Monday 22 December 2008

வேண்டாம் இப்படி ஒரு நாள் இனி எம்வாழ்வில்!


2004.12.26 உலகின் எமது சொந்தங்களை இழந்த நாள், எமது நண்பர்களை பிரிந்த நாள், எத்தணை ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க முடியாத நாள்!...............................

சுமத்திரா தீவில் ஏற்பட்ட ஆழிப்பேரலை (சுனாமி). 2006ஆம் ஆண்டு காலை அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த மிக கொடுரமான இயற்கையின் முகம்!.

ஆசிய மக்களின் வாழ்க்கையை, உள்ளத்தை, சிந்தனையை முழுமையாக இயற்கையின் பக்கம் திரும்ப வைத்த கடலின் செயல்.

கடலுக்கு ஒரு ஆசை, மனிதன் என்ன தான் பூமியில் செய்கின்றான் என பார்க்க?

வந்தது கடல் பூமிக்கு அள்ளி சென்றது எமது உறவுகளை, சென்ற எமது உறவுகள் திரும்பவில்லை வீட்டிற்கு.

இந்த ஆழிப்பேரலையினால் சுமார் 225000 பேரிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

பல்லாயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இருப்பிடங்களை இழந்தனர், உறவுகளை இழந்தனர், தமது வலிமையை இழந்தனர், தமது தொழிலை இழந்தனர்.

மொத்தத்தில் உயிரோடிருந்து தம்மையே இழந்தவர்கள் கூட இருக்கின்றனர் பூமியில்,
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலை, சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆழிப்பேரலையாக மாறி ஆசிய நாடுகளையே அழித்து சென்றது.

2004ன் யேமன் வந்தான்; ஆழிப்பேரலையாக, உயிர்களை எடுத்து சென்றான் சரமாறியாக.

இந்த நிலநடுக்கம் 9.2 ரிக்டர் அளவில் பதிவாகியது.

உலகில் இதுவரை ஏற்பட்ட மிக பெரிய நிலநடுக்கங்களில் 2ஆவது உயிர்காவும் நிலநடுக்கம் இதுவே.



பலியானோரின் நினைவுகள் இன்னமும் மனதை விட்டு நீங்கவில்லை, அதற்குள் 4 வருட நினைவு வந்துவிட்டது.

நேற்று ஏற்பட்டது போல இருக்கிறது. உறவுகளை பிறிந்து 4 வருடங்களா?

நினைத்து கூட பார்க்க முடியவில்லை,

மனிதனாக பிறக்கும் ஒவ்வொருவரும் இறப்பது உலக நியதி!
ஆனால் தமது உறவுகள் அனைவரும் இறப்பது கொடுமை!
அது தான் 2004.12.26ஆம் திகதி நடைபெற்றது!
இயற்கை ஏன் அப்படிப்பட்ட ஒரு கொடுமையை செய்தது!
எத்தனை விஞ்ஞானிகள், எத்தனை வைத்தியர்கள், எத்தனை திறமைகளை கொண்ட எத்தனை பேர்!
உலகிற்கு இது ஆபத்து மட்டுமல்ல!
இழப்பும் கூட!

எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சி ஒடுக்கப்பட்ட ஆண்டு 2004 நாள் 26, வேண்டாம் இப்படி ஒரு நாள் இனி எம்வாழ்வில்.

ஆழிப்பேரலையினால் உயிரிழந்த என் உறவுகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன் இறைவனை.......

0 comments: