Wednesday 29 October 2008

நான் முதலில் கண்ட விமான தாக்குதல். (....அனல் மின்சார நிலையத்தில்....)


28ஆம் திகதி இரவு 11 மணி, எனக்கு தூக்கம் கண்ணை சுற்றியது. பாயை விரித்து நித்திரைக்கு சென்றேன்.

இரவு 11.30 அளவில் திடீர் என துப்பாக்கி வேட்டு சத்தங்கள் கேட்டன.

எழுந்து பார்த்தேன் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது, அண்ணன் என்னிடம் புலிகள் தாக்குதல் நடத்துவதாக கூறினார்.

உடனே வீட்டு கதவை திறந்து பார்த்தோம். விமானம் ஒன்று விரைந்து சென்று குண்டுகளை எறிந்தது.

அதேவேளை, கொழும்பு துறைமுகத்திலிருந்து இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

இரவு, மின்சாரம் கூட இல்லை, வானில் பட்டாசு போடுவது போல, துப்பாக்கி ரவைகள் பாய்ந்தன.

மறுபக்கம் களனிதிஸ்ஸ அனல் மின்சார நிலையத்தின் மீது புலிகளின் விமானப் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர்.

அந்த மின்நிலையம் தீபற்றி ஏறிய தொடங்கியது. மின்நிலையம் அமைந்துள்ள பகுதியில் உள்ள வானம் ஒரே சிகப்பு நிறம், மறுபக்கம் பட்டாசு போடுவது போல துப்பாக்கி ரவைகள் பாய்கின்றன.
ஒரு 5 நிமிடங்கள் ஒரே சத்தம். என்ன செய்வது என எனக்கு தெரியவில்லை. கை, கால் நடுங்க தெடங்கியது. வீதியில் உள்ளவர்கள் ஓட தொடங்கினர்.

எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் பயந்து. சத்தம் கூட இல்லை.

அதேவேளை, எனக்கு முதலில், வெற்றி எப் எமின் விரிவாக்கல் பிரிவை சேர்ந்த ஜெயிசன் போன் செய்து அங்கே என்ன நடக்கிறது என்றார்.

நான் அதற்கு நடந்தவற்றை கூற, அவர் பயந்து, அதன் பிறகு எனக்கு 9 தடவை போன் செய்தார்.

முடியலா? என்ன செய்ய என்னுடன் வேலை செய்பவராயிற்று!

கடைசியாக ஜெயிசன் போன் செய்தது 1 மணி, எப்படி எனக்கு இருக்கும்.

அதன் பிறகு என்னுடன் வேலை செய்யும் அனைவரிடமும் தொடர்பு கொண்டு செய்;திகளை பறிமாற்றி கொண்டேன்.

மின்சாரம் கூட இல்லை, வியர்வை தாங்க முடியவில்லை, என்ன செய்ய துக்கம் கூட வரவில்லை. விளித்தே இருந்தேன்.

விடிந்ததும், எழுந்து குளித்து விட்டு வேலைக்கு வந்து விட்டேன். அன்று மாலை 7 வரை நான் வேலையில் இருந்தேன். மிக கஷ்டப்பட்டு தான் வேலை செய்தேன். முடியல........

4 comments:

தமிழ்பித்தன் said...

கஷ்டப் பட்டுத்தான் எழுதியுமிருக்கிறீர்கள் எனக்கும் முடியல ஒரு குண்டுக்கே இப்படியா எமது உறவுகள் தலையில் தினமும் குண்டே அப்ப அவர்கள் நிலை,,,,,,,,,,,,????????

Anonymous said...

thuppakki vettu satham kettu velleya vanthu parkum pothu
pulli vemaanam verainthu kondukal
pottatha

etho konsam ohvara theryalla

ஆட்காட்டி said...

நினைச்ச மாதிரி இல்லை.

Anonymous said...

colombo la erukere neegele eppadi payapatta jaffna la erukere ungelode uravugel evolovu padu padu nu yousichingela
current illayam veyarvayam ayyo ayyo