Thursday 4 December 2008

தீவிரவாத செயல்கள் 2013ஆம் ஆண்டு வரை


உலகெங்கும் தீவிரவாதிகளினால் நடத்தப்பட்டுவரும் தாக்குதல்கள் 2013ஆம் ஆண்டு வரை நடத்த திட்டமிட்டு, தயாரித்து கைவசம் வைத்துள்ளதாக அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதல் கடந்த 5 வருடங்களாக அதிகரித்து வருகின்றதாகவும், ஆசிய நாடுகளில் இந்த நிலை மிக மோசமாக உள்ளதாகவும் அமெரிக்க புலனாய்வுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 27ஆம் திகதி இந்திய மும்பை நகர் தாக்குதலை கண்கானித்த அமெரிக்கா, தீவிரவாதம் தொடர்பாக தகவல் திரட்ட தொடங்கிது.

இதிலிருந்தே, 2013ஆம் ஆண்டு வரை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முடியும் என அமெரிக்க புலனாய்த்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

உலகொங்கும் உருவாகிவரும் தீவிரவாதிகள் எதிர்காலத்தில் ஆணு ஆயுதங்கள் மற்றும் வைரஸ்களை பரப்ப திட்டம் தீட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனை பாகிஸ்தானிய மற்றும் ஆப்கானிஸ்தானிய தீவிரவாதிகள் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பாக அமெரிக்க புலனாய்த்துறை விஷேட குழுவொன்றை நியமித்து, தீவிரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க தகவல் வெளியிட்டுள்ளது.

0 comments: