Wednesday 11 March 2009

இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால சபை தலைவர் நாளை நியமனம்!


இலங்கை கிரிக்கெட்டின் இடைக்கால தலைவர் பதவிக்காக முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் D.S.D.சில்வா முன்மொழியப்பட்டுள்ளார்.

நாளைய தினம் நியமிக்கப்படவுள்ள இடைக்கால சபை தலைவர் பதவிக்காகவே இவரது பெயரை முன்மொழிந்துள்ளதாக விளையாட்டு துறை அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரனதுங்க தலைமையிலான இடைகால சபை கலைக்கப்பட்;டதை தொடர்ந்து புதி இடைக்கால சபை தேர்வு நாளை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இந்த இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கை கிரிக்கெட்டின் சகல பொறுப்பினையும் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இடைகால சபை தலைவர் பதவிக்காக முன்மொழியப்பட்டுள்ள முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் D.S.D. சில்வா, ஜனாதிபதியின் விளையாட்டு துறை தொடர்பான ஆலோசகராக கடமையாற்றியுள்ளார்.

0 comments: