Tuesday 24 March 2009

விபரீதமான விளையாட்டு!


ஜாதகம் பார்ப்பது மற்றும் ராசிபலன் பார்ப்பது என பழக்கங்கள் உங்களுக்கு உண்டா? நம்பிக்கை உண்டா? நம்பிக்கை இல்லாவிடினும் இதனை வாசித்து ஒரு விளையாட்டாக எடுக்கவும்.

உண்மையில் இது விளையாட்டு அல்ல. இது சீரியஸ் ஒரு விஷயம்.

நடப்பது நிச்சயம். இதை நம்பிக்கையுடன் பார்க்கவும்.

சரி என்ன அது.. அப்படி தானே.

உங்களுக்கு திருமணம் எப்போது? எத்தனை பிள்ளைகள் உங்களுக்கு? இது தான் மேட்டர்.

நம்பிக்கை இல்லாதவர்களுக்காக ஒரு சந்தர்ப்பத்தை முதலில் நான் சொல்லி விடுறேன்.

திருமணம் முடிந்து பிள்ளைகள் உள்ள ஒருவருக்கு இந்த ஜாதகத்தை பார்க்கவும்.

அவருக்கு எத்தனை வயதில் திருமணம் முடிந்தது. எத்தனை பிள்ளைகள்? பிறந்திருப்பது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? பார்த்து வி;ட்டு சரியாக இருந்தால் நீங்களும் பார்க்கவும். சரியாக தான் இருக்கும்.

முதலில் ஒரு கோப்பையின் அரைவாசிக்கு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்.
முக்கியமாக தங்க மோதிரம். அந்த தங்க மோதிரத்தை தலைமுடியொன்றில் கட்டிக் கொள்ள வேண்டும்.

கட்டிய முடியை கோப்பையில் நிரப்பி வைத்துள்ள தண்ணீரில் போட்டு சிறிது நேரம் வைத்திருந்து விட்டு, தண்ணீரை விட்டு வெளியில் மெதுவாக எடுக்க வேண்டும். ஆனால் கோப்பையை விட்டு வெளியில் எடுக்க வேண்டாம்.

தண்ணீரில் பட்டும் படாமலும் சரியாக கோப்பையில் நடுவில் நிற்குமாறும் துக்கி பிடித்துக் கொள்ள வேண்டும்.

கைகளை ஆட்ட கூடாது.

அந்த மோதிரம், மெதுவாக மொதுவாக ஆடி ஆடி நீர் நிரப்பி வைத்துள்ள கோப்பையில் மோதும்.

அவ்வாறு எத்தனை தடவைகள் மோதுகின்றன என எண்ணிக் கொள்ள வேண்டும். சரியாக உங்களுக்கு திருமணமாகும் வயது வந்தவுடன் உடனடியாக ஆடும் மோதிரம் நின்றுவிடும்.

அப்போது தெரிந்து கொள்ள முடியும், எத்தனை வயதில் உங்களுக்கு திருமணமென்று.

இது கதை அல்ல நிஜம்.

அடுத்து, உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என பார்ப்போம்.

உங்கள் கையிலுள்ள தலை முடியுடன் கூடிய மோதிரத்தை இன்னுமொருவர், சரியாக உங்கள் உள்ளங்கையின் மேல் பிடித்து பார்க்க வேண்டும்.

குறிப்பு :- மெதுவாக முடி கட்டியுள்ள மோதிரத்தை தூக்க வேண்டும்.

அது நேராக ஆடும் பட்சத்தில் ஆண் குழந்தை, அது வட்டமாக சுழலும் பட்சத்தில் பெண் குழந்தை. நிச்சயமாக.

இதனை தொடர்ந்து செய்ய வேண்டும், ஒரு சந்தர்ப்பத்தில் அது அசையாது. அப்போது அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் என்று.

மீண்டும் சொல்லுகிறேன். கதையல்ல இது நிஜம். விளையாட்டல்ல! விபரீதமான விளையாட்டு!

இது தான் சொல்வதோ வாழ்க்கை உங்கள் கையில என்று!

1 comments:

durga said...

ஹாய் அருண்..........
இதெல்லாம் கூட செய்றீங்களா?