Saturday 14 March 2009

உயிருடன் உயிர் பிரியுமா? நிச்சயமாக.


மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் உயிர் என்பது நிச்சயமில்லா ஒன்று.

முன்னைய காலத்தை நோக்கினால் நிச்சயம் நோய்களினால் அல்லது வயது சென்றே மனிதர்கள் உயிரிழந்தனர்.

ஆனால் தற்போது அந்த உயிரிற்கான மதிப்பு சற்றேனும் இல்லை என்பது உலகறிந்த உண்மை.

எதிரி தேவையில்லை என நினைக்கும் போதே எதிரி இல்லை இந்த காலத்தில்.

இப்படியாக உலகில் வாழுங்கள் நாங்கள் எமது உயிர் பிரிந்தால் எப்படி இருக்கும் என உணர்ந்திருக்க வேண்டும் அல்லவா?

ஒவ்வொரு நாளும் எமது உயிர் எம்மை விட்டு பிரிகின்றது. அதை அனைவரும் உணர்ந்திருக்க வேண்டும். நிச்சயம் நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

ஆனால் அது தமது உயிர் பிரிவது என நினைப்பதில்லை அந்த சந்திர்ப்பத்தில் வேறு எதாவது நினைத்துக் கொள்வது.

எப்படி உணர்வது என்று தானே நினைக்கிறீர்கள்.

நீங்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது, உங்களுடைய உயிர் உங்களை விட்டு பிரிந்து விடும்.

அவ்வாறு பிரியும் உயிர் உலகை ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் உங்கள் உடலுக்குள் ஊடுறுவது தான் உண்மை.

இதனை நான் உணர்ந்திருக்கிறேன். பல தடவைகள்.

சில சந்தர்ப்பங்களில் நாங்கள் நித்திரையில் இருக்கும் போது, நாம் விபத்துக்குள்ளாவது போல் உணர்வு ஏற்பட்டு தீடீரென திடுக்கிட்டு எழும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன.

அவ்வாறு திடுக்கிட்டு எழும் போது உடலில் ஒரு மாற்றம் தெரியும். உடலில் ஒரு வகையான வலி ஏற்பட்டும் அல்லவா!

அப்போது தான் உயிர் பிரிந்து மீண்டும் உங்கள் உடலை வந்து சேர்ந்த சந்தர்ப்பம்.

அது தான் உடலில் வலி ஏற்படுவது. சில சந்தர்ப்பங்களில் உடலின் சில பாகங்கள் இல்லாதது போல் இருக்கும் அல்லவா!

அது தான் எமது முன்னோர்கள் கூறுவார்கள், ஒருவன் நித்திரையில் இருக்கும் போது அவனுடைய உடலில் எதெனும் மாற்றங்களை செய்ய வேண்டாம் என.

அவ்வாறு மாற்றங்கள் செய்யும் பட்சத்தில் உடலை விட்டு சென்ற எமது உயிர், மீண்டும் எமது உடலை அண்மிக்கும் போது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தால் அது வேறு ஒருவரின் உடல் என நினைத்து எப்போதுமே எமது உடலை வந்து சேராது எமது உயிர்.

இப்படி தான் எமது உயிர் பிரிகின்றது ஒவ்வொரு நாளும் எம்மை விட்டு. இந்த பதிவினை வாசித்த பின்னர் இந்த உணர்வை அனுபவிக்காதவர்கள் இனி நிச்சயம் அனுபவிப்பீர்கள்.

0 comments: