கடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தேன். அதனால் எனக்கு பதிவு உலகத்தின் பக்கம் நிம்மதியாக தலை சாய்க்க முடியவில்லை.
தற்போது எனக்கு இருந்த பல பிரச்சினைகளின் முக்கியமான பிரச்சினை தீர்ந்து விட்டது. அதனால் தற்போது ஒரு சிறிய ஆறுதலுடன் மீண்டும் பதிவுலகத்திற்கு பிரவேசிக்கின்றேன்.
கடந்த டிசம்பர் மாதமளவில் வெற்றி வானொலியிலிருந்து விலகி, இந்தியா சென்றிருந்ததுடன், ஏனைய நாட்களை வீட்டிலேயே கழித்தேன்.
சுமார் 3 மாதங்களின் பின்னர் தெரண தமிழ் வானொலியின் செய்தி ஆசிரியராக பணி புரிய நான் இந்த நிறுவனத்தில் இணைந்துக் கொண்டேன்.
அதனைத் தொடர்ந்து இலங்கையிலுள்ள தமிழ் பிரபல இயக்குநர் ஒருவர் இளங்கோவினால் இலங்கையில் தயாரிக்கப்பட்டுவரும் நகைச்சுவை தொடர் நாடகமொன்றிலும் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து நான் மீண்டும் பதிவுலகத்திற்கு பிரவேசிக்கின்றேன்.
செவ்வாய், 15 மார்ச், 2011
அருணின் கடந்த சில மாதங்கள்........
இடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 4:45:00
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக