Saturday 14 November 2009

சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையில் 20 வருடங்கள்!

இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டூல்கார் தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரவேசித்து 15.11.2009ஆம் திகதியுடன் 20 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ஆம் திகதி தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரவேசித்த சச்சின் டெண்டூல்கார், தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி எதிர்த்தாடினார்.



முதலாவதாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய சச்சின் டெண்டூல்கார், அந்த போட்டியில் அரைசதத்தையும் பெற்றுள்ளார்.

இவர் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி மும்பையில் பிறந்தார்.

இவர் அன்று முதல் இன்று வரை 159 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அவற்றில் 42 சதங்களையும், 53 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.

அத்துடன், 436 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் டெண்டூல்கார், அவற்றில் 45 சதங்களையும், 91 அரைசதங்களையும் பெற்றுள்ளார்.

இந்திய நட்சத்திர துடுப்பாட்டவீரர் சச்சின் டெண்டூல்கார் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 12 ஆயிரத்து 773 ஒட்டங்களை பெற்றுள்ளதுடன், ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 17ஆயிரத்து 178 ஒட்டங்களை பெற்றுள்ளார்.

மேலும், சச்சின் டெண்டூல்காருக்கு இந்தியாவின் 2ஆவது உயரிய குடிமுறை விருதான பத்மவிபூஷன் விருதும், விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும் கிடைத்துள்ளது.



கிரிக்கெட்டின் அனேகமான சாதனைகள் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டூல்காரின் வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்தியாவிற்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 16-11-2009ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

0 comments: