Tuesday 19 July 2011

ஆலயத்தின் புனிதம் இழிவுபடுமா?

இந்துக்களின் முக்கிய திருத்தலங்களை கொண்டு அமைந்த இடமாக கருதப்படும் நாடு இந்தியா.

இந்தியாவின் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாபசாமி ஆலயத்தில் அண்மையில் பல லட்சம் கோடி ரூபா மதிப்புள்ள தங்கம் மற்றும் வைரம் என விலைமதிக்க முடியாத ஆபரணங்கள் அரசாங்கத்தினால் கண்டுப்பிடிக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டன.



இவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட ஆபரணங்களை அடுத்து இந்தியாவின் ஏனைய ஆலயங்களும் தங்க ஆபரணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், சன் மற்றும் விஜய் ஆகிய தொலைக்காட்சிகள் நேற்றைய தினம் ஒளிப்பரப்பிய நிஜம் மற்றும் நடந்தது என்ன ஆகிய நிகழ்ச்சிகளில் ஏனையஆலயங்களிலும் ஆபரணங்கள் உள்ளதாக செய்திகளை வெளியிட்டன.

இவ்வாறு வெளியிடப்பட்ட செய்தி எந்தளவிற்கு உண்மை என்பது எனக்கு தெரியாது. நான் அங்கு சென்று பார்க்கவும் இல்லை. ஒரு யுகத்திலேயே நான் இதனை எழுதுகின்றேன்.

பத்மநாபசாமி ஆலயத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங்களை வைத்து இந்து மதத்தின் தொண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.



இந்து மதத்தின் தொண்மையை பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டவர்களுக்கு தற்போது புரிந்திருக்கும் இந்துமதத்தை பற்றி.

இந்நிலையில் தமிழகத்திலுள்ள பல ஆலயங்கள் தொடர்பாக தற்போது பல்வேறு செய்திகள் வெளிவந்த நிலையில், சில ஆலயங்களில் சுரங்க பாதைகள் மற்றும் வைப்பகங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறான கருத்துக்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுத்துவரும் இந்திய அரசு, ஒவ்வொரு தனிநபர்களினாலும் எழுப்பப்படும் சந்தேகங்களை தீர்ப்பதற்காக அனைத்து ஆலயங்களின் சிலைகளை உடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது முற்று முழுதாக தவறான விடயம். முழுமையாக ஆராய்ந்த பின்னரே ஆலயங்களை சோதனையிட வேண்டும் என்பதே எனது கருத்து.

ஆலயங்களின் கண்டெடுக்கப்படும் ஆபரணங்களை வைத்து பல நன்மைகளை செய்யலாம். ஒரு ஆலயத்தில் இவ்வாறான ஆபரணங்கள் கிடைத்தது என்றால், எல்லா ஆலயத்திலும் ஆபரணங்கள் இருக்கும் என்பது தவறு.

ஆலயங்களின் புனிதத்தை இழிவுப்படுத்த வேண்டாம்.