உலகிலுள்ள நாடுகளுக்கு 2009ஆம் ஆண்டு பிறந்து சில நாட்கள் கடந்த விட்டதை யாரும் மறுக்க முடியாது!
எனினும், இதுவரை சீனாவில் புதுவருடம் பிறக்கவில்லை என்பது ஒரு சிறப்பம்சமாகும்.
சீனாவின் 2009 என்கிற புதுவருட பிறப்பு எதிர்வரும் 26ஆம் திகதி பிறக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது சீனாவில் புது வருட பிறப்பை முன்னிட்டு நாடே மிக சுறுசுறுப்பாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் மிக முக்கிய விடயம் என்னவென்றால், ஒவ்வொரு புதுவருட பிறப்பிற்கும் ஒவ்வொரு மிருகங்களின் பெயர்களை வைப்பது அந்த நாட்டின் தொன்று தொட்ட வழக்கம்.
சீனாவின் சென்ற ஆண்டின் பெயர் என்ன தெரியுமா?
எலி.
இந்த ஆண்டின் பெயர் என்ன தெரியுமா?
எருமை
சீனா நாட்டில் எருமையின் உருவங்கள் அங்காங்கே வைக்கப்பட்டுள்ளதுடன், எருமையின் உருவங்கள் அங்கு விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எருமையின் உருவங்கள், படங்கள் உள்ளிட்ட இன்னும் பல வடிவில் எருமையை விளம்பரப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை. அந்த நாட்டில் புதுவருடத்தை முன்னிட்டு மக்கள் அவர்களுடைய ஊர்களுக்கு செல்ல, ரயில் நிலையங்களில் திரண்டுள்ளனர்.
குறிப்பாக நாளொன்றுக்கு 70 ஆயிரம் பேர் இடமாறும் ரயில் நிலையங்களில் தற்போது சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இடமாறுகின்றனர்.
சீனாவில் பிறக்கவிருக்கும் எருமை புதுவருடத்திற்கு எனது வாழ்த்துக்கள்.
பிறக்கவிருக்கும் ஆண்டு சிறந்தவொரு ஆண்டாக இருக்க வேண்டுமெனவும் வாழ்த்துகிறேன்.
Saturday 17 January 2009
சீனாவில் பிறக்கவிருக்கும் புதுவருடம்.
Posted by R.ARUN PRASADH at 12:30:00
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment