Thursday 8 January 2009

90 சதவீதமானோர் தமது பார்வையை இழக்கின்றனர்.


கண்ணாடி அணிவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதன்படி இன்றைய உலகில் பிறந்த குழந்தை முதல் சாகும் கிழவன் வரை அனைவரமே கண்ணாடி அணியும் சூழ்நிலை தோன்றியுள்ளது.

இதற்கு காரணங்கள் பல இருக்கின்றன, உதாரணமாக கூறப் போனால்.

நீண்ட நேர கணணி உபயோகம்.
பரம்பரை நோய்
வயது
உணவு பொருட்களிலுள்ள இரசாயண பதார்த்தம்

என கூறிக் கொண்டே போகலாம்.

இந்த நிலை தற்போது குழந்தைகளுக்கு அதிகரித்து வருவதாக அவுஸ்திரேலிய வைத்தியரொருவரின் ஆய்விலிருந்த தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வின் படி ஜப்பான், கொரியா, சிங்கப்பூர் மற்றும் சீனா உட்பட ஆசிய நாடுகளில் பாடசாலை கல்வியை நிறைவு செய்தற்கு முன்னர் சுமார் 90 சதவீதமானோர் தமது பார்வையை இழக்கின்றனர்.

முழுமையாக இல்லை, சிறியளவிலேயே என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்போது இதற்கு ஒரு தீர்வை குறித்த ஆய்வை நடாத்திய அவுஸ்திரேலிய வைத்தியர் கண்டுபிடித்துள்ளார்.

என்ன தெரியுமா?

நாளொன்றுக்கு 2 அல்லது 3 மணிநேரம் வரை சூரிய வெளிச்சத்தில் நடந்தால் அவர்களது பார்வை வளர்ச்சியடையுமென ஆய்வின் மூலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு கிட்டப் பார்வையுள்ளவர்களுக்கு என தெரிவிக்கப்படுகிறது.

அப்படினா! தூரப் பார்வைக்கு எனது பிரச்சினை தூரப் பார்வை தானே!

0 comments: