Thursday 24 September 2009

ஆதவன் + வேட்டைக்காரன்

தமிழ் சினிமா ரசிகர்களிடையில் மிக எதிர்பார்ப்புடன் இருக்கும் இரு படங்கள் வெகுவிரைவில் வெளியாகவுள்ளன.



சினிமா வாழ்க்கையின் பிரவேசத்திலிருந்து குழந்தைகள் முதல் முதியோர் வரை மனதில் இடம் பிடித்து தற்போது அவர்களினாலேயே விமர்சிக்க வைத்துள்ள நடிகர் விஜயின் வேட்டைக்காரன்.

இளைஞர்கள் ரசிக்கின்ற, இளம் பெண்கள் காதலிக்கின்ற தற்போதைய சினிமா ரசிகர்களின் நாயகன் சூர்யாவின் ஆதவன்.

தொடர் வெற்றிகளை தந்து முன்னணியிலுள்ள சூர்யா மற்றும் தற்போது சற்று சினிமாவில் வீழ்ந்துள்ள விஜய் ஆகியோரின் இரு படங்கள் வெளியாகவுள்ளன.

இதில் விசேடம் என்னவென்றால் உண்மையான இரு நண்பர்களின் போட்டிக்காலம் இது!

எனது இன்றைய பதிவு சிறிய ஆய்வு தான்! இது நடக்கலாம், நடக்காமலும் போகலாம்! சும்மா.

அரசியல் வாழ்க்கையில் பிரவேசிக்க எண்ணியுள்ள விஜயை அவருடைய பல ரசிகர்கள் கைவிட்டுள்ளனர். சிலர் அவரை தனது மனதிலிருந்தே நீக்கிவிட்டனர்.



விஜயின் வெற்றி படங்களுக்கு பல காரணங்கள் இருக்கின்ற போதிலும், முக்கியமான ஒரு காரணம் உள்ளது. அது தான் விஜய் அனைவரது உள்ளங்களிலும் இடம் பிடித்திருந்தமை.

ஆனால் இன்று அவர் பல ரசிகர்களின் மனதில் பிடித்திருந்த இடத்தை இழந்துள்ளார். காரணம் அவரது அரசியல் பிரவேசம்!

அதனால் வெளிவரவுள்ள வேட்டைக்காரன் எவ்வளவு சிறந்த படமாக இருக்கின்ற போதிலும், அது வெற்றி பெறுமா? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்த வண்ணமே உள்ளது.

விஜயின் இறுதியாக வெளிவந்த படமான வில்லு வரையுள்ள அனைத்து படங்கள் வெளிவரும் போதும் ஓர் எதிர்பார்ப்பு மனதில் இருந்த வண்ணமே இருக்கும். ஆனால் அது இப்போ இல்லை.

ஆனால், சூர்யாவின் ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு விதமான வித்தியாசமான கதைகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன.



இவரின் ஒரே நோக்கம், சினிமாவில் தான் கைப்பற்றியுள்ள நிலையை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே!

அதனால் வெளிவரவுள்ள ஆதவன் அனைவரது உள்ளங்களிலும் ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளதாக சினி ரசிகர்களின் தெரிவிக்கின்றனர்.

இதனால் இம்முறை வெளிவரும் படங்களில் எந்த படம் வெற்றி பெறும் என்பது அனைவரது மனதிலும் உள்ள ஒரு கேள்வி!

இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்! நிச்சயம் காலம் பதில் கூறும்!

Tuesday 22 September 2009

அனைவருக்கும் நன்றி!


குறுகிய காலத்தில் பெருமளவானோரை இந்த பதிவுகளின் ஊடாகவே சந்தித்துள்ளேன். பலரது முகவரியை நான் அறிந்தேன்.

அதுமட்டுமன்றி என்னை பலரும் அறிந்தது இந்த பதிவுகளின் மூலம் என்றும் கூறலாம்.

இவ்வாறு பதிவுலகில் பிரவேசித்த எனக்கு இதுவரை இருவர் விருதுகளை வழங்கியுள்ளனர்.

இன்றைய பதிவு அவர்களை மையமாக கொண்டே அமைந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், எனது பதிவுலக பிரவேசத்திற்கு உட்சாகம் கொடுத்தவர்களுக்குமே இந்த பதிவை சமர்பிக்கிறேன்.

முதல் முறையாக அவர்களுக்கு எனக்கு கிடைத்த விருதை வழங்க விரும்புகிறேன்.

முதலாவது விருது இதுவரை பதிவுலகத்திற்கு பிரவேசிக்காது எனக்கு பலவகையில் ஒத்துழைப்புக்களை வழங்கிய என் அண்ணன் டிரோஷனுக்கு.

இரண்டாவது எனக்கு ஒத்துழைப்புக்களை வழங்கி தகவல்களை பெற்றுக் கொடுத்த லோஷன் அண்ணாவிற்கு.

http://loshan-loshan.blogspot.com/

மூன்றாவது பதிவுலகில் சிறந்த பதிவுகளை இட்டு வரும் ஹிஷாம் அண்ணாவிற்கு.

http://nhisham.blogspot.com/

நான்காவது எனது அருகில் இருந்தாலும், அருகில் இல்லாவிடினும் தகவல்களை தொடர்ந்தும் வழங்கிய வெற்றியின் சதீஷன்.

http://sshathiesh.blogspot.com/

ஐந்தாவதாக விருது வழங்கியவருக்கே மீண்டும் அதே விருதை வழங்க விரும்புகிறேன்! (சிந்து)
http://vsinthuka.blogspot.com/


இறுதியாக இதுவரை எனக்கு பலவகையில் உதவிகளை வழங்கிய என் நண்பர்களுக்கு இந்த விருதை சமர்பிக்கிறேன்!


எனது பதிவுகளின் இடுகை தொடரும்.............

Sunday 13 September 2009

மனிதனைத் தாக்கும் மற்றுமொரு மிருகம்!



மனிதர்களை கடந்த சில மாதங்களாக தாக்கிய பன்றிக் காய்ச்சலை தொடர்ந்து இன்னுமொரு மிருகத்தின் காய்ச்சல் மனிதனை அண்மித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை பத்திரிகை செய்தியை கண்டு வியப்படைந்தே இந்த பதிவை சில நாட்களின் பின்னர் இன்று இடுகிறேன்!

தென் கிழக்காசிய நாடுகளிலேயே இந்த காய்ச்சல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது மலேசியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் அதிகளவில் காணப்படுவதாக இன்றைய பத்திரிகையில் படித்தேன்!

மேலும், இந்த குரங்குக் காய்ச்சல் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை இதுவரை அண்மிக்கவில்லை என்பது திருப்தியளிக்கிறது.

நீண்ட வால், குட்டை வால் குரங்குகளை மட்டுமே தாக்கி வந்த இந்த வைரஸ் மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் சில மனிதர்களிடம் தொற்றியுள்ளதாக பீதி ஏற்பட்டுள்ளது.

இது நுளம்புகளினால் ஏற்படும் மலேரியா காய்ச்சல் வகையைச் சேர்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.

நோயால் பாதிக்கப்பட்டுள்ள குரங்குகளிடமிருந்து பரவிய இந்த வைரஸ், மனிதனை தாக்கியுள்ளது. இதுவரை மலேசியாவில் மாத்திரம் 150ற்கும் மேற்பட்டோர் குரங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் 3இல் 2 பங்கினரை குரங்குக் காய்ச்சல் வைரஸ் தாக்கியுள்ளமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு இனங்காணப்பட்டவர்களில் இருவர் இதுவரை பலியாகியுள்ளனர்.

அத்துடன், தற்போது இந்தோனேஷியாவிலும் இந்த காய்ச்சல் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வைரஸ் தொற்றுக்குள்ளானால் உடலின் இரத்த ஒட்டம் பாதிக்கப்பட்ட மூச்சு திணறல் ஏற்பட்டு உயிர் ஆபத்து ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சரி மனிதன் குரங்கிலிருந்து வந்ததை தற்போது மறந்துள்ள நிலையில் ஞாபகப்படுத்தும் வகையில் இந்த காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.

ஆனால் பன்றிக் காய்ச்சல். மனிதன் பன்றியிலிருந்து வரவில்லை?

Tuesday 1 September 2009

பதிவர்களுக்கான பதிவு!



பதிவுகள் இப்போது வியாபாரமாகி விட்டன. நாங்கள் பதிவுகளை இடுவதற்கான பல காரணங்கள் உள்ளன. அதை புரிந்துக் கொள்ளாமல் சிலர் பதிவுகளை இடுகின்றனர்.

அதிலும் சில பதிவர்கள் தமக்கு நாள் ஒன்றுக்கு எத்தனை வருகைகள் என பார்த்துக் கொள்வதற்காகவே பதிவுகளை இடுகின்றனர்.

ஓகே அதுவும் சரி தான்! அதை நான் பிழை என சொல்ல மாட்டேன். காரணம் எமது தளத்தில் இட்ட பதிவை எத்தனை பேர் பார்த்து அதற்கு ஆதரவு வழங்கியுள்ளனர் என தெரிந்து கொண்டால் தான், அந்த பதிவில் நாங்கள் வெளிப்படுத்தி கருத்துக்களின் பெறுமதியை எம்மால் புரிந்துக் கொள்ள முடியும்.

அப்போது தான் எமது அறிவும் அதிகரிக்க வாய்ப்புக்கள் அதிகமாகவுள்ளது.

அடுத்த விடயம் தான், பதிவுகளுக்கு வாக்களித்தல்! நீங்கள் எமக்கு வாக்களியுங்கள், நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன் என நண்பர்களிடம் கூறி தமக்கு தானே, தமது பதிவை வலுமைப்படுத்திக் கொள்கின்றனர்.

இது சரியா? நிச்சயம் இது பிழை என தான் என்னால் கூற முடிகிறது.



வேண்டாம், உண்மையான பதிவின் பெறுமதியை நாங்கள் அறிந்து கொண்டு எமது அறிவை வளர்த்துக் கொள்வோம்.

மற்றுமொரு விடயமும் உள்ளது. நான் முன்னதாக கூறியதை போல ஏன் நாங்கள் பதிவை இடுகிறோம் என தெரியாது, எல்லாரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என மனதில் நினைத்து பதிவுகளை இடுதல்.

அவ்வாறு இடும் பதிவுகளில் அர்த்தமொன்றும் இல்லை. (சும்மா)

நாங்கள் வெளியிடும் கருத்துக்கள் ஒரு காலத்தில் எமக்கே தேவைப்படலாம். அதனை நினைவில் வைத்து பதிவுகளை தளங்களில் இடவும்.

இதுபோல நான் கடந்த ஆண்டு எமது புலோக்கில் இட்ட பதிவு எனக்கு தேவைப்பட்டது.



சந்திராயன் 01 விண்கலத்தை பற்றி தகவல்களை செய்திகளில் சேர்த்துக் கொள்ள எனக்கு அந்த பதிவு தேவைப்பட்டது.

அதுபோல பலருக்கும் பல்வேறு கருத்துக்கள் ஒவ்வொரு நாளும் தேவைப்படலாம்.

அதனால் தயவு செய்து நீங்கள் வெளியிடும் பதிவு பலருக்கும் உபயோகப்படும் பதிவாக அமைய வேண்டும்.

இது உங்கள் சொத்து எப்போதிருந்தாலும் உங்களுக்கே தான்.
அதில் ஏன் தேவையற்ற, கற்பனை விடயங்கள்! (கவிதைக்கு அழகு கற்பனையும், பொய்யும்) பதிவு கவிதையாயின் இது சரி!

கற்பனையாக இருந்தாலும் அது மற்றவருக்கு தேவைப்படுமாயின். அதுபோதும் எமக்கு.

பதிவுகளில் போட்டி வேண்டும். பொறாமை வேண்டாம்!