Tuesday 6 January 2009

காங்காருவை உண்ணும் படி உத்தரவு.


பூகோள வெப்பமாதலிலிருந்து உலகத்தைப் பாதுகாக்க கங்காருகளையும் ஒட்டகங்களையும் உண்ணும்படி அமெரிக்க விஞ்ஞானிகள் சிபாரிசு செய்துள்ளனர்.

இதன் காரணமாக கடந்த 600,000 வருடங்களாக கங்காரு இறைச்சியை உண்ணும் அவுஸ்திரேலியர்களுக்கு, இது ஒரு அதிஷ்டமென கூறமுடியும்.

குறித்த இறைச்சிகளை உண்பதற்கு விஞ்ஞான பூர்வமான அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் வழங்கியுள்ளதாக அமெரிக்கர்கள் கருதுகின்றனர்.

ஏனைய அவுஸ்திரேலிய பண்ணை விலங்குகளுடன் ஒப்பிடுகையில் கங்காருகள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மெதேன் வாயுவை வெளியிடுவதாக முன்னணி காலநிலை மாற்ற ஆலோசகர் பேராசிரியர் ரோஸ் கார் நோட், பூகோள வெப்பமாதல் தொடர்பான தனது பிரதான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒட்டகங்களானது பாலைவன சூழல், நீர் வளங்கள் மற்றும் அரிய தாவர வகைகள் என்பனவற்றுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சூழலை பாதுகாக்க அருகிபோகும் உயிரினத்தை பாதுகாக்காது அதனை இல்லாதொழிக்கின்றனர்.

மிகுதியாக ஒன்று கங்காரையாவது உயிருடன் வைத்திருக்கும் படி நான் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இது எனது வேண்டுக்கோள், காரணம் டைனோசரை தற்போதைய சந்ததியினர் பார்த்ததில்லை,

காங்காரை எதிர்வரும் சந்ததியினர் பார்க்க விடாது செய்து விடாதீர்கள்.

1 comments:

jeevithan said...

humans are the no 1 cause of global warming,so cn we eat human meat?

stupidity at its peak!!!!!!!


so they care about plants not the camels,what sort of research is that.i don't trust Americans anyway,