்மையினர், ஆனால் பராக் ஒபாமா சிறுபாண்மையினர், அது மட்டுமா? கருப்பினத்தவர். அப்படி இருந்தும் இவர்தான் ஆட்சிக்கு வரவேண்டும். என்ற முறை அமெரிக்காவில் இல்லை. இலங்கையில் உள்ளது. அமெரிக்காவில் ஒரே தகுதி. ஜனாதிபதியாகும் ஒருவர் கட்டாயம் அமெரிக்கராக இருக்க வேண்டும். அது சரியான தகுதி தானே!
இப்படியே இலங்கையை நோக்குவோம்.
இலங்கையில் தற்போது ஆட்சியில் உள்ள அரசு யுத்ததினாலேயே நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்ற கொள்கையை கொண்டுள்ளது.
இவ்வாறான கொள்கையை கொண்டதும், நான் ஆரம்பத்தில் கூறியது போல, சிறுபாண்மையினரை வெறுப்பதுமான கொள்கையை தற்போதை இலங்கை அரசு கொண்டுள்ளது.
இப்படிப்பட்ட அரசாங்கம், உலக வல்லரசு நாடான அமெரிக்க தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவித்திருக்கும்..
நிச்சயம் ஜோன் மெக்கேயினுக்கு தான்.
ஆனால், ஆதரவு தெரிவித்த மெக்கேயினின் ஆட்சி வரவில்லை, சமாதான ஆட்சி வந்துள்ளது.
இது தான் இலங்கை அரசுக்கு கிடைத்துள்ள சாட்டையடி.....
தற்போது அமெரிக்காவின் ஆட்சிக்கு வந்துள்ள ஒபாமா, உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பேச்சு வார்த்தை மூலம் முடிவொன்றை எடுப்பார் என்பது நிச்சயம்.
அந்த முடிவு இலங்கைக்கு வரும் போது இலங்கை என்ன செய்யும்?
பதில் தருகிறேன்..
போரை நிறுத்த வேண்டும். பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும். அப்போது. தமிழனின் ஆட்சி. அமெரிக்காவில் இன்று ஏற்பட்டுள்ள நிலை இலங்கைக்கு வர இன்னும் சில நாட்களே உள்ளது.
அப்போது இலங்கை அரசு என்ன செய்யும்? ஆண்டவனுக்கு தான் தெரியும் இதற்கான இதற்கான பதில்....
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 1:33:00 3 கருத்துகள்
செவ்வாய், 4 நவம்பர், 2008
....மூன்று கால்களில் பிறந்த குழந்தை....
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 3:47:00 2 கருத்துகள்
...மூன்று கால்களை கொண்ட குழந்தை இலங்கையில்....
அம்பாறை – அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மூன்று கால்களைக் கொண்ட குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
இந்தக் குழந்தை நேற்றிரவு பிறந்துள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எம். பாயிஸ் தெரிவித்தார்.
தாய் கருத்தரித்திருந்த போது, இரட்டைக் குழந்தையாக தென்பட்டதாகவும், அது நாட்கள் செல்லச் செல்ல ஒரு குழந்தையாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, 3 கால்களுடன் பிறந்த குழந்தை நலமாகவுள்ளதுடன், இந்த குழந்தை குறித்த தாய்க்கு முதற் குழந்தை எனவும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி கூறினார்.
அத்துடன், குழந்தையை மேலதிக மருத்துவ பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.எம். பாயிஸ் குறிப்பிட்டார்.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 12:25:00 0 கருத்துகள்
திங்கள், 3 நவம்பர், 2008
மனிதனின் ஆசை இவ்வளவு தான்....
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைன் மிக ஆடம்பரமாக ஈராக்கில் வாழ்ந்து வந்தது அனைவரும் அறிந்த விடயமே.
ஆனால், எப்படிப்பட்ட ஆரம்பரங்களை அனுபவித்தார் தெரியுமா?
கேள்விப்பட்டது மட்டும் தான்.....ஆனால்.......பார்க்க வில்லை......நானும் தான் பார்க்கல.....
ஆனால் கேள்விப்பட்டன்......
எப்படி தெரியுமா?
பல சொகுசு வீடுகள்..... பல வாகனங்கள்......என பல சொகுசு வாழ்க்கை......
அதில் ஒன்று தான் செகுசு கப்பல்......
சாதம் உசைன் ஆட்சியிலிருந்த போது டென்மார்க் நிறுவனமொன்று அவருக்கு சொகுசு கப்பல் ஒன்றை வழங்கியிருந்தது.
இந்த கப்பல் 270 அடி நீளம், கப்பலில் நீச்சல் குளம், சினிமா தியேட்டர், ஹெலிகொப்டர் தளம், தங்ககட்டில் படுக்கை அறை, தங்கத்திலான குளியலறை என இன்னும் பல வசதிகளுடன் இவருக்கு இந்த கப்பலை வழங்கியிருந்து.
ஆனால், அவர் அந்த கப்பலில் ஏறி பார்த்ததில்லையாம்... கப்பலின் மேல் உள்ள ஆசையை கூட நிறைவேற்றிக் கொள்ளமுடிய வில்லை...
காரணம் தான்...அரசியல் எதிரிகள்......கப்பலில் ஏறினால்... எதிரிகள் தாக்குதல் நடத்திவிட்டால் என்ற அச்சம்....
சவூதி அரேபியாவில் உள்ள துறைமுகம் ஒன்றில் பல வருடங்கள் இந்த கப்பல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது இப்படி இருக்கும் போது, ஜோர்தானில் உள்ள தனியார் நிறுவனமொன்று அந்த கப்பலுக்கு உரிமை கோர தொடங்கி விட்டது.
சதான் உசைன் குறித்த கப்பலை தமக்கு கொடுத்து விட்டதாக கூறி பிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஆனால், அந்த கப்பல் ஈராக் நாட்டுக்கு சொந்தமானதென தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இப்போது அந்த கப்பலை அந்த நாட்டு அரசாங்கத்தினால் ஏலம் விடப்பட்டுள்ளது.
எவ்வளவாக இருக்கும் ஏலத் தொகை?
188 கோடி ரூபா...................
முடியுமா நம்மல? பார்ப்போம்....யாருக்கு சொந்தமாகுனு?
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 7:44:00 3 கருத்துகள்
ஞாயிறு, 2 நவம்பர், 2008
......சுனாமியின் ஆவேச பிறப்பு 600 அல்லது 700 ஆண்டுகளில்.......
சுனாமி மீண்டும் எப்போது ஏற்படும் என தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.
2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி காலை 9.20, நினைத்தாலே இன்றும் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகும். நினைத்தாலே உடல் நடுங்கும்.
பல்லாயிர கணக்கான ஆசைகளுடன் வாழ்ந்தவர்கள் அனைவரையும், ஒரு நொடியில் பல்லாயிர பேரை நினைத்து அழ வைத்த நாள் 2004.12.26ஆம் திகதி.
வேண்டாம், இனி அப்படிப்பட்ட ஒரு நாள்.
இப்படிப்பட்ட ஒரு நாள் உலகிற்கு தேவையில்லை என்ற நல்ல எண்ணத்துடன் தான் தற்போது ஆராய்ச்சியாளர்கள் எப்போது சுனாதி மீண்டும் உருவெடுக்கும் என ஆராய தொடங்கி விட்டார்கள்.
இதற்காக இந்தோனேஷிய புவியியல் நிபுணர்களான ஆர்க் சென்ட் மாநில பல்கலைகழகத்தைச் சேர்ந்த முன்னாள் புவியியல் ஆராய்ச்சியாளர் கரீம் மோனாக் என்பவர் தலைமையில் ஆராயப்பட்டு வருகிறது.
இதன்மூலம் கண்டு பிடிக்கப்பட்ட அறிக்கையின் படி, 400 ஆண்டுகளுக்கு பின்னர் தான் 2004ஆம் ஆண்டு சுனாமி பிறந்துள்ளது.
தற்போது புவி வெப்பமடைதல் மற்றும் சுற்று சூழல் ஆகியவற்றை வைத்து இந்த ஆராய்ச்சியாளர்கள் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இந்த அறிக்கையின் படி, இன்னும் 600 அல்லது 700 ஆண்டுகளுக்கு பின்னர் தான் மீண்டும் சுனாமி பிறப்பெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“உலகின் சாபம் அழிவுகள் நிகழ வேண்டும் என்பது, இதை யாராலும் நிறுத்த முடியாது, எனினும் அழிவிலிருந்து எம்மை பாதுகாக்க முடியும்” அதற்கான ஆராய்ச்சியின் முடிவுதான் இது.
இந்த ஆராய்ச்சி முடிவுகளை வரப்போகும் எமது எதிர்கால சந்ததியினருக்கு செல்லி வளர்க்க வேண்டும்.
அவ்வாறு செல்லி வளர்ப்போமானால் அவர்களின் பாதுகாப்பை அவர்கள் தேடிக் கொள்வார்கள்.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 1:06:00 0 கருத்துகள்
வெள்ளி, 31 அக்டோபர், 2008
மௌனம் காக்கும் ஊர்.....
இந்தியா – தமிழ் நாட்டில் உள்ள குறிச்சிகுளம் எனும் சிறிய கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மக்களின் பெருந் தொகையானோர் முஸ்லிம்கள்.
இந்த கிராமத்தம் மௌனத்தின் உருவம்.
என்ன மௌனம்? புரியவில்லையா? இங்கு உள்ளவர்களில் 100க்கும் 40 சதவீதமானோர் ஊமைகள். அது மட்டுமா அதிலும் சிலருக்கு காது கேட்காது?
என்ன கொடுமை!
இந்த கிராமத்தில் நிச்சயமாக குடும்பத்தில் ஒருவராவது ஊமை என்பது தான் கடவுள் கொடுத்த சாபம்.
இதற்கான காரணம் என்ன?, சாபமா? அல்லது நோயா? பார்ப்போம்.....
பல வருடங்களுக்கு முன்னர் இந்த ஊரில் உள்ள 5 குடும்பங்கள் தாங்க இதற்கு காரணம்...
இந்த குடும்பங்களும் ஐந்தும் அந்த ஊரில் மிக பெரிய பணக்காரர்கள். இந்த சொத்து வெளியில் உள்ளவர்களுக்கு சென்று விட கூடாதென்ற பேராசையால் உறவு முறைக்குள் திருமணங்களை செய்து கொண்டனர் அந்த 5 குடும்பங்களை சேர்ந்தவர்கள்...
அந்த குடும்பத்தில் உள்ளவர்களில் சிலர் ஊமைகள்... இது தான் பரம்பரையாக பரவ தொடங்கியது.
இப்போதும், உறவு முறைக்குள் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள்..
இதற்கு கூட காரணம் இருக்கு.....
வெளியில் உள்ள எவருமே இவர்களை திருமணம் செய்ய முன் வருவதில்லை..
பாய்ந்து ஓடி திரியும் குழந்தைகள் முதல் தள்ளாடும் கிழவன் வரை பலர் ஊமைகள் அல்லது காது கேளாதவர்கள்.......
இது தொடர விடாது தடுப்பது எப்படி? அவர்களால் தான் அது முடியும்...... எப்படி?
உறவு முறைகளை திருமணம் செய்வதை தவிர்த்து வெளியில் உள்ளவர்களை திருமணம் செய்தால் நிச்சயம் அடுத்த தலைமுறை ஊமைகள் அல்ல....
அடுத்த தலைமுறையில், இந்த ஊமைகள் நிச்சயம் மௌனம் காக்காது. வெடிக்குண்டுகளின் சத்தங்களை போல பேசும்......
....மூலம் விஜய் T.V....
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 12:30:00 1 கருத்துகள்
புதன், 29 அக்டோபர், 2008
நான் முதலில் கண்ட விமான தாக்குதல். (....அனல் மின்சார நிலையத்தில்....)
28ஆம் திகதி இரவு 11 மணி, எனக்கு தூக்கம் கண்ணை சுற்றியது. பாயை விரித்து நித்திரைக்கு சென்றேன்.
இரவு 11.30 அளவில் திடீர் என துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டன.
எழுந்து பார்த்தேன் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது, அண்ணன் என்னிடம் புலிகள் தாக்குதல் நடத்துவதாக கூறினார்.
உடனே வீட்டு கதவை திறந்து பார்த்தோம். விமானம் ஒன்று விரைந்து சென்று குண்டுகளை எறிந்தது.
அதேவேளை, கொழும்பு துறைமுகத்திலிருந்து இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.
இரவு, மின்சாரம் கூட இல்லை, வானில் பட்டாசு போடுவது போல, துப்பாக்கி ரவைகள் பாய்ந்தன.
மறுபக்கம் களனிதிஸ்ஸ அனல் மின்சார நிலையத்தின் மீது புலிகளின் விமானப் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர்.
அந்த மின்நிலையம் தீபற்றி ஏறிய தொடங்கியது. மின்நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள வானம் ஒரே சிகப்பு நிறம், மறுபக்கம் பட்டாசு போடுவது போல துப்பாக்கி ரவைகள் பாய்கின்றன.
ஒரு 5 நிமிடங்கள் ஒரே சத்தம். என்ன செய்வது என எனக்கு தெரியவில்லை. கை, கால் நடுங்க தெடங்கியது. வீதியில் உள்ளவர்கள் ஓட தொடங்கினர்.
எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் பயந்து. சத்தம் கூட இல்லை.
அதேவேளை, எனக்கு முதலில், வெற்றி எப் எமின் விரிவாக்கல் பிரிவை சேர்ந்த ஜெயிசன் போன் செய்து அங்கே என்ன நடக்கிறது என்றார்.
நான் அதற்கு நடந்தவற்றை கூற, அவர் பயந்து, அதன் பிறகு எனக்கு 9 தடவை போன் செய்தார்.
முடியலா? என்ன செய்ய என்னுடன் வேலை செய்பவராயிற்று!
கடைசியாக ஜெயிசன் போன் செய்தது 1 மணி, எப்படி எனக்கு இருக்கும்.
அதன் பிறகு என்னுடன் வேலை செய்யும் அனைவரிடமும் தொடர்பு கொண்டு செய்;திகளை பறிமாற்றி கொண்டேன்.
மின்சாரம் கூட இல்லை, வியர்வை தாங்க முடியவில்லை, என்ன செய்ய துக்கம் கூட வரவில்லை. விளித்தே இருந்தேன்.
விடிந்ததும், எழுந்து குளித்து விட்டு வேலைக்கு வந்து விட்டேன். அன்று மாலை 7 வரை நான் வேலையில் இருந்தேன். மிக கஷ்டப்பட்டு தான் வேலை செய்தேன். முடியல........
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 6:30:00 4 கருத்துகள்
மனதை வருத்திய பாகிஸ்தான்!
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5 அளவில் இடம்பெற்றதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் - பலோசித்தான் மாகாணத்தில் குவெட்டா நகரிலிருந்து வடகிழக்காக 70 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பல்லாயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து ஹெலிகொப்டர்களின் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தானிய இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சலீம் நாவாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், பெருமளவிலான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதினால் இடிப்பாடுகளுக்குள் சிக்கி இன்னும் பலர் உயிரிழந்திருக்கலாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 1935ஆம் ஆண்டு குவெட்டா நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன், 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 75 ஆயிரம் பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 1:38:00 0 கருத்துகள்
திங்கள், 27 அக்டோபர், 2008
காதலிக்கும் பறவைகள்
மனிதர்களுக்கு அடுத்தப்படியாக காதலிக்கும் உயிரிணம் எது தெரியுமா? பறவை தான்!
பறவைகளின் காதல் என்பது உலகில் வாழும் உயிரிணங்களிலேயே சிறந்தது என தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், அந்த பறவைகளுக்கு தெரியாது, தான் காதலிக்கும் விடயம். அது தான் உண்மையான அன்பு!
முதலில் பறவைகளின் காதலைப் பற்றி நோக்குவோம். அதற்கு ஒரு சிறந்த காரணம் கூட இருக்கின்றது.
பறவைகள் முட்டை இட்டு, தனது இனத்தை பெருக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அப்படி முட்டையிட்டு தனதினத்தை பெருக்க குறித்த பறவை அடைக்காப்பது இன்றியமையாதொன்றாகின்றது.
அடைக்காக்கும் பறவைகள் முழு நேரமும் அடைக்காக வேண்டும்.
முடியுமா?
அந்த பறவைக்கு நிச்சயம் உணவு தேவை, அதை எப்படி அந்த பறவைகள் தேடும்.
அதற்காக தான் பறவைகள் காதலிக்கின்றன.
இப்படி அடைக்காக்கும் பறவைக்கு, அதை காதலிக்கும் பறவை உதவியாக உள்ளது.
பெண் பறவை அடைக்காக்கும் போது, ஆண் பறவை இறை தேட சென்று விடும், அந்த நேரத்தில் பெண் பறவை அடைக்காக்கும், அடுத்தப்படியாக ஆண் பறவை அடைக்காக்கும் போது பெண் பறவை இறைத் தேட போகின்றதாம்.
இதை தான் பறவைகள் காதலிப்பதாக கூறுகின்றனர்.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 1:55:00 0 கருத்துகள்
சனி, 25 அக்டோபர், 2008
தமிழனின் கலக்கல் இனி தெரியும் சினிமா நாயகனுக்கு!
தமிழ் நாட்டில் ஈழத் தமிழர் படுகொலைச் செய்யப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் மேற்கொண்டுவரும் நிலையில் அஜித் மற்றும் அர்ஜுன் ஆகியோர் “தமிழர்களுக்காக நாம் ஏன் உண்ணாhவிரதத்தில் ஈடுபட வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழர் என்ற பற்று இல்லாத ஒருவன் ஏன் தமிழ் சினிமாக்களின் நடிக்க வேண்டும். சிங்கள சினிமாவிற்கு செல்ல வேண்டியது தானே?
தமிழினின் பணமும், ஒத்துழைப்பும் இல்லாமல் எப்படி உலகின் வெளிச்சத்திற்கு வந்தார்கள்.
இனிமேல் தமிழன் யார் என்று தெரியவரும் அவர்களுக்கு!
தமிழனின் கலக்கலை கண்ட உலகின் வயிறு கலங்குகின்ற இந்த நிலையில் அவர்களின் உடம்பே கலங்குவது நிச்சயம்.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 2:14:00 0 கருத்துகள்
தமிழனின் கலக்கலில் உலகம் கலங்கியது!
ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து 24.10.2008ஆம் திகதி தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் சென்னையில் நடத்தப்பட்ட மிக பிரமாண்டமான மனித சங்கிலி போராட்டத்திற்கு லட்சக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் நடத்தப்பட்ட இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு கொட்டும் கடும் மழையிலும் தமிழர்கள் கலந்து கொண்டதை இட்டு ஈழத்தில் வாழும் மக்களின் சார்பில் இந்திய தமிழர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.
தமிழன் என்று செல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்று கூறிய வார்த்தைக்கு, நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திலிருந்து உலகிற்கு தமிழன் தலைநிமிர்ந்துள்ளவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து இந்தியாவினால் நடத்தப்படும் போராட்டத்திற்கு, இன்று உலகமே கலங்கியுள்ளது.
உலகின் வயிற்றை 24ஆம் திகதி தமிழன் கலக்கியுள்ளான்.
நடைபெற்ற சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட கவிஞர். வைரமுத்து கூறியது என் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது.
“ஈழ மக்கள் குண்டு மழையில் நனைகிறார்கள், நாம் நனையும் இந்த வானின் மழை பெரிதல்ல!” இது மிக சிறந்த வார்ததை.
தமிழனின் வீரம் தொடர எனது வாழ்த்துக்கள்..
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 12:58:00 0 கருத்துகள்
வெள்ளி, 24 அக்டோபர், 2008
இலங்கையின் விடியல்
கடந்த சில வாரங்களாக இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய தமிழக அரசியல் வாதிகள் கூடுதலாக கவனம் செலுத்தி வருகின்றனர்.
சென்னையில் கடந்த 14ஆம் திகதி தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் 21ஆம் திகதி மனித சங்கிலி போராட்டம் ஒன்றை நடத்த மற்றும் இலங்கை பிரச்சினைக்கு சரியான முடிவை இந்திய மத்திய அரசு பெற்று கொடு;க்காவிட்டால் அனைத்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவதான முடிவுகள் அன்று எடுக்கப்பட்டன.
எனினும், 21ஆம் திகதி நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டம் மழை காரணமாக இன்று 24.10.2008 நடைபெறுகிறது.
14ஆம் திகதியிலிருந்து 2 வாரங்கள் என்பது 28ஆம் திகதி ஆகும்.
நேற்று 23.10.2008 கைது செய்யப்பட்ட தொல். திருமாவளவன் கூறியதாவது:- 28ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எமது நடவடிக்கை தீவிரமாக இருக்கும் என்றார்.
இருப்பினும் இன்னும் 4 நாட்கள் மாத்திரமே 28ஆம் திகதிக்கு உள்ளது.
தமிழகத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி மிக பாரிய தமிழ் குண்டொன்று வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இந்திய தமிழ் திரையுலகினர் பாரிய உணாவிரத போராட்டத்தை முதலாம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
“தமிழர்களுக்கு குரல் கொடுப்பதை பார்க்க ஆசையாக தான் உள்ளது. இலங்கைக்கு இந்த பிரச்சினையிலிருந்து விடியல் கிடைக்குமா?”
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 1:44:00 0 கருத்துகள்
வியாழன், 23 அக்டோபர், 2008
காரின் வேகம் மணிக்கு 1610 KM
உலகில் கார் பாவனையாளர்கள் அதிகரித்து வருகின்றனர்.
உலகில் புது விதமான மற்றும் அதிக சலுகைகள் உள்ள கார்களை உருவாக்கும் அளவு அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்து உலகிலேயே அதி வேகமாக செல்லக்கூடிய கார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
இந்த கார் மணிக்கு 1610 KM வேகத்தில் செல்லக் கூடிய நிலையில் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக எமது நாடுகளில் மணிக்கு 160 KM வேகத்தில் செல்லக் கூடிய கார்களை வைத்து நம்மவர் “எவ்வளவு முடியுமே அவ்வளவு வேகமாக செல்கின்றனர்” இந்த காரை நம்மவருக்கு கொடுத்தால்.
எப்படி இருக்கும்?
பாதையில் செல்ல முடியுமா?
ஐரோப்பிய போர் விமானத்தின் என்ஜினை பயன்படுத்தியே இந்த காரை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இன்னும் 18 மாதங்களில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது 2011 ஆம் ஆண்டு வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1997ஆம் ஆண்டு “என்டி கிரீன்” என்ற விமான ஓட்டுநர் மணிக்கு 1288 KM வேகத்தில் செல்லும் காரை கண்டுப்பிடித்து சாதனை படைத்திருந்தார்.
இதன் பிறகு வரும் மிகவேகமான செல்லக்கூடிய கார் இதுதான். பார்ப்போன் உலகம் செல்லும் வேகத்திற்கு இன்னும் எத்தனை வாகனங்களை கண்டுபிடிப்பார்கள் என்று!
எல்லாமே நமக்கு தான். எவ்வளவு முடியுமே! அவ்வளவு செய்வோம்.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 8:07:00 0 கருத்துகள்
மனிதனுக்கு பேய் பிடிப்பது பற்றிய ஆராய்ச்சி.
மனிதர்களுக்கு பேய் பிடிக்கிறது. ஏன் மனிதர்களுக்கு பேய் பிடிக்கிறது ஆராயப்பட்ட விடயங்கள்.
மனிதனின் ஆள் மனதில் தோன்று ஆசைகள் நிறைவேறாத பட்ஷத்தில், அதன் நினைவுகள் ஆள்மனதில் அடிக்கடி தோன்றி மறையும். இது காலச் செல்ல செல்ல அவன் என்ன நினைத்தானோ? அதுவாக அவன் மாறுகிறான். அதுவே பேய் பிடிப்பதென்று கூறப்படுகிறது. இது விஞ்ஞானத்தில் MULTIPLE PERSONALITY DESORDER என அழைக்கப்படுகின்ற ஒரு வகை மன நோய் என கூறலாம்.
உலகில் பேய் பிடிப்பது பெண்களுக்கு அதிகம். காரணம் என்ன?
ஆண் மனதில் தோன்றும் ஆசைகளை விட பெண்களின் மனதில் தோன்றும் ஆசைகள் அதிகம். அது நிறைவேறாத பட்ஷத்தில் அவர்களுக்கு பேய் பிடித்து விடுகிறது.
இவ்வாறு ஆள் மனதில் தோன்றும் ஆசைகள் நிறைவேறாத ஆத்திரத்தை அவர்கள் வெளிப்படுத்துவது ஆக்ரோஷமாக இருக்கின்றது.
இந்த ஆக்ரோஷத்தையே பேய் பிடித்து விட்டது என பாமர மக்கள் நம்புகின்றனர்.
இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை பேய் பிடித்ததாக கூறி, இந்த பேயை விரட்ட மக்கள் பல உத்திகளை கையாளுகின்றனர்.
இவ்வாறு ஆக்ரோஷமாக நடப்பவர்களை பேய் விரட்டுவதாக கூறி சமய வழிகளை மக்கள் நாடுகின்றனர்.
சமயத்தின் பக்கத்திற்கு சென்று மிக மோஷமான உத்திகளையே கையாளுகின்றனர்.
உதாரணமாக:- சாட்டை அடி, தலையில் தேங்காய் உடைத்தல், மூடியை மரத்தில் கட்டி வைத்தல், கூறிய ஆயுதங்களில் உடலில் குத்துதல் என இன்னும் பல மோஷமான விதத்திலேயே இந்த நோயை குணப்படுத்த நினைக்கின்றனர் மக்கள்.
இது சாத்தியமாகுமா? மனிதனின் மனதில் தோன்றிய ஆசைகள் நிறைவேறும் வரை இந்த மன நோய் குணமடையமாட்டாது.
உலகில் பேய் என்று ஒன்று உள்ளதா? இதற்கு ஒரு ஆராய்ச்சி செய்ய நான் விரும்புகிறேன்.
எனது நண்பர்களின் மூலம் எனக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் கீழ் காணும் தகவல்களை நான் திரட்டியுள்ளேன்.
ஒரு மனிதனின் ஆள்மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறாது, அவர் உயிரிழந்தால். அவனின் ஆத்மா இந்த உலகத்தை விட்டு செல்லாதென கூறப்படுகின்றது.
பின்னர் குறித்த மனிதனின் ஆன் மனதில் என்ன ஆசைகள் காணப்பட்டது என கண்டறிந்து அதனை நிறைவேற்றி வைத்த பின்னரே குறித்த மனிதனின் ஆத்மா இந்த உலகத்தை விட்டு செல்லும் என்ற நம்பிக்கை இந்த உலகில் காணப்பட்டு வருகின்றது.
இது உண்மையா? இது தொடர்பான தகவல்களை எனக்கு அனுப்பி வைக்கவும்.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 12:56:00 0 கருத்துகள்
புதன், 22 அக்டோபர், 2008
இந்தியாவின் சந்திரன் கனவு நினைவாகியது.
இந்தியாவினால் நிர்மானிக்கப்பட்ட சந்திராயன்-1 என்ற விண்கலம் விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.
இந்த விண்கலத்தை இன்று காலை 6.22 அளவில் இந்தியா ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சத்தீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து செலுத்தப்பட்டது.
இந்த விண்கலம் 4 கட்டங்களாக பிரிந்து, இதில் இறுதி கட்டத்தில் விண்கலம் தனது புவிப் பாதையை வெற்றிகரமாக அடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்றைய தினம் இந்திய விண்வெளி வரலாற்றில் மிகச் சிறப்புமிக்க தினம் என்றும், இன்று ஆரம்பித்த இந்த பயணம் விண்வெளி பயணத்தில் மிக முக்கியமான முயற்சி என்றும் இதன் போது உரையாற்றிய விஞ்ஞானி மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பெங்களூர் - பைலாலு கட்டுப்பாட்டு மையத்தின் உதவியுடன் சந்திராயன்-1 விண்கலம் நிலவுக்கு அருகே கொண்டு செல்லப்பட்டு, அதன் புவிவட்டப் பாதையில் நிறுத்தப்படுவதாகவும் இதற்கு 15 நாட்கள் எடுக்கும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திராயன் - 1 விண்கலம் வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டதன் மூலம் நிலவுக்கு ஆளில்லா விண்கலம் அனுப்பிய 4ஆவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவினால் அனுப்பி வைக்கப்பட்ட இந்த விண்கலத்தில் அதி நவீன வீடியோ கமராக்கள் பொறுப்பட்டுள்ளதாகவும், இந்த வீடியோ கமராக்கள் மூலம் சந்திரனின் அனைத்து பாகங்களும் படமாகப்பட்டு புமிக்கு அனுப்பி வைக்கப்படுமெனவும் இந்திய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த விண்கலம் 3500 கோடி ரூபா செலவில் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்திய எதிர்காலத்தில் 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் ஆளுடனான விண்கலம் ஒன்றை ஏவ திட்டமிட்டுள்ளதான இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 1:58:00 1 கருத்துகள்