Sunday 23 November 2008

மனிதனின் மூளை கணனி.


மனித மூளையை போல் இயங்கும் கணனி ஒன்றை தயாரிக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது.

அமெரிக்காவின் கணனி நிறுவனமான ஐ.பி.எம் இதனை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை கூடுதலான உதவிகளை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையின் பங்காக 25 ஆயிரம் கோடி ரூபா முதற்கட்ட பணிக்காக வழங்கப்பட்டுள்ளது.

இந்த மனித கணனியை உருவாக்கும் முயற்சியில் ஐ.பி.எம் மற்றும் அமெரிக்காவிலுள்ள 5 பல்கலைகழக பேராசிரியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக மூளை நரம்பியல் மற்றும் மனோதத்துவ டாக்டர்கள் நியமிக்கப்பட்டு இந்த மனித மூளையை போல் இயங்கும் கணனியை உருவாக்குகின்றனர்.

மனிதனின் மூளை மற்றும் செல்கள் எப்படி செயற்படும் எனவும் நரம்புகள் எப்படி இயங்கும் என்பது தொடர்பான முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த முயற்சி நிறைவடைய இன்னும் பல ஆண்டுகள் எதிர்பார்க்க வேண்டும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எதை செய்தாலும் மனிதனை போல் ஆகுமா?

மனிதனின் தைரியம்....... மனிதனின் செயற்பாடு.... முடியாதில்ல!

அந்த கணனியை கூட உருவாக்குபவன் மனிதன் தானே!

0 comments: