Sunday 12 April 2009

மும்பையில் சச்சினின் சிலை!


இங்கிலாந்து – லண்டனில் செதுக்கப்பட்டுள்ள இந்திய நட்சத்திர துடுப்பாட்டவீரர் சச்சின் டெண்டூல்காரின் மெழுகு சிலை எதிர்வரும் திங்கட்கிழமை (13.04.2009 – பழைய வருட இறுதியில்) திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய – மும்பையில் நாளைய தினம் இந்த சிலையினை இந்திய நட்சத்திர துடுப்பாட்டவீரர் சச்சின் டெண்டூல்காரே திறந்து வைக்கவுள்ளார்.

இங்கிலாந்து – லண்டனிலுள்ள 'மேடம் டுசாட்ஸ்' அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு துறைகளிலும் பிரசித்தி பெற்றவர்களை மெழுகு சிலையின் மூலம் செதுக்கி அவர்களை கௌரவிப்பார்கள்.

உலகின் முக்கியமான சுற்றுலா மையமாகவே இந்த அருங்காட்சியகம் விளங்குகின்றது.

இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த ஹிந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், சல்மான்கான், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்மராவ் ஆகியோருக்கு மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய கிரிக்கெட் வீரரொருவருக்கு மெழுகு சிலை வைப்பது இதுவே முதற்தடவை என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சிலையின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்துள்ளதாக லண்டன் அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு செதுக்கப்பட்ட சிலையின் பெறுமதி எவ்வளவு தெரியுமா?
ஒரு கோடி ரூபா என தெரிவித்துள்ளனர்.

எத்தனை மாதங்கள் செலவிடப்பட்டுள்ளது தெரியுமாறு – 3 மாதமாம்!

சரி நாங்களும் முடியுமான போவோம் என....................

0 comments: