Thursday 4 February 2010

.....இலங்கை தமிழர் கையில்.....

இலங்கையின் பெரும்பான்மை சமூகமாக தற்போது சிங்களவர்களே உள்ளனர்.

சிங்களவர்களின் கலை, கலாச்சார, பண்பாடுகள் மற்றும் மொழி பாவனை உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் இலங்கை, சிங்களவர்களை மற்றும் சிங்கள மொழியை நாடிச் செல்ல வேண்டியது அவசியம் என்ற நிலையில் தற்போது உள்ளது.



குறிப்பாக வைபவங்கள், நிகழ்வுகள் போன்றவற்றிலும் முன்னுரிமை சிங்கள பண்பாட்டிற்கே வழங்கப்படுகின்றமை வழக்கமானதொன்றாகும்.

இந்த கலாச்சாரம் ஆரம்ப காலத்திலிருந்தே வந்தது என்று பலர் கூறி வந்தாலும், அது சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பின்பற்றப்பட்டு வந்தவொன்று என்பதை யாராலும் மறைக்கவோ? மறுக்கவோ முடியாது.

எப்படி நாட்டின் பெரும்பான்மை சிங்களவர்களை சார்ந்தது.



இலங்கையின் தேசிய தலைவர்கள் சுதந்திரத்திற்காக போராட்டங்களை மேற்கொண்டதன் விளைவாக 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ஆம் திகதி இலங்கை சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை சுதந்திரம் பெற்றதை தொடர்ந்து முதலாவது பிரதமராக D.S.சேனாநாயக்கவும், அவரை தொடர்ந்து அவரது மகனாக டட்லி சேனாநாயக்கவும் 1952ஆம் ஆண்டு காலக்கட்டம் வரை பிரதமர்களாக இருந்தனர்.

1956ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் S.W.R.D.பண்டாரநாயக்க பிரதமராக இருந்ததுடன், இலங்கையின் தேசிய மொழியாக சிங்கள மொழி பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த பின்னரே சிங்கள மொழியில் ஆதிக்கம் இலங்கையில் வலுவடைந்துள்ளதாக வரலாறுகள் கூறுகின்றன.

அவரது மறைவைத் தொடர்ந்து 1959ஆம் ஆண்டு அவரது பாரியாரான சிறிமாவே பண்டாரநாயக்க பிரதமராக கடமையாற்றினார்.

1972ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி சிலோன் என அழைக்கப்பட்டு வந்த இலங்கை, ஸ்ரீலங்கா என மாற்றம் பெற்றது. இலங்கையின் தேசிய கொடி மாற்றம் பெற்றதும் இவ்வாண்டிலேயே ஆகும்.

இதன்பின்னரே இலங்கையில் சிங்கள கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை சுதந்திமடைவதற்கு முன்னர் இலங்கையில் பல தமிழ் மன்னர்கள் ஆட்சி புரிந்துள்ளதாகவும் வரலாறுகள் கூறுகின்றன.



சிங்களவர்கள் இலங்கையில் முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கிய காரணம் என கூற வேண்டியது தமிழர்களையே!

இதற்கு பல உதாரணங்களையும் குறிப்பிட முடியும்.

இலங்கையில் பழைய தேசிய கொடியும் தமிழர்களின் கலாச்சாரத்திலேயே இருந்தமை குறிப்பிடத்தக்க விடயம்.

இவை இலங்கையின் பழைய தேசிய கொடிகள்.



இப்படியே சிங்கள மொழி வலுவடைந்து, தற்போது இலங்கையின் பெரும்பான்மை என்ற அந்தஸ்தையும் சிங்களவர்கள் பெற்றுக் கொண்டுள்ளனர்.

1 comments:

SShathiesh-சதீஷ். said...

நிறைய விடயங்களை பகிர்ந்துள்ளீர்கள்.அதிலும் அந்த கொடிகள் இன்று தான் பார்த்தேன் நன்றி. அடிக்கடி எழுதுங்கள்.