Sunday 4 January 2009

மைக்ரோசாஃப்ட்டின் ஊழியர்கள் தீடீர் வெளியேற்றம்


சர்வதேச அளவில் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 15 ஆயிரம் பணியிடங்களை குறைக்க முடிவூ செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக கோடீஸ்வரரான பில்கேட்ஸ் தலைமையில் முன்னணி நிறுவனமான மைக்ரோசாஃப்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தில் கடந்த செப்டம்பர் மாத நிலவரப்படி 91 ஆயிரம் பேர் நிரந்தர ஊழியர்களாக பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

இதனால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் 32 ஆண்டுகளில் இல்லாத அளவூக்கு 15 ஆயிரம் ஊழியர்களை தற்போது குறைக்க முடிவூ செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியூள்ளன.

இந்த மாதத்துக்குள் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அந்நிறுவன ஊடகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மாதம் 15 ஆம் திகதிக்குப் பிறகு இந்த முடிவெடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

1 comments:

S.Lankeswaran said...

அதிக சம்பளம் நிரந்தரமில்லா வேலை. இது தான் இன்றைய மென்பொருளாலர்களின் நிலை.