Thursday 26 November 2009

மும்பைத் தாக்குதலுக்கு ஒரு வயசு!

தீவிரவாதிகள் பல்வேறு குறிக்கோள்களை வைத்து உலகின் பல்வேறு நாடுகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகில் தற்போது நிலைக் கொண்டுள்ள தீவிரவாதிகளில் மிக அச்சுறுத்தல் மிக்க தீவிரவாத அமைப்புக்கள் என்றால் அது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளிலேயே உள்ளன.

இந்த நாடுகளில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாத அமைப்புக்களினால் அந்த நாட்டிற்கு மட்டுமின்றி உலகில் பல நாடுகளுக்கு அவர்கள் அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர்.

இவ்வாறு உலகிலுள்ள தீவிரவாத அமைப்புக்களில் நம்பர் வன் என கூறக்கூடிய தலிபான்களினால் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் திகதி அமெரிக்காவில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.



இந்த தாக்குதலினால் சுமார் 2 ஆயிரத்து 700ற்கும் அதிகமானோர் பலியானதுடன், பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்திருந்தனர்.

2001ஆம் ஆண்டு அமெரிக்காவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட இந்த பாரிய தாக்குதலின் தாக்கத்தினால் அமெரிக்கா இன்றும் தலைதூக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைக்கு இதுவே காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் இன்றும் அமெரிக்கா வேலையிண்மை பிரச்சினை, நிதி பற்றாக்குறை உள்ளிட்ட மனித அடிப்படை பிரச்சினைகள் பலவற்றிற்கு முகம்கொடுத்து வருகின்றது.

உலகின் வல்லரசு நாட்டிற்கே தீவிரவாத தாக்குதலை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் எமது நாடுகளை போன்ற நாடுகள் எவ்வாறு அவற்றை தாங்கிக் கொள்வது.

இப்படி நான் கூறவரும் விடயம் என்னவென நிச்சயம் தெரிந்திருக்க கூடும்.

சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர், ஆசியாவில் நிலைக்கொண்டுள்ள தீவிரவாத குழுவொன்றினால் இந்திய – மும்பை நகரில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்.



அன்று நான் இந்த துறைக்கு வந்து சில மாதங்களே! ஊடகத்துறைக்கு வந்து இப்படியாக தாக்குதலை சந்தித்த முதலாவது அனுபவம். (வாழ்க்கையில் இந்த அனுபவத்தை மறக்க மாட்டேன்)

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி அன்று இரவு 10 மணியளவில் மும்பை நகரை தீவிரவாதிகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

மும்பை நகரின் மக்கள் செறிந்துள்ள சுமார் 8 இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொண்டனர்.

தெற்கு மும்பையில் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஓபராய், தாஜ் ஓட்டல்கள் உள்பட 8 முக்கிய இடங்களிலேயே தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் மூலம் தாஜ் ஓட்டலை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தீவிரவாதிகள் சுமார் 3 நாட்கள் உலகையே ஆட்டிப்படைத்தனர்.



உலகின் அனைத்து நாடுகளையும் தமது பக்கத்திற்கு திரும்பி பார்க்க வைத்தனர் அந்த தீவிரவாதிகள்.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஆசியாவை ஆட்டிப்படைத்த சுனாமியை தொடர்ந்து மீண்டும் ஆசியாவை ஆட்டிப்படைத்த ஒரு கொடூர சம்பவம் இது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் சுமார் 174 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்ற போதிலும், 200ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதன்போது 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தனர். இவ்வாறு இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இன்னும் சிலர் அதிலிருந்து மீளவில்லை என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை உலகை ஆட்டிப்படை தீவிரவாதிகளின் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், ஏனையோர் பாதுகாப்பு பிரிவினரினால் கொல்லப்பட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இன்றும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாக இந்திய பாதுகாப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.



இதேவேளை, இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிலரை பாகிஸ்தான் கைது செய்திருந்தது.

இவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கின் குற்றப்பத்திரிகை சரியாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஒரு வருடத்தின் பின்னர் பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டதாக செய்திகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன.

இதேவேளை, உலகில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாதத்தை முற்றாக அழிப்பதே உலக தலைவர்களின் நோக்கமாக அமைந்து வருகிறது.



இதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஒவ்வொரு நாளும் செய்திகளில் கேட்க மற்றும் பார்க்க கூடியதாய் உள்ளதை யாரும் அறிவார்கள் அல்லவா!

Saturday 14 November 2009

சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 வருடங்கள்!

இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டூல்கார் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரவேசித்து 15.11.2009ஆம் திகதியுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரவேசித்த சச்சின் டெண்டூல்கார், தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி எதிர்த்தாடினார்.



முதலாவதாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய சச்சின் டெண்டூல்கார், அந்த போட்டியில் அரைசதத்தையும் பெற்றுள்ளார்.

இவர் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி மும்பையில் பிறந்தார்.

இவர் அன்று முதல் இன்று வரை 159 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அவற்றில் 42 சதங்களையும், 53 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.

அத்துடன், 436 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டூல்கார், அவற்றில் 45 சதங்களையும், 91 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.

இந்திய நட்சத்திர துடுப்பாட்டவீரர் சச்சின் டெண்டூல்கார் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரத்து 773 ஒட்டங்களை பெற்றுள்ளதுடன், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17ஆயிரத்து 178 ஒட்டங்களை பெற்றுள்ளார்.

மேலும், சச்சின் டெண்டூல்காருக்கு இந்தியாவின் 2ஆவது உயரிய குடிமுறை விருதான பத்மவிபூஷன் விருதும், விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் கிடைத்துள்ளது.



கிரிக்கெட்டின் அனேகமான சாதனைகள் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டூல்காரின் வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 16-11-2009ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Tuesday 3 November 2009

இருக்கிறம் ஏமாற்றியது!


இருக்கிறம் சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் மற்றும் வலைப்பதிவர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.

3 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இயற்கையில் மாற்றத்தினால் 4 மணி பிந்தியே சந்திப்பு ஆரம்பிக்கப்பட்டது.

எனினும், நாங்கள் குறித்த நேரத்திற்கு சென்று நண்பர்களுடன் கலந்துரையாட ஆரம்பித்து விட்டோம். சுமார் 50ற்கும் மேற்பட்டோர்.

சிரேஷ்ட ஊடகவியலாளர்கள், அறிவிப்பாளர்கள், வலைப்பதிவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பல கலந்து கொண்டதை காணக்கூடியதாய் இருந்தது.

இது வலைப்பதிவுகளை பற்றிய சந்திப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் சென்ற எமக்கு ஏமாற்றம்………

இருக்கிறம் சஞ்சிகையை பற்றிய ஒரு கலந்துரையாடல். ஏன்? இருக்கிறம் சஞ்சிகையின் ஊடகவியலாளர் மாநாடு என்று தான் கூற வேண்டும்.

எத்தனை பேர் வெளி மாகாணங்களிலிருந்து வந்திருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தான்.

மட்டக்களப்பு, வவுனியா, பதுளை உள்ளிட்ட மேலும் பல இடங்களிலிருந்து கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பு ஊடகவியலாளர்களான எமக்கு பயனை அளித்த போதிலும், அவர்களுக்கு அது பயனலிக்கவில்லை என்றே கூற வேண்டும்.

இருக்கிறம் சஞ்சிகையினால் நேற்றைய தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குறித்த சந்திப்பு சிறந்தது என்றாலும், அழைப்பு தான் பிழையாயிற்று.

இது ஊடகவியலாளர்களுக்கு மாத்திரம் என்று அழைப்பை விடுத்திருந்தால் பயனலித்திருக்கும். இருக்கிறம் ஏற்பாட்டாளர்கள் வலைப்பதிவுகளில் அழைப்பை விடுத்ததனால் இது வலைப்பதிவர் சந்திப்பு என்று அனைவரால் பேசப்பட்டது.

அதனால் தான் அனைத்து வலைப்பதிவர்களும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

இனிவரும் காலங்களில் இவ்வாறான சந்திப்புக்களை ஏற்பாடு செய்யும் போது உரியவர்களை மாத்திரம் அழையுங்கள்.

இது எனது கருத்து மாத்திரம் இல்லை. சந்திப்பிற்கு வருகை தந்த சிலரின் கருத்தை தொகுத்த கருத்துக்கள்!

புதிய முகங்கள் பலரை நேற்றைய தினம் நான் சந்தித்தேன்.
அதற்காக இருக்கிறம் சஞ்சிகைக்கு எனது நன்றிகள்.

Sunday 1 November 2009

இந்திய - இலங்கை தமிழ் சினிமா!

தமிழ் சினிமா என்கின்ற போது இந்திய சினிமாவிற்கே வரவேற்ப அதிகம்!

காரணம் இந்திய சினிமாவின் தரம். அது மட்டுமா தொன்று தொட்டு வந்த விதம் அவ்வாறு அமைந்து விட்டது.

தமிழர்கள் என்ற ரீதியில் எடுத்துக் கொண்டால் எல்லாவற்றிற்கும் இந்தியா எவ்வாறாவது எமக்கு அவசியம் ஆகும் அல்லவா! அதுபோன்றே தான் இந்திய சினிமாவும்.



இலங்கையில் தமிழ் சினிமாக்கள் பல எடுக்கப்படுகின்றன. எனினும் அது இந்த நாட்டை விட்டு வெளியில் செல்லாது இங்கேயே இருந்து விடுகின்றன.

சொல்லப்போனால் மண்ணோடு மண்ணாய் போய் விடுகின்றன இலங்கை தமிழ் சினிமா.

அத்துடன், இந்தியா போன்றதொரு பெரிய நாட்டிற்கு அருகில் இருக்கும் போது எம்மால் முன்னோக்கி செல்லது கடினம். அது எனக்கு நன்றாகவே தெரியும்.

இதற்கு உதாரணமொன்று கூட சொல்ல முடியும். ஆலை மரம் அருகில் எந்தவொரு செடியையும் வளரவிடாது!



அதுபோன்று தான் இந்திய சினிமா

ஆலை மரம் - இந்தியா
ஏனைய செடிகள் - இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்

இந்தியாவிற்கு அருகில் இருப்பதனால் எம்மால் முன்னோக்கி செல்வதில் கடினமாகவுள்ளது என்கிறார்கள் உள்ளுர் பட தயாரிப்பாளர்கள்.



எனினும், அப்படி சொல்ல முடியாது திறமையான, தரமான, ரசிகர்களின் மனதை கவரும் வண்ணமான திரைப்படங்களை வழங்கினால் நிச்சயம் இந்தியாவை தாண்டி இலங்கை சினிமா செல்ல முடியும்.

என்ன இவன் இலங்கையில் படம் எடுக்க சொல்ரானா? வேணானு சொல்லுரானா? ஒண்ணுமே புரியல அப்படி தானே!

புரிந்து கொண்டால் சரி!

ஏன் இலங்கையிலும் திறமையான நடிகர்கள் இருக்கின்றார். அவர்கள் ஏன் இந்தியாவிற்கு சென்று நடிக்க வேண்டும். இங்கேயே தமது திறமைகளை காட்டி முன்வர முடியும் தானே.

இந்திய சினிமாவை எடுத்து பார்க்கும் போது அதில் முக்கிய புள்ளிகளாக காணப்படும் கலைஞர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இலங்கையிலும் திறமை உள்ளது என்பதை அவர்கள் நிருபித்துள்ளனர்.



பார்ப்போம் சினிமாவின் எதிர்காலம் இலங்கைக்கு எப்படி என!