Wednesday 29 October 2008

மனதை வருத்திய பாகிஸ்தான்!


பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 5 அளவில் இடம்பெற்றதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் - பலோசித்தான் மாகாணத்தில் குவெட்டா நகரிலிருந்து வடகிழக்காக 70 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் பல்லாயிரகணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பிரதேசத்தில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து ஹெலிகொப்டர்களின் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக பாகிஸ்தானிய இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சலீம் நாவாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், பெருமளவிலான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதினால் இடிப்பாடுகளுக்குள் சிக்கி இன்னும் பலர் உயிரிழந்திருக்கலாமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 1935ஆம் ஆண்டு குவெட்டா நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததுடன், 2005ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 75 ஆயிரம் பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments: