Thursday 12 February 2009

மிக பெரிய விமான சாகச நிகழ்வு - இந்தியாவில்


ஆசியாவில் மிக பெரிய விமான சாகச நிகழ்வான ஏயார் இந்தியா 2009யை சர்வதேச பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஏயார் ஸ்பேஸ் நிறுவனம் ஆகியன ஒழுங்கு செய்துள்ளன.

இந்த நிகழ்வு நேற்று (11.02.2009) பெங்ளுரிலுள்ள இந்திய விமான தரிப்பிடமான ஹேலஹங்கவில் நடைபெறவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், 25 நாடுகளைச் சேர்ந்த 592 விமான நிறுவனங்கள் பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பங்குபற்றவுள்ள நிறுவனங்களில் 303 சர்வதேச விமான நிறுவனங்களும், 289 இந்திய விமான நிறுவனங்களும் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் ஆரம்ப நிகழ்வின் போது 66 இந்திய நிறுவனங்கள் பங்குபற்றியுள்ளதாகவும், தற்போது அது 289 நிறுவனங்களாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்வில் முதன் முறையாக சீனா பங்குபற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜேர்மனி, இஸ்ரேல் உட்பட இன்னும் பல நாடுகள் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments: