Thursday 2 April 2009

பிச்சை எடுக்கவும் தடை!


பங்களாதேஷிலுள்ள பிரதான நகரங்களில் பிச்சை எடுப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

இந்த சட்டம் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளதாக பங்களாதேஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

144 மில்லின் மக்கள் வாழும் பங்களாதேஷில் 40 வீதமான மக்கள் நாள் ஒன்றிற்கு ஒரு டொலர் மூலம் பிச்சை எடுப்பதன் மூலம் வருமானம் பெற்றுவருவதாக பங்களாதேஷ் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பிச்சை எடுப்பதினை தடை செய்யும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் விவாத்ததிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டதினை மீறி பிச்சை எடுப்பதில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக ஒரு மாத கால கடும் சிறைத் தண்டனை விதிக்கப்படுமென பங்களாதேஷ் அரசு தெரிவித்துள்ளது.

இந்த சட்ட மூலத்தை நிறைவேற்றக்கோரி பங்களாதேஷ் நிதி அமைச்சர் யு.ஆ.யு. முஸித் கடந்த டிசம்பர் மாதம் முதல் நாடாளுமன்றத்திடம் முறையிட்டிருந்த நிலையில், தற்போது இது சட்டமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comments:

Subankan said...

அப்ப‍டியே சாப்பாடும் போடுவார்களாமா?