Monday 21 March 2011

2012யை வரவேற்றுக் கொண்டிருக்கும் நாடுகள்!

2012யை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் நாட்களை அச்சத்துடன் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

2012 டிசம்பர் 21ஆம் திகதி இந்த உலகில் என்ன நிகழப் போகின்றது என்ற அச்சமே தற்போது மக்கள் மத்தியில் அதிகம் காணப்படுகின்றன.



இந்நிலையில், உலக அழிவானது 2012 என்கின்ற போதிலும், தற்போதே அதன் தாக்கங்கள் ஆரம்பமாகி விட்டதை நாம் உணர்கின்றோம்.

இதன்படி, கடந்த சில வருடங்களாக உலகில் அழிவுகளுடனான மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

2000ஆம் ஆண்டு ஆரம்பம் முதலே உலகம் தனது அழிவை சந்திக்க ஆரம்பித்திருந்ததுடன், 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.



அத்துடன், அக்காலப்பகுதியில் ஏற்பட்ட பாரிய அழிவான சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாடுகள் சுமார் 248 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான நட்டத்தை எதிர்கொண்டிருந்தது.

இதனால் உலகம் மக்களை மாத்திரமன்றி, உலகின் சொத்துக்களையும் முற்றாகவே இழந்திருந்தது.

இதையடுத்து, 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி ஹெய்டியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான மனித உயிர்களை காவுக் கொள்ளப்பட்டிருந்தன.



அத்துடன், ஹெய்டியின் போர்ட்-ஓ-பிரின்ஸில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பின் ஏற்பட்ட விளைவுகளினால் அங்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்பட்டிருந்தன.



அதனால் ஒவ்வொரு நாளும் பல மனித உயிர்கள் காவுக் கொள்ளப்பட்டமை யாவரும் அறிந்த உண்மை.

இதனால், அந்நாடு பல்வேறு இன்னல்களை தொடர்ச்சியாக இன்று வரை சந்தித்து வருகின்றது.

இந்நிலையில், உலகம் பல பிரச்சினைகளை சந்தித்து வருகின்ற இத்தருணமானது, 2012 என்ற அதிர்த்தி தரும் ஆண்டின் அண்மித்த பகுதியில் உள்ளது.

2012 என்றாலே உலக அழிவு என்ற பொருள் அனைவரது மனதையும் ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கின்றது.




இந்நிலையில் இவ்வாண்டு மார்ச் மாதம் 11ஆம் திகதி ஜப்பானை தாக்கியது 9.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கத்துடன் கூடிய சுனாமி.... இதனால் காவு கொள்ளப்பட்ட மனித உயிர்களின் எண்ணிக்கை சரியாக இதுவரை கணிப்பிடப்படவில்லை.

இவ்வாறு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தை விடவும் அதன் பின்னர் ஜப்பான் சந்திக்கவுள்ள பொருளாதார நெருக்கடியுடனான சுகாதார பிரச்சினைகள் தமது நாட்டை அழிவிற்கே கொண்டுச் செல்லும் என்ற எண்ணக்கரு எம்மத்தியில் பரவத் தொடங்கி விட்டது.



இதனுடன், 2012 டிசம்பர் வரை உலகம் பல பிரச்சினைகளை சந்திக்கும் என பலர் தமது கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

உலகம் தனது அழிவை இயற்கையிடமிருந்து மாத்திரமன்றி, மனிதனிடமிருந்தும் எதிர்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இந்த அழிவுகள் மாத்திரமன்றி கடந்த ஆண்டு பல விமான விபத்துக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றிருந்தன.

இந்த விமான விபத்துக்கள் இடம்பெற்றமைக்கான காரணம் கூட இதுவரை சரியாக அறியப்படவில்லை.

அத்துடன், உலகின் பல நாடுகள் எதிர்கொண்டுள்ள யுத்தம் தற்போது உக்கிர நிலையை அடைந்துள்ளது. இதுவும் கூட உலக அழிவின் ஒரு பாகமாக இருக்கலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து.

லிபியா, பஹ்ரேன், பாகிஸ்தான், ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், மெக்ஸிகோ உள்ளிட்ட பல நாடுகளில் யுத்தம் உக்கிர நிலையை அடைந்துள்ளது.




எனினும், இவை அனைத்தும் உலக அழிவாக இருக்க முடியாது.... உலகம் புதுப்பிக்கப்படும் ஒரு செயலாகவே கருதப்படுகிறது.

சந்திக்கும் ஒவ்வொன்றும் ஒரு அழிவையே நினைவு கூறுகின்றது. எதிர்பார்ப்போம்.... நடப்பது என்னவென.

0 comments: