Saturday 4 July 2009

எது நடக்கின்றதோ, அது நன்மைக்காகவே!


விரோதி வருடமொன்று கூறியபோது யாரும் அதை பொருட்படுத்தவில்லை.

எனினும், இவ்வாண்டை நிச்சயமாக விரோதி வருடமாக தான் கணக்கெடுக்க வேண்டும். காரணம் அனைவரும் தெரிந்ததே. கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துக்கள்.

ஒன்றல்ல, இரண்டல்ல பல விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் அதிகமாக இருக்கலாமென பல இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

இது சிலவேளைகளின் உண்மையாக கூட இருக்க வாய்ப்புள்ளதல்லவா?

பார்ப்போம் எதற்கெதற்கோ கணக்கெடுப்பு எடுப்பவர்கள் நிச்சயம் இதற்கும் கணக்கெடுப்பு எடுபார்கள்.

அத்துடன், விபத்துக்கள் என்று கூறும் போது விமான விபத்துக்களே அதிகளவில் இடம்பெற்றுள்ளது.

ஏயார் பிரான்ஸ், யேமன் ஏயார் லைன்ஸ் உள்ளிட்ட மேலும் பல விமான விபத்துக்கள் இவ்வருடத்தில் இடம்பெற்றுள்ளன.

எனது கணக்கெடுப்பின் படி இவ்வருடம் 10ற்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

தற்போது நாளொன்றுக்கு ஒரு விமானம் விபத்துக்குள்ளாகும் காலமான மாறிவிட்டது.

எத்தனை உயிர்களை இந்த விமான விபத்துக்கள் காவு கொண்டு விட்டன. இது காலத்தின் மாற்றம் அல்லவா?

இந்த காலப்பகுதியில் எமது உயிரை பாதுகாத்துக் கொள்ள முடியாது. காரணம் விபத்துக்கள் மட்டுமின்றி நோய்களும் எம்மை வாட்டுகின்றன.

டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட மேலும் பல நோய்களினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன், உயிரிழப்பர்களின் எண்ணிக்கையும் அதேபோன்று அதிகரித்து வருகிறது.

பார்ப்போம் அனைத்தும் இறைவனின் கையில். எது நடக்கின்றதோ, அது நன்மைக்காகவே!

1 comments:

தங்க முகுந்தன் said...

அருமை! விபத்துக்களுக்குள்ளேயே எமது மக்கள் கொல்லப்பட்ட தொகையும் உள்ளடக்கப்பட்டதோ?