Tuesday 6 January 2009

சக்தி மற்றும் சிரச நிறுவனத்தின் மீது தாக்குதல்.


இலங்கையிலுள்ள தனியார் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவை நிலையமான மஹாராஜா நிறுவனம் இன்று அதிகாலை இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – பன்னிப்பிட்டிய – தெபானாமவில் அமைந்துள்ள மஹாராஜா நிறுவன தலைமையகத்தின் மீது இன்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

நிறுவனத்திற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயூததாரிகள் நிறுவனத்திலுள்ள ஊழியர்களை தாக்கிஇ பின்னர் நிறுவன கட்டடம் உட்பட அனைத்து இயந்திரங்களையூம் தாக்கியூள்ளதாக மஹாராஜா நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது கைக்குண்டுகளினாலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிலையத்திலுள்ள அனைத்து செயற்பாட்டு கருவிகளும் சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் குறித்த பிரதேசத்தில் புகை மண்டலமாக காணப்பட்டதாக நிறுவன ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்போது அங்கு கடமையாற்றி ஊழியர்கள் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவூம்இ அவர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவூம் தெரிவிக்கப்படுகிறது.

நிறுவனத்திலுள்ள செயற்பாட்டு கருவிகள்இ கட்டடம்இ டவர்கள் உட்பட இன்னும் பல முழுமையாக சோதமாக்கப்பட்டுள்ளதாக மஹாராஜா நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments: