Saturday 25 October 2008

தமிழனின் கலக்கலில் உலகம் கலங்கியது!


ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து 24.10.2008ஆம் திகதி தமிழக முதல்வர் மு.கருணாநிதி தலைமையில் சென்னையில் நடத்தப்பட்ட மிக பிரமாண்டமான மனித சங்கிலி போராட்டத்திற்கு லட்சக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

சென்னையில் நடத்தப்பட்ட இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு கொட்டும் கடும் மழையிலும் தமிழர்கள் கலந்து கொண்டதை இட்டு ஈழத்தில் வாழும் மக்களின் சார்பில் இந்திய தமிழர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.

தமிழன் என்று செல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்று கூறிய வார்த்தைக்கு, நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திலிருந்து உலகிற்கு தமிழன் தலைநிமிர்ந்துள்ளவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர் படுகொலையை கண்டித்து இந்தியாவினால் நடத்தப்படும் போராட்டத்திற்கு, இன்று உலகமே கலங்கியுள்ளது.

உலகின் வயிற்றை 24ஆம் திகதி தமிழன் கலக்கியுள்ளான்.

நடைபெற்ற சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்ட கவிஞர். வைரமுத்து கூறியது என் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளது.

“ஈழ மக்கள் குண்டு மழையில் நனைகிறார்கள், நாம் நனையும் இந்த வானின் மழை பெரிதல்ல!” இது மிக சிறந்த வார்ததை.
தமிழனின் வீரம் தொடர எனது வாழ்த்துக்கள்..

0 comments: