Tuesday 7 July 2009

பொப் இசை பாடகர் மைக்கல் ஜாக்ஸனின் இறுதி தினம்!


பொப் இசை பாடகர் மைக்கல் ஜாக்ஸனின் இறுதி சடங்குகள் இன்றைய தினம் லோஸ்ஏன்ஜல் நகரில் இடம்பெறவுள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த மாதம் 25ஆம் திகதி திடீரென உயிரிழந்த பொப் இசை பாடகர் மைக்கல் ஜாக்ஸனின் மரணம் தொடர்பில் சந்தேகங்கள் எழுந்து வருகின்ற நிலையில் அவரது பூதவுடல் இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

சுமார் 25 லட்சம் ரூபா பெறுமதியான 14 கரட் தங்க முலாம் பூசப்பட்டு விசேட வெண்கலத்தால் தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைத்து அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

1958ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 29ஆம் திகதி பிறந்த மைக்கல் ஜக்ஸன், தனது முதலாவது இசை பயணத்தை தொடர்ந்தார்.

பின்னர் 1980 களில் பெப் இசை பாடகர் என்ற புகழை பெற்றதோடு, 1982ஆம் ஆண்டு வெளிவந்த அவரது த்ரிலர் என்ற இசைத்தொகுப்பு உலகளாவிய வரவேற்பை பெற்றதுடன், அதிகளவு வாசூலை பெற்றுக் கொடுத்துள்ளது.
மைக்கல் ஜக்ஸன் பெப் இசைத்துறையில் மட்டும் அல்லாது பாடல் ஆசிரியர், நடிகர், ஏழுத்தாளர், இசையமைப்பாளர், வணிகர் உட்பட மேலும் பல துறைகளில் சிறந்து விளங்கியுள்ளார்.

0 comments: