Thursday 12 March 2009

ஜப்பானின் வீழ்ச்சிக்கு காரணம்!


1945 செப்டம்பர் 2, உலகையே யோசிக்க வைத்து அழ வைத்த ஒரு நாள்.

இது போன்ற ஒரு நாள் மீண்டும் வர கூடாதென ஒவ்வொருவரும் நினைக்கும் நாள் இது.

அன்றைய தினம் என்னவென்று தானே யோசிக்கிறீர்கள்!

2ஆவது உலக மகா யுத்தம்!

அமெரிக்காவினால் ஜப்பானில் அணுகுண்டு தாக்குதல் மேற்கொண்ட நாள் தான் அது!

எத்தனை வருடங்கள் சென்றாலும் மீண்டும் ஒருபோதும் மீண்டு வராத நாடு என்ற நினைத்து நாடு அது.

இரோசிமா நாகசாகி ஆகிய இடங்களில் இன்றும் பல பிரச்சினைகள் உள்ளமை யாரும் அறிந்த உண்மை.

அங்கு பிறக்கும் குழந்தை முதல் இறக்கும் முதியோர் வரை அனைவருக்குமே பிரச்சினை தான்.

எத்தனை வருடங்கள் சென்றாலும் முன்னேற்றம் அடையாது என நினைத்து நாடு இன்று உலகில் முன்னணி நாடுகளின் வரிசையில் இடம்பெற்று விட்டது.

இது அன்றைய காலத்தில் அங்கு வாழ்ந்த மனிதர்களில் தைரியம் மற்றும் தன் நம்பிக்கை என்றே கூற வேண்டும்.

உலக நாடுகள் உபயோகிக்கும் பெரும் பாலான வாகனங்கள் முதல் இலத்திரனியல் சாதனங்கள் வரை கூடுதலானோர் விரும்புவது ஜப்பானிய தயாரிப்பையே.

காரணம் 2ஆவது உலக மகா யுத்தத்தில் எந்தளவு பாதிக்கப்பட்டார்களோ! அந்த அளவு விரைவில் முன்னேறிய நாடு தயாரிக்கும் பொருளின் மீது நம்பிக்கை.

எமது நாடுகளில் சிறுவர்களை பாடசாலைக்கு அழைத்துச் சென்று விட்டாள். 'அ' 'ஆ' 'இ' 'ஈ' எழுதுவது எப்படி.

அதையும் மண்ணில் அல்லது அரிசியில் எழுதி கட்ட வேண்டும். இந்த நம்பிக்கை இன்றும் இருக்கின்றது.

இதை நான் குறை கூற வில்லை. எதாவது ஒன்று ஆரம்பிக்கும் போது ஆரம்பம் தேவை தான்!

நான் சொல்வது. உலக மாற்றத்திற்கு ஏற்ப எமது வழக்கத்தை சற்றேனும் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று தான்! (முழுமையாக இல்லை!) உங்களை மாற்றிக் கொள்ள வேண்டாம்.

ஜப்பானில் அப்படி இல்லயாம். முதலில் பாடசாலைக்குச் செல்லும் போது, கடிகாரம் ஒன்றை செய்து எப்படி. விளையாட்டு பொருட்களை செய்து எப்படி என்ற இவ்வாறான தொழிநுட்ப ரீதியான பாடத்தையே கற்றுக் கொடுக்கின்றனராம்!

இப்படி பாடத்திட்டத்தை கொண்டு வந்ததினால் இன்று உருவாகும் ஒவ்வொருவரும் தனது தொழிநுட்பத்தை வைத்து கொண்டு முன்னேறியுள்ளனர்.

ஆனால், இன்று உலக பொருளாதார நெருக்கடி.

இதில் மிக பாதிக்கப்பட்ட நாடு ஜப்பான். கடந்த ஜனவரி மாதம் கணக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பில் ஜப்பான் அறைவாசிக்கு மேல் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த கணக்கெடுப்பை மேற்கொண்ட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பின் படி ஜப்பானிய பொருளாதாரம் 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வீழ்ச்சியானது கடந்த 13 வருடங்களின் பின்னர் ஏற்பட்ட மிக பாரிய வீழ்ச்சி என ஜப்பானிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இவ்வாறு ஏற்பட்டுள்ள வீழ்ச்சியில் 66.1 வீதமான வீழ்ச்சி கார் ஏற்றுமதியிலும், 52.8 வீதமான வீழ்ச்சி இலத்திரனியல் பொருட்கள் ஏற்றுமதியிலும் ஏற்பட்டதென கருதப்படுகிறது.
ஜப்பான் நாட்டின் பொருட்களை ஆசியா, ஜரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் அமெரிக்கா உட்பட இன்னும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பாதிக்கப்பட்ட நாடு உலகின் முன்னணி நாடுகளுக்கு இவ்வளவு காலமும் நான் மேல் குறிப்பிட்டவற்றை ஏற்றுமதி செய்து வந்ததென்றால் யாராலும் உண்மை என்று கூற முடியாது!

இதற்கு காரணம் என்னவாக இருக்கமுடியும். என்று நான் ஒரு ஆராய்வை மேற்கொண்டேன். பழைய பத்தரிகைகள், இணையத்தளங்கள், நண்பர்கள் சகோதர்கள் உட்பட இன்னும் பல இடங்களில் ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவிற்கு வந்தேன்.

என்ன தெரியுமா?

சம்பாதிக்க ஒருவன் வீட்டில் இருந்தால், அழிக்க ஒருவன் நிச்சயம் அங்கு பிறந்திருப்பான் என பெரியவர்கள் கூறுவதை நாம் கேட்டிருக்கின்றோம்.

ஜப்பானிலும் அப்படியே! சம்பாதித்தவன் ஒருவன், அனுபவிப்பவன் ஒருவர், அழிப்பவன் மற்றையவன்!

2ஆவது உலக மகா யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இன்று முன்னணி நாடாக கொண்டு வந்த அந்த நாட்டின் முன்னோர்கள் உழைத்த அனைத்து சொத்துக்களையும், இப்போதுள்ள சந்ததியினர் செலவிடுகின்றனர்.

தற்போது உருவாகியுள்ள சந்ததியினர் உழைப்பதை விட செலவிடுவதில் மும்முரமாய் இருக்கின்றார்களாம்!

இதனாலேயே பொருளாதார வீழ்ச்சி ஜப்பானை அந்தளவு பாதித்துள்ளது.

மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றால் தற்போதைய சந்ததியினர் நினைத்தால் மாத்திரமே முடியும்.

பாதிக்கப்பட்ட ஒரு நாடு, கட்டியெழுப்ப எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் என்று எமக்கு உணர முடிகின்றது. அது அங்குள்ள தற்போதைய சந்ததியினருக்கும் உணர வேண்டும் அல்லவா!

0 comments: