Monday 23 February 2009

உலகில் தமிழனுக்கு இடம்!


தமிழர்கள் என்றாலே உலகில் தனி இடத்தை பிடித்து வருகின்றனர்.

தமிழ் மொழி அழியா மொழி என சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழர்களை நோக்கினால் பலர் உலக சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளதை நான் கூறவே தேவையில்லை. உங்களுக்கு தெரியும் அல்லவா!

அப்படியே தான் இன்று தமிழன் ஒருவர் சர்வதேச ரீதியில் விருது பெற்று தமிழுக்கான இடத்தை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இந்திய – தமிழக இசையமைப்பாளர் மற்றும் பாடகர்.

இவர் ஸ்லம் மாக் மில்லியனர் திரைப்படத்திற்கு இசையமைத்திற்காகவே ஒஸ்கார் விருதுகள் இரண்டை தனதாக்கி கொண்டுள்ளார்.

ஒஸ்கார் விருது என்பது உலக அளவிலான திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும்.

இதனை கூடுதலாக ஆங்கில திரைப்படங்களே பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் கடமையாற்றும் எவரும் இதுவரை ஒஸ்கார் விருதை பெறாத நிலையில் தமிழ் சினிமாவின் மூலம் உலகிற்கு அறிமுகமாகி சர்வதேச ரீதியில் தற்போது புகழ்பெற்றுள்ள ஏ.ஆர் ரகுமானே தமிழர்களில் முதன் முதலில் இந்த விருதை பெற்றுள்ளார்.

தமிழன் என்ற ரீதியில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் இவர் பெற்ற விருதை எண்ணி.

மேலும், ஒஸ்கார் விருது பெற்றமை குறித்த மேடையில் உரையாற்றிய ஏ.ஆர் ரகுமான். தமிழில் பேசியதை எண்ணி மகிழ்ச்சியடைவதோடு, ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

தழிழ் மொழியை வாழ வைப்பவர்களில் நீங்களும் அடங்குவதை இந்த சந்தர்ப்பத்தில் நான் உலகிற்கு கூறி கொள்ள விரும்புகிறேன்.

இதற்காகவே தமிழகம் அவருக்கு வேறு ஒரு விருதை வழங்க வேண்டும் என தமிழகத்திற்கு ஒரு வேண்டுக்கோளை நான் விடுக்கிறேன்!

0 comments: