Tuesday 1 September 2009

பதிவர்களுக்கான பதிவு!



பதிவுகள் இப்போது வியாபாரமாகி விட்டன. நாங்கள் பதிவுகளை இடுவதற்கான பல காரணங்கள் உள்ளன. அதை புரிந்துக் கொள்ளாமல் சிலர் பதிவுகளை இடுகின்றனர்.

அதிலும் சில பதிவர்கள் தமக்கு நாள் ஒன்றுக்கு எத்தனை வருகைகள் என பார்த்துக் கொள்வதற்காகவே பதிவுகளை இடுகின்றனர்.

ஓகே அதுவும் சரி தான்! அதை நான் பிழை என சொல்ல மாட்டேன். காரணம் எமது தளத்தில் இட்ட பதிவை எத்தனை பேர் பார்த்து அதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர் என தெரிந்து கொண்டால் தான், அந்த பதிவில் நாங்கள் வெளிப்படுத்தி கருத்துக்களின் பெறுமதியை எம்மால் புரிந்துக் கொள்ள முடியும்.

அப்போது தான் எமது அறிவும் அதிகரிக்க வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது.

அடுத்த விடயம் தான், பதிவுகளுக்கு வாக்களித்தல்! நீங்கள் எமக்கு வாக்களியுங்கள், நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன் என நண்பர்களிடம் கூறி தமக்கு தானே, தமது பதிவை வலுமைப்படுத்திக் கொள்கின்றனர்.

இது சரியா? நிச்சயம் இது பிழை என தான் என்னால் கூற முடிகிறது.



வேண்டாம், உண்மையான பதிவின் பெறுமதியை நாங்கள் அறிந்து கொண்டு எமது அறிவை வளர்த்துக் கொள்வோம்.

மற்றுமொரு விடயமும் உள்ளது. நான் முன்னதாக கூறியதை போல ஏன் நாங்கள் பதிவை இடுகிறோம் என தெரியாது, எல்லாரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என மனதில் நினைத்து பதிவுகளை இடுதல்.

அவ்வாறு இடும் பதிவுகளில் அர்த்தமொன்றும் இல்லை. (சும்மா)

நாங்கள் வெளியிடும் கருத்துக்கள் ஒரு காலத்தில் எமக்கே தேவைப்படலாம். அதனை நினைவில் வைத்து பதிவுகளை தளங்களில் இடவும்.

இதுபோல நான் கடந்த ஆண்டு எமது புலோக்கில் இட்ட பதிவு எனக்கு தேவைப்பட்டது.



சந்திராயன் 01 விண்கலத்தை பற்றி தகவல்களை செய்திகளில் சேர்த்துக் கொள்ள எனக்கு அந்த பதிவு தேவைப்பட்டது.

அதுபோல பலருக்கும் பல்வேறு கருத்துக்கள் ஒவ்வொரு நாளும் தேவைப்படலாம்.

அதனால் தயவு செய்து நீங்கள் வெளியிடும் பதிவு பலருக்கும் உபயோகப்படும் பதிவாக அமைய வேண்டும்.

இது உங்கள் சொத்து எப்போதிருந்தாலும் உங்களுக்கே தான்.
அதில் ஏன் தேவையற்ற, கற்பனை விடயங்கள்! (கவிதைக்கு அழகு கற்பனையும், பொய்யும்) பதிவு கவிதையாயின் இது சரி!

கற்பனையாக இருந்தாலும் அது மற்றவருக்கு தேவைப்படுமாயின். அதுபோதும் எமக்கு.

பதிவுகளில் போட்டி வேண்டும். பொறாமை வேண்டாம்!

3 comments:

Prapa said...

சரியான விஷயங்கள் அருண்.....எல்லோரும் புரிந்துகொண்டால் சரி.

Admin said...

நல்ல விடயத்தைச் சொல்லி இருக்கின்றீர்கள்.

Sivatharisan said...

நல்ல கருத்துக்கள் சரியான விஷயங்கள் நிங்கள் குறியவை பற்றி எல்லோரும் கருத்தில் கொண்டால் சரி