அனைவருமே தற்போது அரசியலில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். அப்படியிருக்கும் போது ஏன் சச்சின் மட்டும் அரசியலுக்கு பிரவேசிக்கக் கூடாது.
இந்தியாவை எடுத்துக் கொண்டால், ஏன் உலகத்தையே எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் முன்னணியில் திகழ்பவர்களின் சச்சினும் ஒருவர் தான்.
அனைத்து துறைகளிலும் உள்ளவர்கள் தேர்ந்தெடுத்து இறுதியில் பிரவேசிக்கம் ஒரு துறையாக அரசியல் மாறிவிட்டது.
இப்படியிருக்கும் போது நான் இறுதியாக வெளியிட்ட பதிவிலும் அதே கருப்பொருளைத் தான் வெளிப்படுத்தியிருந்தேன்.
சில திறமைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு அரசியலில் பிரவேசிக்கும் பலர் இருக்கும் போது சச்சினும் அரசியலில் ஈடுபட்டால் முன்னேற முடியுமா என்ற கேள்வி நேற்றைய தினம் தான் எனது மனதில் மிக ஆழமாக எழுந்தது.
ஏன் அந்த கேள்வி திடீரென எழுந்தது என்பது தானே உங்களின் முதலாவது கேள்வி.
சச்சின் டெண்டுல்கார் நேற்றைய தினம் புதிய சாதனையொன்றை ஒன்றை படைத்ததை அடுத்தே எனக்கு இந்த கேள்வி எழுந்தது.
ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனிநபரொருவர் பெற்ற அதிகூடிய ஒட்டமாக 200 ஒட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்தார்.
பல சாதனைகளை படைத்த சச்சின் தொடர்ந்தும் சாதனைகளை படைத்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அரசியலில் பிரவேசித்தால் அவரின் வாழ்க்கை நிச்சயம் கேள்வி குறித்தான்.
இப்படி விளையாட்டில் கழிப்பதே தனக்கும் நல்லது, ஏனையோருக்கும் நல்லது.
அரசியல் வேண்டாம். விளையோட்டே போதும் சச்சின்!
Thursday 25 February 2010
சச்சினுக்கு அரசியல் வாழ்க்கை தேவையா?
சச்சினுக்கு எனது வாழ்த்துக்கள்!
Posted by R.ARUN PRASADH at 08:15:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment