Thursday 14 May 2009

இந்திய செய்திகள் மற்றும் விளம்பரங்கள்.



இந்திய – தமிழக நாடாளுமன்ற தேர்தல்கள் நடைபெற்று முடிவடைந்த பின்னர், இந்தியாவிலுள்ள பல ஊடகங்கள் பல்வேறான செய்திகளை வெளியிட்டனர்.

இதில் முக்கியமாக சொல்ல வேண்டும் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளின் செய்திகள்.

நடைபெற்று முடிவடைந்த தேர்தல்களில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை என செய்தி வெளியிட்டதை நாம் பார்க்க கூடியதாய் இருந்தது.

இந்த இரு ஊடகங்களை தவிர ஏனைய ஊடகங்கள் நேற்றைய தினம் அசம்பாவிதங்கள் ஏற்பட்டதாக வீடியோ காட்சிகளுடன் செய்தி வெளியிட்டனர்.

இவ்வாறு அந்த இரு ஊடகங்களும் செய்தி வெளியிடுவதற்கான காரணம் என்ன? தாம் சரி என்றால் உண்மையை வெளிப்படுத்தியிருக்கலாம் தானே!

கலைஞர் மற்றும் சன் நிறுவனங்களில் உரிமையாளர்கள் தேர்தலில் போட்டியிட்டதினாலா இப்படியான செய்திகள் வெளியிடுகின்றனர்.

இதில் இருந்தே பல உண்மைகளை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது.

நான் மக்களுக்கு நன்மை செய்துள்ளேன். உதவிகளை செய்கிறேன்.

பாடசாலை மாணவர்களுக்கு பஸ் பாஸ் இலவசமாக வழங்கியுள்ளேன், அரசியின் விலை ஒரு ரூபாவாக குறைத்துள்ளேன், இலவசமாக டீ.வி வழங்கியுள்ளேன் என கடந்த காலங்களில் கலைஞர் தொலைக்காட்சியில் விளம்பரங்கள் ஒளிபரப்பாகின.

இவ்வாறு மக்களுக்கு உதவிகளை வழங்கினால் ஏன் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த செய்தியை இரு தொலைக்காட்சிகளும் வெளியிடவில்லை.

இத்தனை காலமும் மக்களுக்கு உதவி வழங்கியது, தான் அரசியலில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதை கருத்திற்கொண்டே தவிர உண்மையான மனதுடன் இல்லை என்பது இதிலிருந்தே தெளிவாகின்றது.

பொதுவான தமிழகத்தில் அரசியலை வைத்து ஒரு பெரிய விளையாட்டே ஆரம்பித்துள்ளனர். இவரின் அரசியலை யாராலும் தொடர முடியுமா? வில்லன்

இந்த இரு தொலைக்காட்சிகளிலும் வன்முறைகள் மட்டுமின்றி தேர்தல் பதிவுகள் தொடர்பான செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என செய்திகளை பார்த்த அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர்.

இலங்கை பிரச்சினையிலேயே இம்முறை தேர்தல் பிரசாரத்தை கலைஞர் தொடர்ந்து விட்டார்.

உண்ணாவிரதம், மனித சங்கிலி போராட்டம், பதவி விலகுவதான வார்த்தைகள் என மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

உண்மையாக இலங்கைக்கு ஆதரவு வழங்குவதாக இருந்தால் உண்ணாவிரதத்தை மேற்கொண்டவர் தொடர்ந்து மேற்கொண்டிருக்கலாமே, ஏன் ஒரு நாள்?

மனித சங்கிலி போராட்டத்தை ஆரம்பித்தது. யார் கலைஞர், முழுநேரமும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் தானே. (மழை வந்ததினாலேயே காரை விட்டு இறங்கவில்லை)

யாருக்கிட்ட, பெய் பிரசாரங்கள் தேவையில்லை. பார்ப்போம் 16ஆம் திகதி, அதற்கு பின்னர் இலங்கை தொடர்பாக பேச்சு அவர் வார்த்தையிலாவது வருமா?

1 comments:

Media 1st said...

Super Arun Excellent