Friday 24 October 2008

இலங்கையின் விடியல்


கடந்த சில வாரங்களாக இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக இந்திய தமிழக அரசியல் வாதிகள் கூடுதலாக கவனம் செலுத்தி வருகின்றனர்.

சென்னையில் கடந்த 14ஆம் திகதி தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் 21ஆம் திகதி மனித சங்கிலி போராட்டம் ஒன்றை நடத்த மற்றும் இலங்கை பிரச்சினைக்கு சரியான முடிவை இந்திய மத்திய அரசு பெற்று கொடு;க்காவிட்டால் அனைத்து தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவதான முடிவுகள் அன்று எடுக்கப்பட்டன.

எனினும், 21ஆம் திகதி நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டம் மழை காரணமாக இன்று 24.10.2008 நடைபெறுகிறது.

14ஆம் திகதியிலிருந்து 2 வாரங்கள் என்பது 28ஆம் திகதி ஆகும்.

நேற்று 23.10.2008 கைது செய்யப்பட்ட தொல். திருமாவளவன் கூறியதாவது:- 28ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எமது நடவடிக்கை தீவிரமாக இருக்கும் என்றார்.

இருப்பினும் இன்னும் 4 நாட்கள் மாத்திரமே 28ஆம் திகதிக்கு உள்ளது.

தமிழகத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி மிக பாரிய தமிழ் குண்டொன்று வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் இந்திய தமிழ் திரையுலகினர் பாரிய உணாவிரத போராட்டத்தை முதலாம் திகதி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

“தமிழர்களுக்கு குரல் கொடுப்பதை பார்க்க ஆசையாக தான் உள்ளது. இலங்கைக்கு இந்த பிரச்சினையிலிருந்து விடியல் கிடைக்குமா?”

0 comments: