Sunday 10 May 2009

என் அன்னைக்கு என் உறுதிமொழி!


அன்னையர் தினம் இது எம்மை பெற்று, எமது இம்சைகளை தாங்கி எம்மை வளர்த்த எமது தாயிற்காக கொண்டாடப்படும் ஒரு விசேட தினம்.

இப்படிப்பட்ட ஒரு தினம் இருக்காது வருடத்தில் அனைத்து நாட்களும் அன்னையர் தினமாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் அன்னைக்கு உண்மையான மதிப்பை வழங்க முடியும்.

அன்னை என்பவள் நாம் பிறந்த நாள் முதல் எம்மால் சில இன்பங்கள் பல கஷ்டங்களை அனுபவித்து எம்மை வளர்க்கின்றால் எமது பாடசாலை பருவத்தில், பாடசாலை பரும் முடிவடைந்த பின்னராவது பல இன்பங்களையும், கஷ்டங்கள் அற்ற வாழ்க்கையையும் நாம் எமது அன்னைக்கு வழங்க வேண்டியது அவசியம்.

10 மாதங்கள் தன் உயிராக எம் உயிரை பாதுகாத்து, நாம் பிறந்த பின்னரும் அதேபோல் தன் உயிராய் எம்மை வளர்க்கின்றவள் என்றால் அன்னையை தவிர வேறு யார்?

ஒவ்வொரு நாளும் எமது அன்னையில் முகத்தில் புன்னகையை பார்க்க வேண்டும். கண்களில் கண்ணீரை பார்க்க வேண்டும். (ஆனந்த கண்ணீரை)

ஒருவன் எத்தனை சாதனைகளை படைத்தாலும் அந்த சாதனைக்கு உரிமையாளர் நிச்சயமாக அவன் அல்ல. உன் தாய் தான்!

நீ படைக்கும் சாதனைக்கு வழியை அமைத்து கொடுத்தவள் அவள்.

அன்னைக்கு வாழ்க்கையில் எத்தனை சோதனை, எத்தனை வேதனை, எத்தனை யோசனை அனைத்தும் தமது பிள்ளைகளை நினைத்து. தவிர வேறு எதை நினைத்து.

நானும் எனது தாய்க்கு பல கஷ்டங்களை கொடுத்துள்ளேன். ஏன் தற்போது கூட என் அம்மா என்னை நினைத்து கொண்டே தான் இருக்கின்றாள். காரணம் நான்.

இன்றும் என்னுடன் தொலைபேசியில் பேசும் போது எத்தனை ஆலோசணை.

எனக்கு வழங்கும் ஆலோசணைகளை போல நிச்சயமாக என் சகோதரர்கள் இருவருக்கும் ஆலோசணை வழங்கியதில்லை.

என்னை பொறுத்தவரை நான் இன்றும் எனது தாய்க்கு கஷ்டங்களை கொடுத்து வருகின்றேன் போல.

தேவையில்லை அம்மா, இனிவரும் காலங்களில் என்னை பற்றி யோசிக்க வேண்டாம். நான் நானாக தான் இருப்பேன்.

இதனை அன்னையர் தினமான இன்று (10.05.2009) நான் உங்களிடம் கூறுகிறேன். எழுத்து வடிவில்.

2 comments:

சப்ராஸ் அபூ பக்கர் said...

உங்களோட அன்னை ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பாங்க அருண். அன்னைய சந்தோஷப் படுத்திப் பார்கிறதுல இருக்குற சந்தோச்ம் எங்கயும் இல்ல அருண். பதிவு படு சூப்பர்..... இருந்தாலும் அண்ணன் 2 பேரும் பாவம். (உங்களோட......)

hamshi said...

same with me.I had atoucher lot of to my mom.but she engourage and support to me every thing,Ann ur hats of.Thank u so much to remembering mothersday.u r arock man