Thursday 23 October 2008

மனிதனுக்கு பேய் பிடிப்பது பற்றிய ஆராய்ச்சி.


மனிதர்களுக்கு பேய் பிடிக்கிறது. ஏன் மனிதர்களுக்கு பேய் பிடிக்கிறது ஆராயப்பட்ட விடயங்கள்.

மனிதனின் ஆள் மனதில் தோன்று ஆசைகள் நிறைவேறாத பட்ஷத்தில், அதன் நினைவுகள் ஆள்மனதில் அடிக்கடி தோன்றி மறையும். இது காலச் செல்ல செல்ல அவன் என்ன நினைத்தானோ? அதுவாக அவன் மாறுகிறான். அதுவே பேய் பிடிப்பதென்று கூறப்படுகிறது. இது விஞ்ஞானத்தில் MULTIPLE PERSONALITY DESORDER என அழைக்கப்படுகின்ற ஒரு வகை மன நோய் என கூறலாம்.

உலகில் பேய் பிடிப்பது பெண்களுக்கு அதிகம். காரணம் என்ன?
ஆண் மனதில் தோன்றும் ஆசைகளை விட பெண்களின் மனதில் தோன்றும் ஆசைகள் அதிகம். அது நிறைவேறாத பட்ஷத்தில் அவர்களுக்கு பேய் பிடித்து விடுகிறது.

இவ்வாறு ஆள் மனதில் தோன்றும் ஆசைகள் நிறைவேறாத ஆத்திரத்தை அவர்கள் வெளிப்படுத்துவது ஆக்ரோஷமாக இருக்கின்றது.

இந்த ஆக்ரோஷத்தையே பேய் பிடித்து விட்டது என பாமர மக்கள் நம்புகின்றனர்.

இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களை பேய் பிடித்ததாக கூறி, இந்த பேயை விரட்ட மக்கள் பல உத்திகளை கையாளுகின்றனர்.
இவ்வாறு ஆக்ரோஷமாக நடப்பவர்களை பேய் விரட்டுவதாக கூறி சமய வழிகளை மக்கள் நாடுகின்றனர்.

சமயத்தின் பக்கத்திற்கு சென்று மிக மோஷமான உத்திகளையே கையாளுகின்றனர்.

உதாரணமாக:- சாட்டை அடி, தலையில் தேங்காய் உடைத்தல், மூடியை மரத்தில் கட்டி வைத்தல், கூறிய ஆயுதங்களில் உடலில் குத்துதல் என இன்னும் பல மோஷமான விதத்திலேயே இந்த நோயை குணப்படுத்த நினைக்கின்றனர் மக்கள்.

இது சாத்தியமாகுமா? மனிதனின் மனதில் தோன்றிய ஆசைகள் நிறைவேறும் வரை இந்த மன நோய் குணமடையமாட்டாது.

உலகில் பேய் என்று ஒன்று உள்ளதா? இதற்கு ஒரு ஆராய்ச்சி செய்ய நான் விரும்புகிறேன்.

எனது நண்பர்களின் மூலம் எனக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் கீழ் காணும் தகவல்களை நான் திரட்டியுள்ளேன்.

ஒரு மனிதனின் ஆள்மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறாது, அவர் உயிரிழந்தால். அவனின் ஆத்மா இந்த உலகத்தை விட்டு செல்லாதென கூறப்படுகின்றது.

பின்னர் குறித்த மனிதனின் ஆன் மனதில் என்ன ஆசைகள் காணப்பட்டது என கண்டறிந்து அதனை நிறைவேற்றி வைத்த பின்னரே குறித்த மனிதனின் ஆத்மா இந்த உலகத்தை விட்டு செல்லும் என்ற நம்பிக்கை இந்த உலகில் காணப்பட்டு வருகின்றது.

இது உண்மையா? இது தொடர்பான தகவல்களை எனக்கு அனுப்பி வைக்கவும்.

0 comments: