Saturday 29 August 2009

சந்திராயனை காணவில்லையாம்!


இந்தியாவினால் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சந்திராயன்-1 விண்கலத்தின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் விண்வெளியை நோக்கி இஸ்ரோவினால் அனுப்பி வைக்கப்பட்ட சந்திராயன் - 1 விண்கலத்தின் தொலைக்காட்சி அளவிலான ஆராய்ச்சி கருவி 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி சந்திரனை சென்றடைந்துள்ளது.

அதன்மூலம் சந்திரனின் பாகங்கள் குறித்து விபரங்களை திரட்டிக் கொள்ள முடிந்துள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளின் வரிசையின் இந்தியாவையும் இணைத்த செயற்பாடுகளில் சந்திராயன் 1 முக்கிய இடத்தை வகிக்கின்றது.

அத்துடன், தற்போது இந்தியா சந்திராயன் - 2 என்ற விண்கலத்தை நிர்மாணித்து வருவதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

இவ்வாறு இந்தியாவினால் சந்திரனை நோக்கி அனுப்பி வைக்கப்பட்ட விண்கலத்திலிருந்து பல்வேறு தகவல்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

சந்திரனின் படங்கள், தற்போதைய சந்திரனின் உருவம் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் இதன்மூலம் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திராயன் 01 விண்கலம் அனுப்பி வைக்கப்பட்ட தகவல்கள் தொடர்பாக பார்வையிட:-
http://aprasadh.blogspot.com/2008/10/blog-post.html

Thursday 27 August 2009

தேவையா (விஜய்) இது!


நான் சிறிய வயதிலிருந்தே விஜயின் ரசிகன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விஜயை யாரிடமும் விட்டுக் கொடுத்து பேசமாட்டேன்.

அப்படி இருந்த என்னை இன்று இப்படியொரு பதிவை போட வைத்து விட்டார் விஜய்! ஏன்?

தனக்கென ஒரு பாதை வைத்துக் கொண்டால் ஒருவன் நிச்சயம் உயர்வான இடத்தில் போவது உறுதி! அப்படியான பலரை நாம் கண்டுள்ளோம்.

உதாரணமாக சினிமாவில் சிவாஜி, எம்.ஜி.ஆர். ரஜனி, கமல், விக்ரம் தற்போது அந்த பாதையில் சூர்யா ஆகியோர்.

விஜயும் இதே பாதையில் தான் இவ்வளவு காலமும் இருந்தார். அதற்கு உதாரணமாக பலவற்றை கூற முடியும். ஆனால் ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன்.

அது தான் அவரின் ஸ்டைல், அந்த ஸ்டைலை வைத்துக் கொண்டு இன்று பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படியான ஒரு இடம் கிடைத்திருக்கும் விஜய்க்கு ஏன் இப்படி ஒரு ஆசை!
அரசியலில் போக போவதாக கடந்த காலங்களில வெளியான செய்திகளை அவர் தற்போது உறுதியான உறுதிப்படுத்தி விட்டார்.

கடந்த ஞாயிற்றுகிழமை விஜய் ராகுல் காந்தியை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், இன்று காலை இலங்கை பத்திரிகைகளிலும் அந்த செய்தி வெளியாகியிருந்தது.

இந்த சந்திப்பு நீண்ட நேரமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது அவர்கள் இருவரும் அரசியல் தொடர்பான கருத்துக்களை பரிமாற்றிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜயின் இந்த நிலைக்கு காரணம் விஜயின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தான்!
ஒரு பெரிய குழி விஜய்க்காக காத்திருக்கிறது. நிச்சயம் அதில் அவர் வீழ்வார். அப்போது அவரை அவருடைய அப்பா இல்லை யாராலும் காப்பாற்ற முடியாது!

ஒரு நல்ல வழியை ஆண்டவன் தனக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் போது ஏன் தேவையில்லாதவற்றிற்கு ஆசை. வேண்டாம் தயவு செய்து இதை நிறுத்திக் கொள்ளுங்கள் விஜய்!

இவ்வாறு அவர் அரசியலுக்குச் செல்லும் பட்சத்தில் அவருடைய வாழ்க்கை கேள்வியாகிவிடும். இப்போ உள்ள வழி தான் சரி விஜய்க்கு!


அனைத்தும் ஆண்டவனின் கைகளில். அரசியல் வாழ்க்கையிலும் வெற்றி பெற்றால் சந்தேஷம் தான் எனக்கு!

Tuesday 25 August 2009

இது என்ன தெரியுமா!

















மனிதனின் கைகள் எப்படி! சத்தியமா என்னுடைய கைகள் இல்லை!

Monday 24 August 2009

உச்சக்கட்டம்!


எந்தவொரு முக்கியமான நிகழ்விற்கும் முழுமையாக சமூகமளிக்க முடியாது போவது எனக்கு இயற்கை! இத்தனை வருடமும் இப்படி நடந்து வந்த எனக்கு மீண்டும் அதே நடந்து விட்டது.

நேற்று நடைபெற்ற வலைப்பதிவாளர்களின் சந்திப்பை பற்றி தான் சொல்லுறேன்!

ஞாயிற்றுகிழமை எனக்கு அதிகாலை முதல் பகல் 12 மணி வரையிலான வேலை நேரம். அதனால் எனக்கு அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை.

ஆனால், நிகழ்வை கொஞ்ச நேரம் இணையத்தினூடாக பார்த்துக் கொண்டிருந்தேன். இணையத்தினூடாக வழங்கி நண்பனுக்கு எனது நன்றிகள்!

எனினும், சந்திப்பு முடியும் முன்பு அங்கு சென்று விட்டேன்! சந்திப்பு முடிவதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பு!

உச்சக்கட்டம் சுப்பர். முழுமையாக கலந்து கொள்ள முடியவில்லை என்பது மனதிற்கு கவலை தான். பரவாயில்லை என்ன செய்ய.

மீண்டும் சந்திப்பு இடம்பெறும் அல்லவா! அன்று நிச்சயமாக முழுமையாக கலந்து கொள்வேன்!

Monday 17 August 2009

100 - இவ்வளவு தானா!


நான் எனது 100ஆவது பதிவையும் இட்டு சதம் அடித்துள்ளேன்.

எனது பதிவுலகை சற்று முன்நோக்கி சென்று பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன்!

இந்த பதிவுலக பிரவேசத்திற்கு ஒரு முக்கிய காரணம் வெற்றி என்று கூறினால், அது தான் சரி!

கடந்த 2008ஆம் ஆண்டு வெற்றி எவ்.எம்மிற்கு வேலைக்காக வந்த வேளையில், மேலதிக நேரம் எனக்கு கூடுதலாக இருந்தது. நான் இங்கு வேலைக்கு வந்த காலப்பகுதியில் எனக்கு யாரையும் தெரியாது.

எனது தனிமைக்கு துணையாக இருந்தது, இணையம் ஒன்று தான்! நான் இங்கு வேலைக்கு வரும் முன்பே நான் புலோக் ஒன்றை செய்து வைத்திருந்தேன்!

அப்போது தான் எனக்கு இந்த புலோக் எனது தனிமையை போக்க உதவியது.

எனது மேலதிக நேரங்களில் நான் சில பதிவுகளை இட ஆரம்பித்தேன். முன்பே ஆரம்பித்து வைத்திருந்த எனது புலோக்கை அலங்காரப்படுத்தினேன்.

எனது புலோக் மட்டுமின்றி வெற்றிக்கான செய்தி புலோக் ஒன்றையும் ஆரம்பித்தேன்! ஆனால் அது இன்று இல்லை.

இப்படி இருக்கும் காலங்களில் தான் என்னோடு புலோக் செய்யும் இன்னுமொருவரை சந்தித்தேன். அவர் தான் லோஷன் அண்ணா!



நான் வெற்றிக்கு வேலைக்குவரும் போது செய்திப்பிரிவு ஒரு இடத்திலும், நிகழ்ச்சி பிரிவு வேறொரு இடத்திலும் இருந்தது. அதனால் நான் லோஷன் அண்ணாவை சில நாட்கள் சென்றே சந்திக்க நேர்ந்தது.

ஒரு சில மாதங்களின் பின்னர் இரு பிரிவுகளும் ஒரு இடத்திலேயே இயங்க ஆரம்பித்ததும், நாங்கள் இருவரும் சேர்ந்தே புலோக் செய்வதை தொடர்ந்தோம்.

இப்படியான காலங்களில் மற்றுமொருவர் எங்களுடன் சேர்ந்தார், அவர் தான் ஹிஷாம் அண்ணா,



அவரும் எங்களுடன் சேர்ந்தார். இப்படியே எனது பதிவுகள் தொடர்ந்தது.

எனக்கு போட்டியாக புலோக் செய்யும் மற்றுமொருவர் இருக்கிறார் வெற்றியில், வேறு யார் சதீஷன்.


இவர் சில மாதங்களுக்கு முன்பே வெற்றியில் இணைந்த ஒருவர். வெற்றியில் சேர்ந்து சில நாட்களிலேயே இவரும் வந்து எங்களுடன் சேர்ந்து விட்டார்.

இன்னும் ஒருவரும் இப்போது எம்முடன் சேர்ந்து விட்டார். அவர் தான் ரஜனிகாந்தன்.


இது தான் எனது புலோக்கின் வரலாறு! எனது 100ஆவது பதிவை இட்டு, இது 101ஆவது பதிவாக எனது வரலாற்றை இடுகிறேன்!
இப்போது எனது மற்றுமொரு புலோக் வெற்றிகாரமாக இணையத்தில் உலா வந்துக் கொண்டிருக்கிறது.
இப்படி தனியாக பதிவுகளை இட்ட காலம் சென்று இன்று பதிவுலகத்திற்கு ஒரு புதிய உதயம்! பதிவர்கள் சந்திப்பு. எதிர்வரும் 23ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெறவுள்ளது.
அனைவரும் கலந்து கொள்ளுங்கள்!

Sunday 16 August 2009

மறைமுக செயல் அம்பலம்!



தற்போது உலகில் தொழிநுட்ப வளர்ச்சியானது மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

இந்த தொழிநுட்ப வளர்ச்சியானது இளைஞர்களின் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றமை யாரும் அறிந்தவையே!

அதிலும் ஆசிய இளைஞர்கள் மத்தியில் தொழிநுட்பமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் கணினி மற்றும் கையடக்க தொலைபேசிகளின் பாவனையே அதிகளவில் காணக்கூடியதாய் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிலும் கையடக்க தொலைபேசி பாவனை முதன்மை பெறுகின்றதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

இப்படி இருக்கும் பட்சத்தில், கடந்த 2 மாதக்காலப் பகுதியாக எமது கையடக்க தொலைபேசி கட்டணம் அதிகரித்துள்ளதை என்னால் உணரக்கூடியதாய் இருந்தது.

சுமார் 10 நாட்களில் மாத்திரம் எனது தொலைபேசி அழைப்பு கட்டணத்தின் ஒரு மாதக்கால கட்டண தொகை வந்துள்ளதை என்னால் அறிய முடிந்தது.

இதை தொடர்ந்து நான் தொலைபேசி நிறுவனத்திற்கு சென்று எனது முன்னைய மாதங்களின் கட்டணங்களின் விபரங்களை திரட்டியதுடன், எனது வெளிச்செல்லும் அழைப்பு விபரங்களையும் பெற்றுக் கொண்டேன்.



அதை எடுத்து பரிசிலித்து பார்க்கும் போது கட்டணம் அதிகமாக குறித்த தொலைபேசி நிறுவனம் அறவிட்டுள்ளதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.

அந்த தகவல்களை எடுத்துக் கொண்டு எனது நிறுவனத்தில் கடமையாற்றும், முன்பு குறித்த கையடக்க தொலைபேசி நிறுவனத்தில் கடமையாற்றிய ஒருவரிடம் விசாரித்தேன்!

அவர் அவருடைய நண்பரிடம் உடனடியாக தொலைபேசியில் தொடர்புக் கொண்டு இது தொடர்பான தகவல்களை கேட்டார்.

அப்போது தான் தெரிய வந்தது, கடந்த இரு மாத காலங்களாக வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்காது மேலதிகமாக இரு வரி முறைகளை கட்டணத்துடன் உள்ளடக்கியுள்ளமை.

இந்த வரியினை இலங்கையிலுள்ள அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் உள்ளடக்குகின்றமை எனக்கு அன்று தான் தெரியும்.

தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் உடனடி அறிவித்தலை அடுத்தே இந்த கட்டண அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்காது கட்டணத்தை அதிகரித்தைமைக்காக தற்போது கொழும்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்களின் போது வாடிக்கையாளர்களுக்கு அறிவிக்காது இவ்வாறு கட்டண அதிகரிப்பினை மேற்கொண்டமை அநீயாயமான செயல் அல்லவா!

இதற்கான முடிவு விரைவில் கிடைக்கும். தொலைபேசி பாவனையின் போது உங்களாலேயே உணர முடியும் இந்த கட்டண அதிகரிப்பை!

இது தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வெளியிடவில்லை. அதற்கான காரணங்கள் இருக்கின்ற போதிலும் என்னால் அதை இந்த பதிவில் கூற முடியாவில்லை.

எனது இந்த பதிவின் நோக்கம், இந்த தகவலை உங்களுக்கு அறிவிப்பதே!

இது எனது 100ஆவது பதிவு. நிச்சயம் வெற்றி தான்!

இது சுதந்திர தினமா?


சுதந்திர தினமென்றால் நாட்டின் அனைத்து மக்களும் ஒன்று திரண்டு சந்தோஷமாக கொண்டாடும் ஒரு தினமாகும். ஆங்கிலேயர்களிடமிருந்து நாட்டை முழுமையாக கைப்பற்றியதை கொண்டாடும் போது எப்படி சந்தோஷம் இருக்க வேண்டும்.

சுதந்திர தின நிகழ்வென்கிற போது நாட்டின் முக்கிய பிரமுகர்கள் நாட்டின் முக்கிய இடத்தில் சேர்ந்து தேசிய கொடியை ஏற்றி, இராணுவ அணி வகுப்பு, கடற்படையினரின் அணி வகுப்பு, விமானப்படையினரின் சாதசங்கள் உட்பட மேலும் பல அம்சங்கள் இடம்பெற வேண்டும் அல்லா!.

அது தானே சுதந்திர தினத்திற்கு நாம் கொடுக்கும் மரியாதை!

ஆனால் தற்போது சுதந்திர தினம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தையே மாற்றி விட்டார்கள்.

இப்போது எப்படி தெரியுமா சுதந்திர தினம் கொண்டாடுகின்றார்கள். ஒரு கட்டடத்திற்குள் மாத்திரம்.

நாட்டு மக்களுக்கு தெரியாது நாட்டின் எந்த பகுதியில் சுதந்திர தினத்தை கொண்டாடுகிறார்கள் என.

இது நாட்டிற்கு கிடைத்த சுதந்திரமா?

இதற்கான காரணம் தீவிரவாத அச்சுறுத்தல். ஏன்? இப்படி,

எந்த நாட்டை கூறுகிறேன் தெரியுமா? வேறு எந்த நாட்டை கடந்த 14ஆம் திகதி தனது 62ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிய பாகிஸ்தானை தான்!



பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் அன்றைய தினம் சுதந்திர தினத்தை கட்டடத்திற்குள் கொண்டாடியுள்ளனர்.

நாட்டு மக்களுக்கு தெரியாது எங்கே சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றனவென.

இது நாட்டிற்கு கிடைத்த சுதந்திரமா?

பாதுகாப்புக்கள் இருக்க வேண்டும், காரணம் நிகழ்வில் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் அல்லவா!

இப்படியான சுதந்திர தினத்தை பாகிஸ்தான் மட்டுமன்றி இன்னும் பல நாடுகள் கொண்டாடி வருகின்றன.



ஏன் இந்தியா தனது 63ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியது.

சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெறும் இடத்திற்கு மேல் சுமார் 7 மணி நேரம் விமானங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதுவும் சுதந்திர தினமா?

நான் இதை நாட்டின் குறையாக சொல்லவில்லை. இதுவரை எமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை எனதான் கூறுகிறேன்!

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஒவ்வொரு நிமிடமும் நெருப்பின் மேல் நடப்பது போல இருக்கு.

எங்கே எப்போது என்ன நடக்கும் என தெரியாது பயந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்!

உலகில் இன்று தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சில தீவிரவாத அமைப்புக்கள் காரணமே இன்றி செயற்பட்டு வருகின்றன.

இவ்வாறு உலகில் நிலைக் கொண்டுள்ள தீவிரவாத அமைப்புக்களில் முதன்மையில் தலிபான்கள் உள்ளனர்.

அவர்களை முற்றாக அழிக்கும் பட்சத்தில் உலகில் தீவிரவாதம் என்ற சொல்லை ஓரளவாவது மறக்க முடியும்.

இது நாட்டிற்கான சுதந்திரமல்ல, உலகிற்கான சுதந்திரம். ஒழிக்க ஒன்றுபடுவோம்!

Saturday 15 August 2009

ஷாருகான் கைது!


இந்திய - பொலிவூட் திரைப்பட முன்னணி நடிகர் ஷாருகான் இன்று அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அமெரிக்க – நியூஜேர்சி – நெவாக் விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு சுமார் 2 மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் இவர் தன்னை பற்றி தகவல்களை பாதுகாப்பு பிரிவினரிடம் கூறி, அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்திடம் கேட்குமாறும் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட அமெரிக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர், இந்த தகவல்களை அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

பின்னர் அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரகம் தலையிட்டு அவரை விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதற்காக இவரை கைது செய்துள்ளனர் தெரியுமா, பெயர் தான் காரணம்.

ஷாருகான் அதில் வரும் கான் என்ற பெயர் தான் இதற்கெல்லாம் காரணம்.

இவர் ஒரு தீவிரவாதியான இருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரிலேயே கைது செய்யப்பட்டதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், கடந்த 2008ஆம் ஆண்டு அமெரிக்காவில் முக்கிய 50 வெளிநாட்டு பிரஜைகளில் ஷாருகானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday 13 August 2009

என்ன கொடுமை சார்!


உலக அழிவென்றால் இது தானா. ஒன்று யுத்தம் அல்லது இயற்கை அழிவு.

ஏன் இவ்வாறான அழிவுகள் தொடர்ச்சியாக வந்துக் கொண்டே இருக்கின்றன.

இன்று காலை நான் வேலைக்கு வந்து எனது வேலைகளை ஆரம்பித்தேன். செய்திகளை சேகரித்துக் கொண்டிருக்கும் போது ஒரு அதிர்ச்சியான செய்தி என் கண்ணில் தென்பட்டது.

உடனே அந்த செய்தியை நான் எடுத்து இன்று காலை நேர செய்திக்கு இணைத்துக் கொண்டேன்.

பங்களதேஷில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின் செய்தி தான்!

சரி என்னவென்று வாசித்து பார்ப்போம் என்றால் ஆண்டொன்றில் அரைவாசிக்கு மேலான நாட்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பங்களதேஷில்.

இன்று காலை வெற்றியில் நான் இணைத்த செய்தியை இந்த பதிவில் இணைத்துள்ளேன்.

பங்களதேஷில் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகரித்து வருவதாக அந்த நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமியின் காரணமாக நிலத்திற்கடியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பங்களதேஷில் கடந்த 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2009ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் ரிச்டர் அளவில் 4ற்கு மேல் 86 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

அத்துடன், 2007ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2008ஆம் ஆண்டு ஜுலை மாதம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் ரிச்டர் அளவில் 5ற்கு மேலான நிலநடுக்கங்கள் 95 பதிவாகியுள்ளதாக பங்களதேஷின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கங்கள் அனைத்தும் டாக்காவிலிருந்து 600 கிலோமீற்றர் தொலைவிலேயே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பங்களதேஷில் 2006ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையான காலப்பகுதியில் ரிச்டர் அளவில் 7ற்கு மேலான நிலநடுக்கங்கள் 4 பதிவாகியுள்ளன.

இவ்வாறான நிலநடுக்கங்கள் ஏற்படும் பட்சத்தில் அங்கு சுமார் 46 சதவீதமான பகுதிகள் பாதிக்கப்படும் என பங்களதேஷின் பொறியியல் தொழில்நுட்ப பல்கலைகழகம் மேற்கொண்ட ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.

இது தான் செய்தி!

சரி வேறு என்ன செய்திகள் என்று பார்த்தால் ஜப்பானில் இன்றும் நிலநடுக்கம். எப்படி இருக்கும். அது மட்டுமா பன்றிக் காய்ச்சல் அடுத்த பக்கம்! இந்தியாவில் 17 பேரும் பலியாம்! சரி அது தான் அப்படி இருக்க இலங்கையிலும் ஒரு சம்பவம் நிகழப்போவதாக வீரகேசரியில் செய்தி!

என்ன தான் அந்த செய்தி, இலங்கையில் இன்று அதிகாலை வேளையில் விண்கற்கல் விழும் என ஆர்தர் சி கிளார்க் மையத்தின் எதிர்வு கூறல் செய்தி தான் அது.

அதுவும் ஒரே தடவையில் 1500ற்கும் மேற்பட்ட விண்கற்கள் ப+மியை நோக்கி அதுவும் இலங்கையை நோக்கி வருகிறதாம்!

இவற்றில் சில கற்கல் பகல் வேளையிலும் விழும் என ஆர்தர் சி கிளார்க் மையத்தின் எதிர்வு கூறியுள்ளது.

இப்படியான செய்திகள் காலையில் நான் வாசித்தக் கொண்டிருக்கும் போது மற்றுமொரு செய்தி, தாய்லாந்தில் தற்போது ஏற்பட்டுள்ள மண்சரிவினால் சுமார் 700 பேர் வரை உயிரிழந்திருக்கலாமென்ற செய்தி.

விடியக் காலையில் தனியாக இருந்து இவ்வாறான செய்திகளை கேட்கும் போது மனம் எப்படியிருக்கும்!

இப்படியாக செய்திகளை கேட்கும் போது, ஜென்மங்கள் எத்தனை எடுத்தாலும் நன்மைகளை மாத்திரமே செய்ய வேண்டும்.

இவ்வாறான மனித பேரழிவின் காரணம், உலகிலுள்ள தீயவை அழிந்து புதிய உலகமொன்று உருவாவதே. அவ்வாறான உலகம் 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதியாம்!

போதும் நிறுத்து!