Tuesday 14 April 2009

தமது திறமையை காட்டி விட்டார்கள்!


அமெரிக்க இராணுவத்தினருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்ளவே வேண்டியது அவசியமானதொன்று தான்!

காரணம் உலக நாடுகளை நேற்றைய தினம் பேச வைத்த அமெரிக்க இராணுவத்தினரின் திறமை.

கடந்த புதன்கிழமை கடற்கொள்ளையர்களினால் கடத்திச் செல்லப்பட்ட அமெரிக்க சரக்கு கப்பலின் கேப்டனை நேற்று முன்தினம் அமெரிக்க இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

இது தான் நேற்றைய தினம் மிக பரபரப்பான செய்தி.

53 வயதுடைய ரிசட் பிலிப்ஸ் என்பரே குறித்த அமெரிக்க கப்பலின் கேப்டன். சுமார் 5 நாட்களாக தனியாக கொள்ளையர்களுடன் போராடியுள்ளார்.

இவரை இந்து சமூத்திரத்தில் வைத்தே மீட்டுள்ளனர். எப்படி தெரியுமா அமெரிக்க இராணுவத்தினர் மீட்டுள்ளனர்?

அமெரிக்காவின் தற்போதைய ஜனாதிபதி பராக் ஓபாமாவின் சிறப்பு அனுமதியுடனும், அவரின் ஆலோசனைகளை பின்பற்றியுமே இவர் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த கப்பலை மீட்க நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, கடத்தப்பட்ட கப்பலின் கேப்டனின் தலையில் கடற்கொள்ளையர்கள் துப்பாக்கியை கைத்துள்ளனர்.

இதை கண்ட அமெரிக்க இராணுவத்தினர் உடனடியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

காயமடைந்தவரை அமெரிக்க இராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.

இவரை தற்போது அமெரிக்காவிலுள்ள சிறைச்சாலையில் சிறை வைத்துள்ளனர் அமெரிக்க இராணுவத்தினர்.

இனிவரும் காலங்களில் அவர் தனது வாழ்க்கையை சிறையிலேயே கழிக்க வேண்டும் என அமெரிக்க இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சரி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. அமெரிக்காவிற்கு இன்னும் இருக்கிறது அல்லவா!

உலகின் பல நாடுகளுடன் போராடி தானே ஆக வேண்டும்...... பார்ப்போம் ஜனாதிபதி பராக் ஓபாமாவின் திறமையை.........

0 comments: