Thursday 16 July 2009

2012ல் என்ன? இம்மாதம் 22ல் என்ன?


உலகில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழிவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த அழிவுகள் எப்போது முடிவடையும். யாருக்கு தெரியும்.

ஆனால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. அது தான் மாயன் கலண்டர்.

இது ஆதிவாசிகளினால் மத்திய அமெரிக்காவில் எழுதப்பட்ட ஒரு கலண்டர். இவ்வளவு காலமும் மாயன் கலண்டரிலுள்ள விதத்திலே உலகம் இயங்கி வந்துள்ளதாக தகவல்கள் தெரிக்கின்றன.

எனினும், இந்த கலண்டரின் திகதி முடிவடையவுள்ளது. 2012 டிசம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர் இந்த கலண்டர் எழுதப்படவில்லை. ஏன்?

அத்துடன், சில ஜோதிடர்களினால் அதே திகதி தொடர்பாக கருத்துக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

2012ஆம் ஆண்டின் 3ஆவது கிழமையே உலகின் இறுதி திகதி என அவர்கள் கூறுகின்றனர்.

அன்றைய தினம் உலகில் மிக பெரிய அழிவொன்று காத்திருப்பதாகவும் அவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

இதேவேளை, 2012ஆம் ஆண்டுடன் ஒரு யுகம் முடிவடைகின்றது. அவ்வாறு ஒரு யுகம் முடிவடைகின்ற போது நிச்சயமாக மிக பெரிய அழிவொன்று ஏற்படும் என கூறப்படுகிறது.

இதற்கு ஒரு உதாரணம். 1912ஆம் ஆண்டு உலகில் அனைவரும் இன்றும் பேசக்கூடிய விடயம். மிக பெரிய கப்பல் விபத்து. டைட்டேனிக் கப்பல் விபத்துக்குள்ளாகிய ஆண்டு தான். அதில் 1517 பேர் பலியாகியிருந்தனர். அன்றும் ஒரு யுகம் முடியடைந்தது.

ஒவ்வொரு இதேபோன்ற ஆண்டுகளின் தகவல்களையும் எடுத்து பாரக்கும் போது அதை அனைவரும் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

அவ்வாறு யுகம் முடிவடையும் வருடத்தில் 3 கிரகணங்கள் வரும். அந்த வருடம் ஆபத்துக்குரிய வருடம் என பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இவ்வாறே குமரிக் கண்டம் அழிவுண்ட வருடமும், துவாரகை கடலில் மூழ்குண்ட வருடமும் இதேபோன்றதொரு 3 கிரகணங்கள் ஏற்பட்ட வருடத்தில் என சான்றுகள் தெரிக்கின்றன.

உதாரணமாக 2004ஆம் ஆண்டு 3 கிரகணங்கள் ஏற்பட்டன. அவ்வருடம் ஏற்பட்ட அழிவு பற்றி கூற தேவையில்லை. அனைவரும் அறிந்ததே. சுனாமி - 9.2

அத்துடன், 2000ஆம் ஆண்டில் 4 சூரிய கிரகணங்களும், 3 சந்திர கிரகணங்களும் ஏற்பட்டுள்ளன. அந்த ஆண்டில் உலகம் முழுவதும் மக்கள் எண்ணற்ற இன்னல்களை அனுபவித்துள்ளனர். குறிப்பாக 22-8-2000 அன்று ரஷ்ய நீர்மூழ்கி கப்பல் நடுக்கடலில் 118 பயணிகளுடன் மூழ்கியது. 24ஆம் திகதி பக்ரைனில் ஏற்பட்ட விமான விபத்தில் 143 பேர் உயிரிழந்திருந்தனர். அதே ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் திகதி மும்பை, கோவாவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு எண்ணற்றோர் உயிரிழந்துள்ளனர்.

அவற்றை நாம் பொய் என்று கூறி மறுக்க முடியாது. காரணம் குமரிக் கண்டம் கடலுக்கு அடியில் இன்றும் காணப்படுகிறதுடன், அதேபோலவே தான் துவாரகையும் கடலுக்கு அடியில் அப்படியே காணப்படுவதாக கூறப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்னர் நீர்மூழ்கிக் கப்பலின் மூலம் கடலுக்கடியில் சிலர் பயணித்துக் கொண்டிருந்த போது துவாரகையை கண்டுள்ளனர். அங்கு அரண்மனைகள், அதன் கதவுகள் உள்ளிட்ட மேலும் பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளதை கண்டுள்ளனர்.

அத்துடன், இவ்வருடமும் 3 கிரகணங்கள். என்ன அழிவு? 22.07.2009 அன்று சுனாமி ஏற்பட கூடிய சாத்தியகூறுகள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் ஏற்படவுள்ள சூரிய கிரகணத்தினால் புவியில் ஈர்ப்பு சக்தி ஏற்படும். அந்த சூரிய கிரகணத்தினால் ஏற்படக்கூடிய ஈர்ப்பினால் புவியின் கீழுள்ள தட்டுக்கள் அசையத் தொடங்கி விடும். அவ்வாறு ஏற்படும் அசைவினால் சுனாமி ஏற்படும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதை நாம் பொய் என்று கூற முடியாது. காரணம் கடந்த காலங்களில் ஏற்பட்ட விமான விபத்துக்கள். அத்துடன் கடந்த காலங்களில் ஏற்பட்டுவரும் நிலநடுக்கங்கள் என்பனவற்றை பார்க்கும் போது இது உண்மை என்றே கூறமுடியும்.

ஏன் விமானங்கள் இத்தனை தொடர்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளன.

சுமார் 3 மாத காலப் பகுதிக்குள் சுமார் 10ற்கும் மேற்பட்ட விமான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 710 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த விமான விபத்துக்களுக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், நேற்றைய தினம் ஈராக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் கறுப்பு பெட்டி சேதமடைந்திருந்தது. எப்போதும் விமானத்தின் கறுப்பு பெட்டி சேதமடைய வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கையில் கடந்த இரு தினங்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று மற்றும் இன்று தொடர்ந்தும் பலத்த காற்று வீசி வருகிறது. இதை பார்க்கும் போது ஓரளவு நம்பக்கூடியதாய் இருக்கின்றது.

எதிர்வரும் 22ஆம் திகதி?

வேண்டுக்கோள்:- இது தொடர்பான தகவல்கள் இருப்பின் தயவு செய்து எனக்கு அறியத்தரவும்.

1 comments:

kirukkan005 said...

2012!!!! ulagam ethirparththu kaththirukkum varudam.... sri.langa vil mattumalla ulagam muluvathum"Climate change" ullathu kaaranam Globel warming!! Corban gas athikaripal eerpaduvathu..
vimanagal aabaththil maatikolvathu Technical problem moolam nigalkirathu. 3000 aandukalukku mun vimangal illai maranthu vida vendam. irupinum intha aandin iruthiyil SURYA PUYAL eerpada ullathu ithan vilaivu Communication, Technical problem kalai eerpadiththum. Satelllite kal use illamal pogavum vaaypukal irukirathu... mudinthal NASA web il konjam meyavum
-kirukkan