Sunday 2 November 2008

......சுனாமியின் ஆவேச பிறப்பு 600 அல்லது 700 ஆண்டுகளில்.......


சுனாமி மீண்டும் எப்போது ஏற்படும் என தற்போது ஆராயப்பட்டு வருகின்றன.

2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி காலை 9.20, நினைத்தாலே இன்றும் கண்களில் கண்ணீர் ஆறாக பெருகும். நினைத்தாலே உடல் நடுங்கும்.

பல்லாயிர கணக்கான ஆசைகளுடன் வாழ்ந்தவர்கள் அனைவரையும், ஒரு நொடியில் பல்லாயிர பேரை நினைத்து அழ வைத்த நாள் 2004.12.26ஆம் திகதி.

வேண்டாம், இனி அப்படிப்பட்ட ஒரு நாள்.

இப்படிப்பட்ட ஒரு நாள் உலகிற்கு தேவையில்லை என்ற நல்ல எண்ணத்துடன் தான் தற்போது ஆராய்ச்சியாளர்கள் எப்போது சுனாதி மீண்டும் உருவெடுக்கும் என ஆராய தொடங்கி விட்டார்கள்.

இதற்காக இந்தோனேஷிய புவியியல் நிபுணர்களான ஆர்க் சென்ட் மாநில பல்கலைகழகத்தைச் சேர்ந்த முன்னாள் புவியியல் ஆராய்ச்சியாளர் கரீம் மோனாக் என்பவர் தலைமையில் ஆராயப்பட்டு வருகிறது.

இதன்மூலம் கண்டு பிடிக்கப்பட்ட அறிக்கையின் படி, 400 ஆண்டுகளுக்கு பின்னர் தான் 2004ஆம் ஆண்டு சுனாமி பிறந்துள்ளது.

தற்போது புவி வெப்பமடைதல் மற்றும் சுற்று சூழல் ஆகியவற்றை வைத்து இந்த ஆராய்ச்சியாளர்கள் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

இந்த அறிக்கையின் படி, இன்னும் 600 அல்லது 700 ஆண்டுகளுக்கு பின்னர் தான் மீண்டும் சுனாமி பிறப்பெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“உலகின் சாபம் அழிவுகள் நிகழ வேண்டும் என்பது, இதை யாராலும் நிறுத்த முடியாது, எனினும் அழிவிலிருந்து எம்மை பாதுகாக்க முடியும்” அதற்கான ஆராய்ச்சியின் முடிவுதான் இது.

இந்த ஆராய்ச்சி முடிவுகளை வரப்போகும் எமது எதிர்கால சந்ததியினருக்கு செல்லி வளர்க்க வேண்டும்.

அவ்வாறு செல்லி வளர்ப்போமானால் அவர்களின் பாதுகாப்பை அவர்கள் தேடிக் கொள்வார்கள்.

0 comments: