Monday 27 October 2008

காதலிக்கும் பறவைகள்


மனிதர்களுக்கு அடுத்தப்படியாக காதலிக்கும் உயிரிணம் எது தெரியுமா? பறவை தான்!
பறவைகளின் காதல் என்பது உலகில் வாழும் உயிரிணங்களிலேயே சிறந்தது என தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், அந்த பறவைகளுக்கு தெரியாது, தான் காதலிக்கும் விடயம். அது தான் உண்மையான அன்பு!
முதலில் பறவைகளின் காதலைப் பற்றி நோக்குவோம். அதற்கு ஒரு சிறந்த காரணம் கூட இருக்கின்றது.

பறவைகள் முட்டை இட்டு, தனது இனத்தை பெருக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
அப்படி முட்டையிட்டு தனதினத்தை பெருக்க குறித்த பறவை அடைக்காப்பது இன்றியமையாதொன்றாகின்றது.

அடைக்காக்கும் பறவைகள் முழு நேரமும் அடைக்காக வேண்டும்.
முடியுமா?
அந்த பறவைக்கு நிச்சயம் உணவு தேவை, அதை எப்படி அந்த பறவைகள் தேடும்.
அதற்காக தான் பறவைகள் காதலிக்கின்றன.

இப்படி அடைக்காக்கும் பறவைக்கு, அதை காதலிக்கும் பறவை உதவியாக உள்ளது.
பெண் பறவை அடைக்காக்கும் போது, ஆண் பறவை இறை தேட சென்று விடும், அந்த நேரத்தில் பெண் பறவை அடைக்காக்கும், அடுத்தப்படியாக ஆண் பறவை அடைக்காக்கும் போது பெண் பறவை இறைத் தேட போகின்றதாம்.

இதை தான் பறவைகள் காதலிப்பதாக கூறுகின்றனர்.

0 comments: