Tuesday 10 February 2009

அமெரிக்கா மீது தாக்குதல், அமெரிக்காவிற்கு பாதிப்பு.


உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக உலகிலுள்ள மிக பெரிய நிறுவனங்கள் ஊழியர்களை பாரியளவில் வெளியேற்றி வருகிறன.

இதன்படி, கடந்த சில மாதங்களில் மாத்திரம் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகான ஊழியர் வெளியேற்றம் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ஊழியர்களை வெளியேற்றும் நிறுவனங்களில் பிரபல்யமான நிறுவனங்கள் அதிகமாக காணப்படுகின்றன.

இதில் நேற்றைய தினம் பிரபல்ய கார் நிறுவனமான நிஷான் நிறுவனம் 20 ஆயிரம் ஊழியர் வெளியேற்றம் மேற்கொண்டுள்ளது.

இதில் கடந்த மாதத்தில் மாத்திரம் நிஷான் நிறுவனத்தில் கடமையாற்றிய 1200 பேர் வேலை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிறுவனம் கடந்த ஆண்டில் மாத்திரம் 265 பில்லியன் யென்கள் அதாவது 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிஷான் நிறுவனம் மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில் இவ்வருடம் மார்ச் மாதம் தொடக்கம் எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதம் வரை மேலும் 20 ஆயிரம் பேருக்கு உலகளாவிய ரீதியில் வேலையிழப்பு ஏற்படகூடிய சாத்திய கூறுகள் தோன்றியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக அனைத்து கார் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் டோயோட்டா, ஒண்டா, பீ.எம்.டபிள்யூ உட்பட இன்னும் பல பிரபல்ய கார் நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இது தவிர இலத்திரனியல் கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்களும் பொருளாதார பாதிப்பில் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 4ஆம் திகதி உலகின் பிரபல்ய இலத்திரனியல் பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான பனசோனிக் நிறுவனம் 15 ஆயிரம் ஊழியர் வெளியேற்றம் செய்துள்ளது.

இந்த நிறுவனம் உலகளாவிய ரீதியிலுள்ள 27 தொழிற்சாலைகளை மூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பனசோனிக் நிறுவனம் கடந்த ஆண்டில் மாத்திரம் 380 பில்லியன் யென்கள் அதவாது 4.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு இலத்திரனியல் பொருட்களை உற்பத்தி செய்யும் இன்னும் பல நிறுவனங்கள் ஊழியர் வெளியேற்றத்தை மேற்கொண்டுள்ளது.

அவ்வாறு ஊழியர்களை வெளியேற்றிய நிறுவனங்களாவன.
என்.ஈ.சீ நிறுவனம் 20000
சோனி நிறுவனம் 16000
இதாச்சி நிறுவனம் 7000

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்காடியினால் அமெரிக்கா இதுவரை 42 அமெரிக்க டொலர்கள் நட்டமடைந்துள்ளதாக அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உலகில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்த நாடு அமெரிக்காவே என குறிப்பிட்டு கூற முடியும்.

2001ஆம் ஆண்டு தீவிரவாத தாக்குதலுக்கு உள்ள அமெரிக்க, அந்த தாக்குதலில் ஏற்பட்ட நட்டத்தை வெளிபடுத்த விரும்பவில்லை.

அமெரிக்க இவ்வாறு செய்ய காரணம் தன் மீது உலக நாடுகள் வைத்திருக்கும் மரியாதையை குறைத்து கொள்ளவிரும்பாததே என குறிப்பிடலாம்.

அமெரிக்கா அன்று ஏற்பட்ட நட்டத்தை வெளிபடுத்தியிருந்தால், தற்போது ஊழியர் வெளியேற்றம் மேற்கொண்டுவரும் நிறுவனங்கள் அன்றே உஷாராகியிருக்கும்.

இவ்வளவு பெரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இன்று தேவைப்பட்டிருக்காது.

தன் மதிப்பை வைத்துக் கொள்ள நினைத்த அமெரிக்க, இன்று 9 வர்த்தக வங்கிகளை மூடி, பாரிய வீழ்ச்சியில் உள்ளது.

இன்று எவ்வாறு உலகிற்கு முகம் கொடுக்கும் அமெரிக்கா.

0 comments: