Monday 17 August 2009

100 - இவ்வளவு தானா!


நான் எனது 100ஆவது பதிவையும் இட்டு சதம் அடித்துள்ளேன்.

எனது பதிவுலகை சற்று முன்நோக்கி சென்று பார்க்க வேண்டும் என நான் நினைக்கிறேன்!

இந்த பதிவுலக பிரவேசத்திற்கு ஒரு முக்கிய காரணம் வெற்றி என்று கூறினால், அது தான் சரி!

கடந்த 2008ஆம் ஆண்டு வெற்றி எவ்.எம்மிற்கு வேலைக்காக வந்த வேளையில், மேலதிக நேரம் எனக்கு கூடுதலாக இருந்தது. நான் இங்கு வேலைக்கு வந்த காலப்பகுதியில் எனக்கு யாரையும் தெரியாது.

எனது தனிமைக்கு துணையாக இருந்தது, இணையம் ஒன்று தான்! நான் இங்கு வேலைக்கு வரும் முன்பே நான் புலோக் ஒன்றை செய்து வைத்திருந்தேன்!

அப்போது தான் எனக்கு இந்த புலோக் எனது தனிமையை போக்க உதவியது.

எனது மேலதிக நேரங்களில் நான் சில பதிவுகளை இட ஆரம்பித்தேன். முன்பே ஆரம்பித்து வைத்திருந்த எனது புலோக்கை அலங்காரப்படுத்தினேன்.

எனது புலோக் மட்டுமின்றி வெற்றிக்கான செய்தி புலோக் ஒன்றையும் ஆரம்பித்தேன்! ஆனால் அது இன்று இல்லை.

இப்படி இருக்கும் காலங்களில் தான் என்னோடு புலோக் செய்யும் இன்னுமொருவரை சந்தித்தேன். அவர் தான் லோஷன் அண்ணா!



நான் வெற்றிக்கு வேலைக்குவரும் போது செய்திப்பிரிவு ஒரு இடத்திலும், நிகழ்ச்சி பிரிவு வேறொரு இடத்திலும் இருந்தது. அதனால் நான் லோஷன் அண்ணாவை சில நாட்கள் சென்றே சந்திக்க நேர்ந்தது.

ஒரு சில மாதங்களின் பின்னர் இரு பிரிவுகளும் ஒரு இடத்திலேயே இயங்க ஆரம்பித்ததும், நாங்கள் இருவரும் சேர்ந்தே புலோக் செய்வதை தொடர்ந்தோம்.

இப்படியான காலங்களில் மற்றுமொருவர் எங்களுடன் சேர்ந்தார், அவர் தான் ஹிஷாம் அண்ணா,



அவரும் எங்களுடன் சேர்ந்தார். இப்படியே எனது பதிவுகள் தொடர்ந்தது.

எனக்கு போட்டியாக புலோக் செய்யும் மற்றுமொருவர் இருக்கிறார் வெற்றியில், வேறு யார் சதீஷன்.


இவர் சில மாதங்களுக்கு முன்பே வெற்றியில் இணைந்த ஒருவர். வெற்றியில் சேர்ந்து சில நாட்களிலேயே இவரும் வந்து எங்களுடன் சேர்ந்து விட்டார்.

இன்னும் ஒருவரும் இப்போது எம்முடன் சேர்ந்து விட்டார். அவர் தான் ரஜனிகாந்தன்.


இது தான் எனது புலோக்கின் வரலாறு! எனது 100ஆவது பதிவை இட்டு, இது 101ஆவது பதிவாக எனது வரலாற்றை இடுகிறேன்!
இப்போது எனது மற்றுமொரு புலோக் வெற்றிகாரமாக இணையத்தில் உலா வந்துக் கொண்டிருக்கிறது.
இப்படி தனியாக பதிவுகளை இட்ட காலம் சென்று இன்று பதிவுலகத்திற்கு ஒரு புதிய உதயம்! பதிவர்கள் சந்திப்பு. எதிர்வரும் 23ஆம் திகதி காலை 9 மணிக்கு கொழும்பு தமிழ் சங்கத்தில் நடைபெறவுள்ளது.
அனைவரும் கலந்து கொள்ளுங்கள்!

1 comments:

Sinthu said...

வாழ்த்துக்கள்.