Sunday 15 March 2009

ஆனந்தத்தினால் கண்களில் கண்ணீர்! வாழ்த்துக்கள்.


இன்று காலை வேலைக்காக வந்து எமது வேலைகளை முடித்து விட்டு கணனியில் ஏனைய வேலைகளை செய்து கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தின் பின்னர் காலை நிகழ்ச்சிக்காக வைதேகி அக்கா வந்து என்னோடு பேசிக்கொண்டிருந்தார்.

சிறிது நேரம் பேசியவாறு FACEBOOK இல் உள்ள நண்பர்கள் மற்றும் பின்னூட்டங்களை பற்றி பேச தொடங்கி விட்டோம்!

அப்போது வைதேகி அக்கா என்னை பார்த்து அருண் என்னுடைய FACEBOOK கை திறந்து பார். அதில் ஒரு வீடியோ கிளிப் ஒன்று புதிதாக பதிந்துள்ளளேன் என கூறினார்.

அதை நான் பெரிதாக பொருட்படுத்தவில்லை. மீண்டும், அந்த வீடியோவை பார் என்று கூறியவாறே, அந்த வீடியோவை பார்த்து நேற்று நான் வீட்டில் தனியாக அழுது விட்டேன் என்றார்.

அதை கேட்ட எனக்கு ஒரு ஆசை வந்தது. சரி என்னதான் இருக்கு என பார்ப்போம்! என பார்த்தேன்.

அமிர்தா தொலைகாட்சியில் ஒலிபரப்பான ஒரு பாடல் போட்டி நிகழ்ச்சி!

13 வயதுடைய சிறுமியின் பாடல். நடுவர்களாக பின்னணி பாடகி சுபா மற்றும் பாடகர் விஜய் ஜேசுதாஸ். நிகழ்ச்சியின் பாடல் ஆரம்பித்ததிலிருந்து, கூற வார்த்தைகள் இல்லை அப்பப்பா!

எப்படி பாடல்! உண்மையிலேயே வாழ்க்கையில் நான் இப்படிப்பட்ட ஒரு குரலை கேட்டதே இல்லை.

எனக்கு அதன்பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்களிலிருந்த கண்ணீர். ஆனந்தம் அளவை மீறிவிட்டது.

அந்த பாடலை கேட்ட வேலையிலிருந்த இன்னமும் என் மனதில் அந்த சிறுமியில் குரல் தான் கேட்கிறது.

எனக்கு நேரில் சென்று வாழ்த்த முடியாததினால். நான் எனது பதிவின் மூலம் அந்த சிறுமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

வாழ்த்துக்கள்! நிச்சயம் நீங்கள் உயர்வீர்கள்.


http://www.youtube.com/watch?v=kOF003Qp2yY&eurl=http://www.facebook.com/home.php

0 comments: