Monday 3 November 2008

மனிதனின் ஆசை இவ்வளவு தான்....


ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைன் மிக ஆடம்பரமாக ஈராக்கில் வாழ்ந்து வந்தது அனைவரும் அறிந்த விடயமே.

ஆனால், எப்படிப்பட்ட ஆரம்பரங்களை அனுபவித்தார் தெரியுமா?

கேள்விப்பட்டது மட்டும் தான்.....ஆனால்.......பார்க்க வில்லை......நானும் தான் பார்க்கல.....

ஆனால் கேள்விப்பட்டன்......

எப்படி தெரியுமா?

பல சொகுசு வீடுகள்..... பல வாகனங்கள்......என பல சொகுசு வாழ்க்கை......

அதில் ஒன்று தான் செகுசு கப்பல்......

சாதம் உசைன் ஆட்சியிலிருந்த போது டென்மார்க் நிறுவனமொன்று அவருக்கு சொகுசு கப்பல் ஒன்றை வழங்கியிருந்தது.

இந்த கப்பல் 270 அடி நீளம், கப்பலில் நீச்சல் குளம், சினிமா தியேட்டர், ஹெலிகொப்டர் தளம், தங்ககட்டில் படுக்கை அறை, தங்கத்திலான குளியலறை என இன்னும் பல வசதிகளுடன் இவருக்கு இந்த கப்பலை வழங்கியிருந்து.

ஆனால், அவர் அந்த கப்பலில் ஏறி பார்த்ததில்லையாம்... கப்பலின் மேல் உள்ள ஆசையை கூட நிறைவேற்றிக் கொள்ளமுடிய வில்லை...

காரணம் தான்...அரசியல் எதிரிகள்......கப்பலில் ஏறினால்... எதிரிகள் தாக்குதல் நடத்திவிட்டால் என்ற அச்சம்....

சவூதி அரேபியாவில் உள்ள துறைமுகம் ஒன்றில் பல வருடங்கள் இந்த கப்பல் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இப்படி இருக்கும் போது, ஜோர்தானில் உள்ள தனியார் நிறுவனமொன்று அந்த கப்பலுக்கு உரிமை கோர தொடங்கி விட்டது.

சதான் உசைன் குறித்த கப்பலை தமக்கு கொடுத்து விட்டதாக கூறி பிரான்ஸ் நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஆனால், அந்த கப்பல் ஈராக் நாட்டுக்கு சொந்தமானதென தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இப்போது அந்த கப்பலை அந்த நாட்டு அரசாங்கத்தினால் ஏலம் விடப்பட்டுள்ளது.

எவ்வளவாக இருக்கும் ஏலத் தொகை?

188 கோடி ரூபா...................

முடியுமா நம்மல? பார்ப்போம்....யாருக்கு சொந்தமாகுனு?

3 comments:

Senthil said...

me the firstu

useful info

ஆட்காட்டி said...

கொஞ்சம் தான்.

நிலாமதி said...

ஆசைக்கப்பல் கவிண்டு (கவிழ்ந்து ) போச்சு ....அனுபவிக்க கொடுப்பினையும்
வேண்டும் .